Latest Updates
-
வெள்ளை குழி பணியாரமும், கார சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 மே 2026: இன்று இந்த 5 ராசிக்காரங்க தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுதாம் -
மேஷ ராசியில் உருவாகும் மகாலட்சுமி யோகத்தால் பணமழையில் நனையப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
ராகு-கேதுவால் உருவாகும் கால சர்ப்ப யோகம்: மே 11 முதல் இந்த 4 ராசிக்காரர்கள் மிகவும் கவனமா இருக்கணும்! -
1 கப் சுண்டலும், 1 உருளைக்கிழங்கும் இருந்தா இந்த குருமாவை பண்ணுங்க - மட்டன் குருமா மாதிரியே இருக்கும் -
எவ்வளவு வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தள்ளுவண்டி ஸ்டைல் வெங்காய சட்னி ரெசிபி - ஒரு தடவை செஞ்சு பாருங்க, இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
கர்ப்பிணி என்றும் பாராமல் நடந்த கொடூரம்! வரதட்சணை கொடுமை வழக்கில் பதோஹி போலீஸின் அதிரடி நடவடிக்கை! -
இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் மற்றவர்களை விட அதிக கஷ்டப்படுவார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காரசாரமான.. ஆம்லெட் சாப்ஸ் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்..
அகங்காரம் போனால், மகிழ்ச்சி கிடைக்கும்!!!
ஒரு நாட்டின் அரசன் "நான் தான் பெரியவன்" என்ற அகங்காரத்தோடு இருப்பவன். ஒரு நாள் அந்த அரசன் வேட்டைக்கு காட்டுச் சென்றான். அப்போது அவன் தியானம் செய்து கொண்டிருந்த ஒரு துறவியைப் பார்த்தான். துறவி கண்ணை மூடி தியானம் செய்யும் போது அவரிடம் சென்று "நான் பல நாடுகளை வென்று என் நாட்டோடு இணைத்திருக்கிறேன். நான் வென்று வந்த செல்வத்தால் என் கஜானா நிரம்பி வழிகிறது. மேலும் அந்தபுரம் முழுவதும் நான் கவர்ந்து வந்த அழகிகள் இருக்கின்றனர். இருப்பினும் நான் சந்தோஷமாக இல்லை. எனக்கு எப்போது சந்தோஷம் கிடைக்கும்?" என்று கேட்டான்.
தியானம் செய்து கொண்டிருந்த துறவி, தியானம் கலைந்ததால் சற்று கோபமாக "நான் செத்தால் உனக்கு சந்தோஷம் கிடைக்கும்" என்று சொல்லிவிட்டு, மறுபடியும் தியானத்தில் ஆழ்ந்தார். அதைக் கேட்ட அரசன் "நான் எவ்வளவு பெரிய அரசன். என்னையே அவமானப்படுத்துகிறாயா?" என்று சொல்லி, துறவியை கொல்ல, தன் இடுப்பில் இருந்த கத்தியை உருவினான்.
அப்போது அந்த துறவி "அட மூடனே, நான் என்றால் என்னை சொல்லவில்லை, "நான்" என்ற அகங்காரம் செத்தால் தான் உனக்கு சந்தோஷம் கிடைக்கும்" என்று சொல்லி விளக்கினார்.
இக்கதையிலிருந்து என்ன தெரிகிறதென்றால், "தேங்காயின் கடுமையான ஓடு உடைந்தால் எப்படி சுவையான இளநீர் கிடைக்கிறதோ, அதேப் போல் நம்மிடம் இருக்கும் அகங்காரம் எனப்படும் ஈகோ உடைந்தால் சந்தோஷம் வெளிப்படும்" என்பது நன்கு புரிகிறது.



Click it and Unblock the Notifications