Latest Updates
-
தஞ்சாவூர் கல்யாண சாம்பார் ரெசிபி... இந்த மாதிரி சாம்பார் வைச்சு பாருங்க... வீட்ல எல்லாரும் ஊத்தி குடிப்பாங்க.. -
'சீனாவின் நோஸ்ட்ரடாமஸ்' கணிப்பின் படி அமெரிக்க-ஈரான் போரில் ஜெயிக்கப் போவது யார்? போர் இப்படித்தான் முடியுமாம் -
கவலையற்ற ஆன்மாவாக எப்போதும் மகிழ்ச்சியாக வாழ பிறந்த 4 ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
4 முட்டை இருந்தா இந்த முகலாய முட்டை குருமாவை செஞ்சு பாருங்க... பைவ் ஸ்டார் ஹோட்டலில் சாப்பிட மாதிரி இருக்கும்! -
சனிப்பெயர்ச்சி 2026: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், எந்த ராசிக்கு ஆபத்தாகவும் இருக்கப்போகுது தெரியுமா? -
4 வெங்காயம் இருந்தா.. இட்லிக்கு இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப மோசமான நாளாக இருக்குமாம்...! -
கேதுவின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம்... உங்க ராசி என்ன? -
ஹோட்டல் ஸ்டைல் ராயல் தேங்காய் சட்னி ரெசிபி... இந்த பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க... செமையா இருக்கும்...! -
புடலங்காய் வாங்குனா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க...எல்லாத்துக்கும் செம சைடிஷா இருக்கும்!
வீட்டில் செல்வம் பெருக.. கற்பூரத்துடன் எத்தனை கிராம்பை போட்டு எரிக்கணும்? எப்ப எரிக்கணும்?
Vastu Tips In Tamil: யாருக்கு தான் செல்வத்தின் மீது ஆசை இருக்காது. நிச்சயம் ஒவ்வொருவருமே தங்கள் வீடுகளில் செல்வம் பெருக வேண்டுமென்றே விரும்புவோம். அதற்காக வீட்டில் செல்வம் பெருகுவதற்கான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் செய்வோம்.
வீட்டில் பணம் அதிகம் சேர வேண்டுமானால், வீட்டில் நேர்மறை ஆற்றல் அதிகம் நிறைந்திருக்க வேண்டும் மற்றும் லட்சுமி தேவியின் அருளும் கிடைக்க வேண்டும். வாஸ்து சாஸ்திரத்தில், வீட்டில் செல்வம் அதிகரிப்பதற்கும், லட்சுமி தேவியின் அருளைப் பெறவும் பல்வேறு நடவடிக்கைகள் கூறப்பட்டுள்ளன.

அதில் ஒன்று தான் கற்பூரம் மற்றும் கிராம்பை ஒன்றாக எரிப்பது. இவ்விரண்டு பொருட்களுமே நல்ல மணத்தைக் கொண்டவை. நல்ல மணம் கொண்ட பொருட்கள் லட்சுமி தேவிக்கு பிரியமானவையாகும்.
இந்த இரண்டு பொருட்களையும் வீட்டில் எரிக்கும் போது பல்வேறு அதிசயங்கள் வீட்டினுள் நிகழும் என்பது தெரியுமா? கீழே கற்பூரத்தையும், கிராம்பையும் ஒன்றாக வீட்டில் எரிக்கும் போது என்னென்ன நன்மைகள் கிடைக்கும் மற்றும் எத்தனை கற்பூரம் மற்றும் கிராம்பை வைத்து எரித்தால் வீட்டில் செல்வம் பெருகும் என்பன போன்ற கேள்விகளுக்கான விடைகளைக் காண்போம்.
கற்பூரம் மற்றும் கிராம்பை எரிப்பதால் வீட்டில் நிகழும் அதிசயங்கள்
* கற்பூரத்துடன் கிராம்பை சேர்த்து எரிக்கும் போது, வீடு செல்வ செழிப்போடு இருக்கும். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும் அல்லது தொழிலில் நஷ்டத்தை சந்தித்தால், நல்ல லாபம் கிடைக்கத் தொடங்கும். பணம் சம்பாதிக்க முடியாமல் சிரமப்படும் போது, இம்மாதிரி செய்தால், பணம் சம்பாதிப்பதற்கான நல்ல வழி கிடைக்கும்.
