Latest Updates
-
பாபா வங்கா கணிப்பு படி 2026 முதல் 2030 வரை உலகில் என்னென்ன மோசமான சம்பவங்கள் நடக்கப்போகுது தெரியுமா? -
செவ்வாயால் உருவாகும் சக்திவாய்ந்த ருச்சக யோகம்: மே மாதம் இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டபோகுது -
2 வெள்ளரிக்காயும், 1 கப் ரவையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை செய்யுங்க.. வேற லெவல்-ல இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் உச்சத்தை தொடப்போறாங்களாம் -
கேதுவின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் அடுத்த 8 மாதம் இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. -
வாஸ்துப்படி, ஃப்ரிட்ஜ்ஜின் மேல் இந்த பொருட்களை ஒருபோதும் வெக்காதீங்க.. இல்ல பிரச்சனை அதிகரிக்கும்.. -
Malai Ice Cream: கொளுத்துற வெயிலுக்கு வெறும் 4 பொருளை வெச்சு குளுகுளு-ன்னு இப்படி ஐஸ்க்ரீம் செய்யுங்க.. -
வெயிலால் உங்க கை கருப்பா மாறுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
குரு பகவானின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்! -
1 கப் தயிரும், 1 குடைமிளகாயும் இருந்தா.. மதியம் இப்படி குழம்பு வையுங்க.. சாதத்துக்கு அள்ளும்..
இந்த பறவையின் இறகை வீட்டின் 'இந்த' இடத்துல வெச்சா.. வீட்டுல பணம் அதிகம் சேருமாம்.. ட்ரை பண்ணி பாருங்க..
Pigeon Feather Remedies In Tamil: நாம் ஒவ்வொருவருமே நல்ல செழிப்பான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கையையே வாழ விரும்புவோம். அதற்காக நாம் வாஸ்து மற்றும் ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ள பல வழிகளைப் பின்பற்றுவோம்.
இந்த சாஸ்திரங்களில் நல்ல மகிழ்ச்சியான வாழ்க்கைக்கும், வீட்டில் செல்வம் பெருகவும் ஒருசில பரிகாரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த பரிகாரங்களை மேற்கொள்வதன் மூலம், வாழ்க்கை இனிமையாக இருக்கும் என்பது நம்பிக்கை.

அந்த வகையில், பறவைகளுள் பழங்காலம் முதலாக இன்று வரை ஒரு செல்லப்பிராணியாக வளர்க்கப்பட்டு வருவது புறா. இந்த புறா அக்காலத்தில் வெறும் தூது அனுப்ப மட்டும் பயன்படுத்தப்படவில்லை. ஒரு புறாவின் இறகு ஒருவரது வாழ்க்கையையே மாற்றும் சக்தி கொண்டது.
அந்த அளவு புறா ஜோதிடத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இப்போது ஒருவரது வாழ்க்கை செல்வ செழிப்புடணும், மகிழ்ச்சியாகவும் இருக்க புறாவின் இறகை எப்படியெல்லாம் வீட்டில் வைத்திருக்க வேண்டும் என்பதைக் காண்போம்.
பணப் பிரச்சனை தீர...
வீட்டில் பணப் பிரச்சனை அதிகமாக இருந்தால், புறாவின் இறகுகளை எடுத்து, வெள்ளை துணியில் வைத்து, சிவப்பு நிற நூலால் 7 முறை சுற்றி, வீட்டில் உள்ள பணப் பெட்டியில் வைக்க வேண்டும். இப்படி வைக்கும் போது லட்சுமி தேவியின் அருள் முழுமையாக கிடைக்கும். இதன் விளைவாக பண பிரச்சனை நீங்குவதோடு, வீட்டில் மகிழ்ச்சியும், சந்தோஷமும் நிலைதிருக்கும்.
கடன் தொல்லை நீங்க...
கடன் வாங்கி அந்த கடனை அடைக்க முயற்சித்தும் முடியவில்லையா? அப்படியானால் கடன் பிரச்சனையில் இருந்து விரைவில் விடுபட, 3 புறா இறகுகளை எடுத்து, வீட்டின் மூலைகளில் வையுங்கள். அதாவது ஒரு இறகை வீட்டின் தெற்கு மூலையிலும், அடுத்த இறகை சமையலறையின் வடக்கு மூலையிலும், மூன்றாவது இறவை மேற்கு திசையை நோக்கியவாறும் வைக்க வேண்டும். இப்படி வைப்பதன் மூலம் லட்சுமி தேவியின் ஆசி கிட்டும் மற்றும் கடன் தொல்லை படிப்படியாக குறைய வழி பிறக்கும்.
விரைவில் வேலை கிடைக்க...
நீங்கள் பல மாதங்களாக வேலை தேடியும் நல்ல வேலை கிடைக்கவில்லையா அல்லது நீங்கள் எதிர்பார்க்கும் காரியங்கள் வெற்றிகரமாக நடப்பதில்லையா? அப்படியானால் வியாழக்கிழமை அன்று ஒரு மஞ்சள் துணியில் புறாவின் இறகுகளை வைத்து, மஞ்சள் நூலால் கட்டி, வீட்டின் பணப் பெட்டியில் வைக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம், சீக்கிரம் நல்ல வேலை கிடைக்கும்.
வீட்டிற்குள் புறா வருவது நல்லதா?
ஒருவரது வீட்டிற்குள் புறா அடிக்கடி வந்தால், அந்த வீட்டில் உள்ளோர் ஒரு நல்ல செய்தியை விரைவில் பெறப் போகிறார் என்று அர்த்தம். தூது அனுப்ப பயன்படுத்தப்பட்டு வந்த புறா, கடவுளின் தூதர் என்றும் அழைக்கப்படுகிறது. ஆகவே வீட்டில் புறா வந்தால், வீட்டில் மகிழ்ச்சியும், செழிப்பும் வரப் போகிறது என்று அர்த்தம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications











