Just In
- 51 min ago மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் வெற்றிகள் குவியும்..
- 1 hr ago கர்ப்ப காலத்தில் ஏற்படும் சரும பிரச்சனைகளை போக்க சில டிப்ஸ்..!
- 2 hrs ago உங்கள் முடி அதிகமாக கொட்டுகிறதா? நரைக்கிறதா? கவலைய விடுங்க.. இதோ சில டிப்ஸ்..!
- 3 hrs ago சர்க்கரை நோயாளிகளுக்கு எச்சரிக்கை.. கோடையில் இந்த அறிகுறிகள் இருந்தால் அலட்சியம் செய்யாதீர்கள்..!
Don't Miss
- News சிறையில் இருந்தே டெல்லியில் ஆட்சி.. கெஜ்ரிவாலுக்கு அனுமதி கோரி உயர்நீதிமன்றத்தில் ஆம்ஆத்மி மனு
- Sports இதெல்லாம் நிஜமா.. என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.. வருங்கால ஆஸி. அதிரடி மன்னன்
- Automobiles சுஸுகி பைக்குகளில் இது தனி ரகம்!! இந்தியாவில் விலையை கேட்டால் மயக்கமே வந்துவிடும்!
- Technology Google-ன் அடுத்த அடி.. உங்க Gmail அக்கவுண்ட்ல 4000-க்கும் அதிகமான இமெயில் இருக்கா? அப்போ இதுதான் ஒரே வழி!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Movies அட அதுக்குள்ள லீக் ஆகிடுச்சே.. சியான் 62 பட டைட்டில் இதுதானா?.. ஆனால், அந்த வாடை வருதே!
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
செல்லப் பிராணிகளோட என்னென்ன முக்கியமா ஷேர் பண்ணலாம்!!!
வீட்டில் செல்லப் பிராணிகளை வளர்க்கும் போது, நிறைய பொருட்களை அதனுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். ஏனெனில் அதுவும் உங்கள் வீட்டின் ஒருவராக இருக்கும் போது, உங்களுடன் நிறைய இடங்களில், வேலைகளில் ஈடுபடும். அவ்வாறு ஈடுபடும் போது எந்தெந்த பொருட்களை அதனுடன் பகிர்ந்து கொண்டால், அது சந்தோஷமாக இருக்கும் என்பதை சரியாக தெரிந்து கொண்டு, பின்னர் அதனை வளர்க்க ஆரம்பித்தால், எந்த ஒரு கவலையுமின்றி நம்மிடமிருக்கும் பொருட்களை பகிர்ந்து கொள்ள வேண்டும். அது என்னென்ன பொருட்கள் என்று பார்ப்போமா!!!
* நாய்கள் தரையில் படுக்கும் போது மிகுந்த குளிர்ச்சியாக இருக்கும். ஆகவே வீட்டில் இருக்கும் சாக்ஸை அதன் கால்களில் மாட்டிவிட்டால், அதற்கு சற்று இதமாக இருக்கும். மேலும் நாய்கள் படுக்கும் முன்பு, அதன் கால்களில் சாக்ஸை மாட்டி விடுங்கள். இதனால் செல்ல நாய்கள் நிம்மதியான தூக்கத்தை பெறும்.
* உண்ணும் உணவை செல்ல நாய்களுடன் பகிர்ந்து கொள்ளுதல் என்பது மிகவும் நல்லது. ஏனெனில் நாய்களுக்கு அதற்காக கடைகளில் விற்கும் உணவுகளை விரும்பி சாப்பிடுவதை விட, வீட்டில் சமைக்கும் உணவுகளைத் தான் விரும்பி சாப்பிடும், அதிலும் அந்த உணவுகளை தட்டில் வைத்து கொடுக்கும் போது, அங்கும் இங்கும் குதித்து சந்தோஷமாக விளையாடி உண்ணும். மேலும் நாய்களுக்கு கொடுக்கும் உணவுகளை பார்த்து, அவற்றிற்கு கொடுக்கக் கூடியது தானா என்பதை நன்கு அறிந்து பின்பு கொடுக்க வேண்டும். உதாரணமாக நாய்கள் சாதம், பிரட், மோர், தயிர் என்பதை சாப்பிடலாம். ஆனால் ஒரு சில உணவுகளை சாப்பிட்டால், நாய்களுக்கு அலர்ஜி ஏற்படும். ஆகவே நன்கு தெரிந்து கொண்டு பின்னர் கொடுங்கள்.
* நாய்களும் ஒரு சிறு குழந்தை போல் தான். மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும். அதிலும் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த செல்லப் பிராணி எது என்று பார்த்தால், அது நாய் தான். அதிலும் நாய்களுக்கு எந்த ஒரு விளையாட்டு பொருட்கள் என்றாலும் ஆசையோடு நன்கு விளையாடும். மேலும் வீட்டில் சிறு குழந்தைகள் இருந்தால், நாய்களுக்கு விளையாட்டுப் பொருட்களை கொடுக்க வேண்டாம். இதனால் குழந்தைகளும் அந்த விளையாட்டுப் பொருட்களுடன் விளையாடி, பின் அவர்களுக்கு ஏதேனும் தொற்று நோய்கள் ஏற்படும் வாய்ப்புள்ளது.
ஆகவே மேற்கூறியவற்றை மனதில் கொண்டு, நாய்களை வளர்த்து, அதனுடன் பகிர்ந்து வந்தால், நாய்கள் நன்கு சந்தோஷமாக இருப்பதோடு, நாமும் எந்த ஒரு பயமும் இல்லாமல் இருக்கலாம்.