* வீட்டில் கற்பூரத்துடன் கிராம்பை சேர்த்து எரிக்கும் போது, அந்த வீட்டில் உள்ளோர் மன அழுத்தம், பதட்டம், மன இறுக்கம் போன்றவற்றில் இருந்து விடுபடுவர் மற்றும் அனைத்து காரியங்களிலும் கவனம் செலுத்தி சிறப்பாக செய்து முடிக்க முடியும்.
* கற்பூரத்துடன் கிராம்பை சேர்த்து இரவு நேரத்தில் எரிக்கும் போது இன்னும் ஏராளமான பலன்கள் கிடைக்கும். பொதுவாக இரவு நேரத்தில் எதிர்மறை ஆற்றல் மற்றும் கெட்ட சக்திகளின் ஓட்டம் அதிகமாக இருக்கும். எனவே இரவு நேரத்தில் இவற்றை எரிக்கும் போது வீட்டில் நேர்மறை ஆற்றல் நிரம்பி, எதிர்மறை ஆற்றல் வெளியேற்றப்படும்.
* கிராம்பை கற்பூரத்துடன் சேரத்து இரவு தூங்குவதற்கு முன் எரித்தால், வீட்டில் செல்வம் அதிகம் சேர்வதோடு, செய்யும் காரியங்களில் உள்ள தடைகள் நீங்கி, சரியான நேரத்தில் வேலைகளை வெற்றிகரமாக முடிக்க முடியும்.
* முக்கியமாக கற்பூரத்துடன் கிராம்பை எரிக்கும் போது வீட்டில் அமைதியும், மகிழ்ச்சியும் நீடித்து, குடும்ப உறுப்பினர்களிடையே அன்பும், பாசமும் அதிகரிக்கும்.
கிராம்பு மற்றும் கற்பூரத்தை எப்படி எரிக்க வேண்டும்?
வீட்டில் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு ஏற்ப கிராம்பு மற்றும் கற்பூரத்தை எரிக்க வேண்டும். அவை:
* பண பிரச்சனை நீங்க, ஒரு சில்வர் கிண்ணத்தில் கற்பூரம் மற்றும் கிராம்பை வைத்து இரவு தூங்கும் முன் எரிக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் நிதி நிலை வலுபெறும் மற்றும் வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றலின் தாக்கம் குறையும்.
* திருமண வாழ்வில் பிரச்சனைகள் அதிகம் உள்ளதா? அப்படினால் திருமண வாழ்க்கை இனிமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்க 6 கற்பூரத்துடன், 36 கிராம்பை வைத்து எரிக்க வேண்டும்.
* வீட்டில் உள்ள அதிகப்படியான எதிர்மறை ஆற்றலை வெளியேற்ற, தினமும் காலையில் கற்பூரத்துடன் கிராம்பை வைத்து எரிக்க வேண்டும்.
* வீட்டில் செல்வம் அதிகரிக்க, தினமும் வீட்டு வாசலில் 2 கற்பூரத்துடன் 1 துண்டு கிராம்பை வைத்து எரிக்க வேண்டும். ஏனெனில் வீட்டு வாசல் வழியாகத் தான் நேர்மறை ஆற்றல் நுழைகிறது மற்றும் லட்சுமி தேவியும் நுழைகிறார்.
எத்தனை கற்பூரம் மற்றும் கிராம்பை எரிக்க வேண்டும்?
* செல்வம் பெருக வேண்டும் என்றால், 1 துண்டு கற்பூரத்துடன், 2 துண்டு கிராம்பை வைத்து ஒன்றாக எரிக்க வேண்டும்.
* உறவுகளில் உள்ள பிரச்சனை அல்லது குடும்ப பிரச்சனை குறைய வேண்டுமானால், 6 துண்டு கற்பூரத்துடன், 36 துண்டு கிராம்பை வைத்து ஒன்றாக எரிக்க வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications











