இறந்தவர்களின் புகைப்படத்தை இந்த இடத்தில் மாட்டி வைத்தால் வீட்டில் நிம்மதியே இருக்காதாம்..உடனே இடத்தை மாத்துங்க

நம் வாழ்க்கையில் மிகப்பெரிய துயரத்தை ஏற்படுத்துவது என்பது நமது பெற்றோர் மற்றும் நெருக்கமானவர்களின் மரணம்தான். இதுவரை நம் வாழ்வில் இருந்தவர்கள் இனி இல்லை என்பதே நமக்கு மிகப்பெரிய வலியைக் கொடுப்பதாகும். நமக்கு பிடித்தவர்களின் பிரிவிற்கு பிறகு நமக்கு இருக்கும் ஒரே ஆறுதல் அவர்களின் புகைப்படம்தான். இறந்தவர்களின் புகைப்படத்தை வீட்டில் மாட்டி வைப்பது என்பது நாம் பாரம்பரியங்களில் ஒன்றாகும்.

இந்து மரபில், இறந்த முன்னோர்களின் நினைவாக அவர்களின் புகைப்படங்களை வீட்டில் வைத்து வழிபடுவது என்பது பல நூற்றாண்டுகளாக இருக்கும் வழக்கம். நம் கலாச்சாரத்தில் முன்னோர்கள் மிகவும் போற்றத்தக்கவர்களாகவும், மரியாதைக்கும் உரியவர்களாகவும் கருதப்படுகிறார்கள். வாஸ்து சாஸ்திரத்தின்படி, அவர்களை மதிப்பது மட்டுமல்லாமல், அவர்களின் புகைப்படங்கள் வைக்கப்படும் திசையும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது.

Vastu Tips Where To Keep Dead Person Photos In House

சரியான திசையில் இறந்தவர்களின் புகைப்படங்களை வைப்பது வீட்டில் நேர்மறை ஆற்றலைப் பாதுகாத்து, முன்னோர்களின் ஆசீர்வாதங்களைப் பெற்றுத்தரும் என்று நம்பப்படுகிறது. அதேசமயம் தவறான திசையில் இறந்தவர்களின் புகைப்படங்களை வைப்பது வீட்டிற்குள் எதிர்மறை ஆற்றலையும், துரதிர்ஷ்டத்தையும் கொண்டு வரும் என்று நம்பப்படுகிறது. இந்த பதிவில் வாஸ்து சாஸ்திரத்தின் படி வீட்டில் எந்த இடத்தில் இறந்தவர்களின் புகைப்படத்தை வைக்க வேண்டுமென்று தெரிந்து கொள்ளலாம்.

எந்த திசையில் வைப்பது நல்லது?

வாஸ்து சாஸ்திரத்தின்படி, இறந்தவர்களின் புகைப்படங்களையும், முன்னோர்களின் புகைப்படங்களையும் வீட்டின் தென்மேற்குச் சுவரில் வைப்பது மிகவும் மங்களகரமானதாகவும் நேர்மறையானதாகவும் கருதப்படுகிறது. அந்த புகைப்படங்களைப் பார்ப்பவர் தெற்கு திசையை நோக்கியவாறு அவை மாட்டப்பட்டிருக்க வேண்டும். ஏனெனில் தெற்கு திசையானது எமதர்மனுடனும், பித்ரு லோகத்துடனும் தொடர்புடையது. இதனாலேயே முன்னோர்களின் படங்களை வைப்பதற்கு அந்தத் திசை பொருத்தமானதாகக் கருதப்படுகிறது.

எந்த இடத்தில வைக்க வேண்டும்?

முன்னோர்கள் மற்றும் இறந்தவர்களின் புகைப்படங்களை எப்போதும் வரவேற்பறையிலோ அல்லது பூஜை அறைக்கு வெளியே உள்ள ஒரு பிரத்யேக இடத்தில்தான் வைக்க வேண்டும். அதேசமயம் புகைப்படச் சட்டங்கள் சுத்தமாகவும் நல்ல நிலையிலும் இருக்க வேண்டும், கிழிந்த, மங்கிய அல்லது சேதமடைந்த படங்களைத் தவிர்க்கவும்.

புகைப்படங்களில் உள்ள முன்னோர்களின் முகபாவனைகள் அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க வேண்டும். இந்த புகைப்படங்களை படுக்கையறை, சமையலறை அல்லது குளியலறை சுவர்களில் மாட்ட வேண்டாம். முக்கியமாக அவற்றை மிக உயரத்திலேயோ அல்லது மிகத் தாழ்வாகவோ வைப்பதைத் தவிர்க்கவும். அவற்றை கண் மட்டத்தில் வைப்பதே சிறந்ததாகக் கருதப்படுகிறது.

எந்தெந்த திசைகளில் வைக்கக்கூடாது?

வாஸ்து சாஸ்திரத்தின்படி, இறந்தவர்களின் புகைப்படங்களை சில திசைகளில் வைக்கக்கூடாது, முன்னோர்களின் புகைப்படங்களை வடக்கு அல்லது வடகிழக்கு திசையில் வைப்பது மன அழுத்தம், குடும்பச் சண்டைகள் மற்றும் நிதிச் சிக்கல்களுக்கு வழிவகுக்கும். மேலும் தவறான இடத்தில் வைப்பது வீட்டிற்குள் எதிர்மறை ஆற்றலை ஈர்க்கும் என்றும் நம்பப்படுகிறது.

பூஜையறையில் வைக்கலாமா?

வீட்டிலுள்ள பூஜையறையில் முன்னோர்களின் புகைப்படங்களை வைப்பது பற்றி வாஸ்து சாஸ்திரம் அறிவுறுத்துகிறது. பூஜையறையில் இறந்தவர்களின் புகைப்படங்களை வைப்பது அசுபமானதாகக் கருதப்படுகிறது, ஏனெனில் அது தெய்வங்களுக்கு கோபத்தை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது. பாரம்பரியமாக, முன்னோர்கள் கடவுள்கள் மற்றும் தெய்வங்களுக்குக் கீழான நிலையில் வைக்கப்படுகிறார்கள். எனவே அவர்களின் புகைப்படங்களை கடவுளுக்கு இணையாக ஒருபோதும் பூஜை அறையில் வைத்திருக்கக் கூடாது.

Story first published: Wednesday, December 24, 2025, 17:58 [IST]
Desktop Bottom Promotion