Latest Updates
-
5 பச்சை மிளகாயும், 1/4 கப் தேங்காயும் இருந்தா.. இட்லி, தோசைக்கு இப்படி சட்னி செய்யுங்க.. செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 24 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும் -
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்!
செல்லப் பிராணிகளோட என்னென்ன முக்கியமா ஷேர் பண்ணலாம்!!!
வீட்டில் செல்லப் பிராணிகளை வளர்க்கும் போது, நிறைய பொருட்களை அதனுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். ஏனெனில் அதுவும் உங்கள் வீட்டின் ஒருவராக இருக்கும் போது, உங்களுடன் நிறைய இடங்களில், வேலைகளில் ஈடுபடும். அவ்வாறு ஈடுபடும் போது எந்தெந்த பொருட்களை அதனுடன் பகிர்ந்து கொண்டால், அது சந்தோஷமாக இருக்கும் என்பதை சரியாக தெரிந்து கொண்டு, பின்னர் அதனை வளர்க்க ஆரம்பித்தால், எந்த ஒரு கவலையுமின்றி நம்மிடமிருக்கும் பொருட்களை பகிர்ந்து கொள்ள வேண்டும். அது என்னென்ன பொருட்கள் என்று பார்ப்போமா!!!

* நாய்கள் தரையில் படுக்கும் போது மிகுந்த குளிர்ச்சியாக இருக்கும். ஆகவே வீட்டில் இருக்கும் சாக்ஸை அதன் கால்களில் மாட்டிவிட்டால், அதற்கு சற்று இதமாக இருக்கும். மேலும் நாய்கள் படுக்கும் முன்பு, அதன் கால்களில் சாக்ஸை மாட்டி விடுங்கள். இதனால் செல்ல நாய்கள் நிம்மதியான தூக்கத்தை பெறும்.
* உண்ணும் உணவை செல்ல நாய்களுடன் பகிர்ந்து கொள்ளுதல் என்பது மிகவும் நல்லது. ஏனெனில் நாய்களுக்கு அதற்காக கடைகளில் விற்கும் உணவுகளை விரும்பி சாப்பிடுவதை விட, வீட்டில் சமைக்கும் உணவுகளைத் தான் விரும்பி சாப்பிடும், அதிலும் அந்த உணவுகளை தட்டில் வைத்து கொடுக்கும் போது, அங்கும் இங்கும் குதித்து சந்தோஷமாக விளையாடி உண்ணும். மேலும் நாய்களுக்கு கொடுக்கும் உணவுகளை பார்த்து, அவற்றிற்கு கொடுக்கக் கூடியது தானா என்பதை நன்கு அறிந்து பின்பு கொடுக்க வேண்டும். உதாரணமாக நாய்கள் சாதம், பிரட், மோர், தயிர் என்பதை சாப்பிடலாம். ஆனால் ஒரு சில உணவுகளை சாப்பிட்டால், நாய்களுக்கு அலர்ஜி ஏற்படும். ஆகவே நன்கு தெரிந்து கொண்டு பின்னர் கொடுங்கள்.
* நாய்களும் ஒரு சிறு குழந்தை போல் தான். மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும். அதிலும் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த செல்லப் பிராணி எது என்று பார்த்தால், அது நாய் தான். அதிலும் நாய்களுக்கு எந்த ஒரு விளையாட்டு பொருட்கள் என்றாலும் ஆசையோடு நன்கு விளையாடும். மேலும் வீட்டில் சிறு குழந்தைகள் இருந்தால், நாய்களுக்கு விளையாட்டுப் பொருட்களை கொடுக்க வேண்டாம். இதனால் குழந்தைகளும் அந்த விளையாட்டுப் பொருட்களுடன் விளையாடி, பின் அவர்களுக்கு ஏதேனும் தொற்று நோய்கள் ஏற்படும் வாய்ப்புள்ளது.
ஆகவே மேற்கூறியவற்றை மனதில் கொண்டு, நாய்களை வளர்த்து, அதனுடன் பகிர்ந்து வந்தால், நாய்கள் நன்கு சந்தோஷமாக இருப்பதோடு, நாமும் எந்த ஒரு பயமும் இல்லாமல் இருக்கலாம்.



Click it and Unblock the Notifications