Latest Updates
-
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்.. -
உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களுக்கு செல்வம் இரட்டிப்பாகும்..
சமையலறை மற்றும் படுக்கையறையில் இந்த தவறுகளை செய்யாதீங்க.. இல்ல பண நெருக்கடியை சந்திப்பீங்க..
Vastu Tips In Tamil: வாஸ்து சாஸ்திரத்தில் திசைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. ஒருவர் குடியிருக்கும் வீடு சரியான வாஸ்து விதிகளுடன் கட்டப்பட்டால், அந்த வீட்டில் நேர்மறை ஆற்றல் நிறைந்திருக்கும்.
நேர்மறை ஆற்றல் நிறைந்துள்ள வீட்டில் உள்ளோர் தங்கள் வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். அதுவே எதிர்மறை ஆற்றல் நிறைந்திருக்கும் வீட்டில் இருந்தால், அவர் தங்கள் வாழ்வில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

எனவே நீங்கள் வரவர அதிக பண பிரச்சனைகளை சந்தித்து வந்தால், அதற்கு உங்கள் வீட்டில் நீங்கள் செய்யும் தவறுகள் காரணமாக இருக்கலாம். குறிப்பாக சமையலறை மற்றும் படுக்கையறையில் செய்யும் சில தவறுகள் நிதி நெருக்கடியை உண்டாக்கும். இப்போது வாஸ்துப்படி படுக்கை அறை மற்றும் சமையலறையில் எந்த மாதிரியான தவறுகளை செய்யக்கூடாது என்பதைக் காண்போம்.
சமையலறையில் செய்யக்கூடாதவைகள்
* வாஸ்துப்படி சமையலறையானது வீட்டின் தென்கிழக்கு திசையில் இருக்க வேண்டும். மேலும் சமைக்கும் நபர் கிழக்கு திசையை நோக்கியவாறு இருக்க வேண்டும். மேலும் சமையலறையில் எப்போதும் உணவுகளை உண்ணக்கூடாது.
* சமையலறையில் பயன்படுத்தும் கனமான பொருட்களை எப்போதும் சமையலறையின் தென்மேற்கு சுவற்றில் தான் வைக்க வேண்டும்.
* சமையலறையில் உள்ள பாத்திரம் கழுவும் தொட்டியில் அழுக்கு பாத்திரங்களை நிரப்பி வைக்கக்கூடாது. இப்படி அழுக்கு பாத்திரங்களை நிரப்பி வைத்தால், அன்னப்பூரணி தேவி கோபம் கொண்டு, வீட்டில் பண பிரச்சனைகளை மட்டுமின்றி, உணவுப் பற்றாக்குறையையும் சந்திக்க வைப்பார். எனவே இந்நிலை வரக்கூடாதெனில் சமையலறை சின்க்கை எப்போதும் சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்.
* முக்கியமாக வீட்டில் உள்ள சமையலறையானது பாத்ரூம்மிற்கு எதிரில் இருக்கக்கூடாது. அப்படி இருந்தால், அது வீட்டில் வாஸ்து தோஷத்தை உண்டாக்குவதோடு, பண இழப்புக்களையும் உண்டாக்கும்.
* சமையலறையின் நிறமானது மஞ்சள் அல்லது வெள்ளை நிறத்தில் இருக்க வேண்டும். அதாவது வெளிரிய நிற பெயிண்ட்டை தான் பயன்படுத்த வேண்டும். இப்படி பயன்படுத்தும் போது வீட்டில் பண பிரச்சனைகளை சந்திக்க வேண்டிய அவசியம் இருக்காது.
படுக்கை அறையில் இந்த தவறுகளை செய்யாதீர்கள்
* நிறைய பேர் தங்கள் படுக்கை அறையில் சாப்பிட விரும்புவார்கள். ஆனால் இப்படி படுக்கையில் அமர்ந்து சாப்பிடுவது நல்லதல்ல. வாஸ்துப்படி, படுக்கையில் அமர்ந்து சாப்பிடுவது லட்சுமி தேவியை அதிருப்தி அடையச் செய்யும். இதன் விளைவாக மிகுந்த வறுமையை சந்திக்க நேரிடும்.
* படுக்கையில் உணவுகளை உண்பதைத் தவிர, படுக்கையில் அமர்ந்து காபி, டீ, ஜூஸ் குடித்துவிட்டு, அதன் டம்ளரை அப்படியே வைத்துவிடுவார்கள். இப்படி வைப்பதை அறவே தவிர்க்க வேண்டும். ஏனெனில் இது வீட்டில் எதிர்மறை ஆற்றலை பரப்பி, பலவிதமான பிரச்சனைகளை சந்திக்க வைக்கும்.
* முக்கியமாக வாஸ்துப்படி தலையணைக்கு அடியில் எதையும் வைத்து தூங்கக்கூடாது. அப்படி தூங்கினால், அது ஒருவரது முன்னேற்றத்தைத் தடுக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications