வாஸ்து படி உங்க பூஜையறைக்கு அருகில் இந்த பொருட்கள் இருந்தால் அது தீராத பணக்கஷ்டத்தை ஏற்படுத்துமாம்...!

Vastu Tips for Puja Room: ஒவ்வொரு வீட்டிலும் அது சிறியதாக இருந்தாலும் பெரியதாக இருந்தாலும் வழிபாட்டிற்கு என்று ஒரு இடம் இருக்க வேண்டும். வீடு பெரியதாக இருந்தால், வழிபாடு செய்வதற்கும், சிலை வைப்பதற்கும் இடம் எளிதில் கிடைக்கும், ஆனால் வீடு சிறியதாக இருந்தால், சிலைகளை வணங்குவதற்கு சிறிது இடம் ஒதுக்கப்படுகிறது.

பூஜை அறைக்கு நாம் எந்த இடத்தை நிர்ணயித்தாலும், நாம் கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் உள்ளன. பூஜை அறை மிகவும் சக்திவாய்ந்த இடமாகும், ஏனெனில் இது நேர்மறை அதிர்வுகளை அளிக்கிறது மற்றும் நேர்மறை ஆற்றலின் நிலையான ஆதாரமாக உள்ளது.

Vastu Tips: Things You Should Never Keep in Puja Room in Tamil

பூஜையறை மிகவும் புனிதமான இடமாக இருப்பதால் அந்த இடத்தில் சில பொருட்களை வைக்கக்கூடாது. அவ்வாறு வைப்பது உங்கள் வீட்டில் துரதிர்ஷ்டத்தையும், வாஸ்து தோஷத்தையும் ஏற்படுத்துமாம். இந்த பதிவில் பூஜையறையில் வைக்கக்கூடாத பொருட்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.

காலணிகள்
இது அடிப்படை விதிகளில் ஒன்றாகும், பூஜை அறைக்கு அருகில் பாதணிகளை ஒருபோதும் வைக்கக்கூடாது. உங்களுக்கு இட நெருக்கடி இருந்தாலும், இந்த புனித இடத்திற்கு அருகில் ஷூ ரேக் அல்லது காலணிகளை வைக்கக்கூடாது. உங்கள் படுக்கையறையில் காலணியை வைக்க விரும்புவீர்களா? அதேபோல்தான் பூஜையறைக்கு அருகிலும் செருப்பை வைக்கக்கூடாது.

தோல் பைகள்
பூஜையறையில் எந்தவொரு தூய்மையில்லாத பொருளை வைக்கக்கூடாது என்று இந்து புராணங்கள் கூறுகிறது, மேலும் தோல் பைகள்விலங்குகளின் தோலால் ஆனது என்பதால், உங்கள் பூஜை அறையில் தோலால் செய்யப்பட்ட எதையும் பயன்படுத்துவது பாவச்செயலாகும். புனிதமான பூஜையறைக்கு அருகில் தோலால் செய்யப்பட்ட பைகள் மற்றும் பிற பொருட்களை வைத்திருப்பதையும் தவிர்க்க வேண்டும்.

சில சிலைகள்
இந்து மதத்தின் படி, பல்வேறு கடவுள்களுக்கு பிரார்த்தனை செய்ய கோயில்கள் கட்டப்பட்டுள்ளன, ஆனால் ஒருவரின் வீட்டில் பூஜை அறை இருந்தால், அங்கு கடைபிடிக்க வேண்டிய சில விதிமுறைகள் உள்ளன. வீட்டில் உள்ள பூஜையறையில் சிவலிங்கத்தை நிறுவ விரும்பினால், அது கட்டை விரலை விட பெரிதாக இருக்கக்கூடாது என்று புராணங்கள் கூறுகிறது.

வாடிய பூக்கள்
கடவுள்களுக்கு எப்போதும் புதிய மற்றும் ப்ரெஷான மலர்களையே வைத்து வழிபட வேண்டும். தற்போதைய அவசரமான வாழ்க்கையில் புதிய மலர்களை வாங்கி கடவுளை வழிபடுவது என்பது மிகவும் கடினமானதாகி விட்டது. எனவே பூக்களை பூஜைக்காக முன்கூட்டியே வாங்கி அடுத்த நாள் கடவுளுக்கு சமர்ப்பிக்கிறோம். இது தவிர்க்கப்பட வேண்டும். பழமையான பூக்களை கடவுளுக்கு வைத்து வழிபடுவது எதிர்மறை ஆற்றலை மட்டுமே ஈர்க்கும் மற்றும் கடவுளின் இருப்பிடத்தின் புனிதத்தை கெடுக்கும்.

இறந்தவர்களின் புகைப்படங்கள்
நம்மில் பலர் இறந்த முன்னோர்களின் புகைப்படங்களை பூஜை அறையில், கடவுள்களின் புகைப்படங்கள் அல்லது சிலைகளுக்கு அருகில் வைக்க விரும்புகிறோம். வாஸ்து சாஸ்திரப்படி இதை அவசியம் தவிர்க்க வேண்டும். இறந்தவர்களுக்கு பிரார்த்தனை செய்து அவர்களின் ஆன்மா சாந்தியடைய விரும்பினால் அதனை பூஜையறையில் வைக்கக்கூடாது. அவர்களின் படங்களை பூஜை அறையில் வைப்பது துரதிர்ஷ்டத்தைத் தருவதோடு உங்கள் குடும்பத்தின் அமைதியையும் செழிப்பையும் இழக்க நேரிடும்.

உடைந்த சிலைகள்
இது அவசியம் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றாகும். பூஜையறையில் உடைந்த அல்லது துண்டாக்கப்பட்ட சிலையை வைக்கக் கூடாது. அத்தகைய சிலைகளை உடனடியாக மாற்ற வேண்டும்.

Story first published: Friday, June 30, 2023, 16:15 [IST]
Desktop Bottom Promotion