Latest Updates
-
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா? -
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்!
செல்லப் பிராணிகளோட என்னென்ன முக்கியமா ஷேர் பண்ணலாம்!!!
வீட்டில் செல்லப் பிராணிகளை வளர்க்கும் போது, நிறைய பொருட்களை அதனுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். ஏனெனில் அதுவும் உங்கள் வீட்டின் ஒருவராக இருக்கும் போது, உங்களுடன் நிறைய இடங்களில், வேலைகளில் ஈடுபடும். அவ்வாறு ஈடுபடும் போது எந்தெந்த பொருட்களை அதனுடன் பகிர்ந்து கொண்டால், அது சந்தோஷமாக இருக்கும் என்பதை சரியாக தெரிந்து கொண்டு, பின்னர் அதனை வளர்க்க ஆரம்பித்தால், எந்த ஒரு கவலையுமின்றி நம்மிடமிருக்கும் பொருட்களை பகிர்ந்து கொள்ள வேண்டும். அது என்னென்ன பொருட்கள் என்று பார்ப்போமா!!!

* நாய்கள் தரையில் படுக்கும் போது மிகுந்த குளிர்ச்சியாக இருக்கும். ஆகவே வீட்டில் இருக்கும் சாக்ஸை அதன் கால்களில் மாட்டிவிட்டால், அதற்கு சற்று இதமாக இருக்கும். மேலும் நாய்கள் படுக்கும் முன்பு, அதன் கால்களில் சாக்ஸை மாட்டி விடுங்கள். இதனால் செல்ல நாய்கள் நிம்மதியான தூக்கத்தை பெறும்.
* உண்ணும் உணவை செல்ல நாய்களுடன் பகிர்ந்து கொள்ளுதல் என்பது மிகவும் நல்லது. ஏனெனில் நாய்களுக்கு அதற்காக கடைகளில் விற்கும் உணவுகளை விரும்பி சாப்பிடுவதை விட, வீட்டில் சமைக்கும் உணவுகளைத் தான் விரும்பி சாப்பிடும், அதிலும் அந்த உணவுகளை தட்டில் வைத்து கொடுக்கும் போது, அங்கும் இங்கும் குதித்து சந்தோஷமாக விளையாடி உண்ணும். மேலும் நாய்களுக்கு கொடுக்கும் உணவுகளை பார்த்து, அவற்றிற்கு கொடுக்கக் கூடியது தானா என்பதை நன்கு அறிந்து பின்பு கொடுக்க வேண்டும். உதாரணமாக நாய்கள் சாதம், பிரட், மோர், தயிர் என்பதை சாப்பிடலாம். ஆனால் ஒரு சில உணவுகளை சாப்பிட்டால், நாய்களுக்கு அலர்ஜி ஏற்படும். ஆகவே நன்கு தெரிந்து கொண்டு பின்னர் கொடுங்கள்.
* நாய்களும் ஒரு சிறு குழந்தை போல் தான். மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும். அதிலும் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த செல்லப் பிராணி எது என்று பார்த்தால், அது நாய் தான். அதிலும் நாய்களுக்கு எந்த ஒரு விளையாட்டு பொருட்கள் என்றாலும் ஆசையோடு நன்கு விளையாடும். மேலும் வீட்டில் சிறு குழந்தைகள் இருந்தால், நாய்களுக்கு விளையாட்டுப் பொருட்களை கொடுக்க வேண்டாம். இதனால் குழந்தைகளும் அந்த விளையாட்டுப் பொருட்களுடன் விளையாடி, பின் அவர்களுக்கு ஏதேனும் தொற்று நோய்கள் ஏற்படும் வாய்ப்புள்ளது.
ஆகவே மேற்கூறியவற்றை மனதில் கொண்டு, நாய்களை வளர்த்து, அதனுடன் பகிர்ந்து வந்தால், நாய்கள் நன்கு சந்தோஷமாக இருப்பதோடு, நாமும் எந்த ஒரு பயமும் இல்லாமல் இருக்கலாம்.



Click it and Unblock the Notifications