Latest Updates
-
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...!
வாஸ்து படி கற்பூரத்தை வீட்டின் இந்த இடத்தில் எரித்தால் உங்க வீட்டின் பணக்கஷ்டம் நீங்கி பணமழை கொட்டுமாம்...!
Vastu Tips to Burning Camphor: கற்பூரம் ஒரு வலுவான நறுமணத்துடன் கூடிய தெய்வீகமான ஒளியை வெளிப்படுத்தக்கூடிய ஒரு படிகப் பொருளாகும். கற்பூரம் ஆசியா, குறிப்பாக இந்தியா, சுமத்ரா தீவு, இந்தோனேசியா மற்றும் போர்னியோவில் பெரும்பாலும் காணப்படும் கற்பூர மரத்தின் பட்டை மற்றும் மரத்தை காய்ச்சி காய்ச்சி உருவாக்கப்படுகிறது.
தற்போது கற்பூர மரத்தின் பட்டை மற்றும் மரத்தை டர்பெண்டைன் எண்ணெயில் காய்ச்சி கற்பூரம் தயாரிக்கப்படுகிறது. கற்பூரம் இல்லாமல் எந்த பூஜையும் முழுமையடையாது. இதன் ஒளி எதிர்மறை ஆற்றல்களைத் தடுக்கின்றன.

இந்து மக்களின் நம்பிக்கையின்படி, கற்பூரத்தைப் பயன்படுத்துவது தெய்வங்களை திருப்திப்படுத்துகிறது. கற்பூரத்தை எரிப்பது ஒளியையும் நறுமணத்தையும் தருகிறது, இவை இரண்டும் ஆன்மீகத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. கற்பூரத்தை எரிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்ன மற்றும் அதனை எப்படி எரிக்க வேண்டுமென்று இந்த பதிவில் பார்க்கலாம்.
எதிர்மறை ஆற்றலை விரட்டுகிறது
வாஸ்து படி, கற்பூரம் எதிர்மறை ஆற்றலை நீக்குகிறது மற்றும் குணப்படுத்தும் ஆற்றலுடன் சுற்றுப்புறத்தை சுத்தப்படுத்துகிறது. இது வீட்டில் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் அமைதியைக் கொண்டுவருகிறது.
வீட்டில் கற்பூரத்தைப் பயன்படுத்த பல்வேறு வழிகள் உள்ளன. ஆரத்தியின் போது கற்பூரத்தை எரிப்பது வீட்டில் கற்பூரத்தைப் பயன்படுத்துவதற்கான எளிதான வழியாகும். கற்பூரத்தின் மென்மையான நறுமணம் காற்றைச் சுத்தப்படுத்தி, வீட்டை அமைதியாகவும், நிம்மதியாகவும் மாற்றுகிறது.
இந்த நறுமணம் ஒரு குணப்படுத்தும் விளைவைக் கொண்டிருக்கிறது மற்றும் மனநிலையை மேம்படுத்துகிறது. நீங்கள் முன்பு வேறொருவர் குடியிருந்த வீட்டிற்கு மாறியிருந்தால், முதலில் கற்பூரத்தை எரிக்க வாஸ்து அறிவுறுத்தப்படுகிறது.
உறவுகளை மேம்படுத்துகிறது
வாஸ்து படி, வீட்டில் கற்பூரத்தை வைத்திருப்பது குடும்ப உறுப்பினர்களிடையே உறவுகளை மேம்படுத்தும். தவறான புரிதல்கள் மற்றும் தம்பதிகளிடையேயான வாக்குவாதங்களை பாதிக்கலாம். வீட்டில் உள்ள கற்பூரம் மனதை தெளிவுபடுத்துகிறது, மனநிலையை உயர்த்துகிறது மற்றும் ஒருவரை புத்துணர்ச்சியடையச் செய்யும், எனவே மோதல்கள் குறைவாக இருக்கும்.
தாம்பத்தியத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டால், தினமும் உங்கள் படுக்கையறையில் வெள்ளி அல்லது பித்தளை கிண்ணத்தில் கற்பூரம் ஏற்றி வைக்கவும். மாற்றாக, நீங்கள் அறையின் மூலையில் இரண்டு கற்பூரத்தை வைக்கலாம், அது சுருங்கிவிட்டால் அதை மாற்றவும். இது தம்பதிகளுக்கிடையே இணக்கத்தை ஏற்படுத்துகிறது.
அதிர்ஷ்டம் மற்றும் செழிப்பை ஈர்க்கிறது
வீட்டின் தென்கிழக்கில் மாலையில் கற்பூரக் கட்டிகளை எரிப்பது செழிப்பை ஈர்க்கும். ஜோதிட சாஸ்திரத்தின் படி கிரக நிலைகள் சாதகமில்லாமல் இருப்பது உங்கள் வாழ்க்கையில் அதிர்ஷ்டத்தை பாதிக்கும் என்று கூறுகிறது. நெய்யுடன் கற்பூரத்தை எரிப்பது இந்த தோஷங்களை சமநிலைப்படுத்த உதவுகிறது.
வீட்டில் பணப் பிரச்சனைகள் இருந்தால், இரண்டு கிராம்புகளை கற்பூரத்துடன் தொடர்ந்து எரித்து, அதை வீடு முழுவதும் சுழற்றி வர தடைகள் நீங்கும். குறிப்பாக தீபாவளி நாளில் கற்பூரத்தை எரிப்பதால் எதிர்மறை மற்றும் தீய சக்திகள் நீங்கும். இதன்மூலம் உங்கள் வீடு எதிர்மறை ஆற்றல்களிலிருந்து விடுபடுவதால், நீங்கள் செல்வம், நல்ல ஆரோக்கியம் மற்றும் வெற்றியைப் பெற வாய்ப்புள்ளது.
வாஸ்து தோஷத்தை நீக்கும்
வாஸ்து விதிகளின்படி உங்கள் வீட்டை வடிவமைக்கவில்லை என்றால், அந்த வீட்டில் குடியிருப்போர் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். வாஸ்து பொருந்தாத இடங்களில் கற்பூரத்தைப் வைப்பதால் வாஸ்து தோஷம் நீங்கும்.
சுற்றுச்சூழலைத் தொந்தரவு செய்யக்கூடிய கண்ணுக்குத் தெரியாத, எதிர்மறை ஆற்றலைத் தடுக்க கற்பூர கட்டிகள் பரிந்துரைக்கப்படுகின்றன. குளியலறை அல்லது பிரதான கதவு வாஸ்து விதிகளின் படி வடிவமைக்கப்படவில்லை என்றால், அனைத்து கெட்ட சக்திகளையும் உறிஞ்சுவதற்கு கற்பூர படிகங்களை வைக்கவும்.



Click it and Unblock the Notifications












