Latest Updates
-
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா? -
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்!
வீட்ல நாய் வளர்க்குறீங்களா!!! சுத்தமா வெச்சுக்கோங்க!!!

செல்லமாக வளர்க்கும் நாய்களை தினமும் குளிப்பாட்ட வேண்டுமென்று அவசியமில்லை. ஆனால், அவற்றை சுத்தமாக எந்த ஒரு அழுக்கும் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் நாற்றம் அடிக்க ஆரம்பித்துவிடும். ஆகவே குறைந்தது மூன்று நாட்களுக்கு ஒரு முறையாவது நாய்களை குளிப்பாட்ட வேண்டும். அதனால் எந்த ஒரு நோயும் நாய்க்கும் வராது, நமக்கும் வராது. நிறைய நாய்கள் தண்ணீரைப் பார்த்தால் பயந்து, குரைக்க ஆரம்பிக்கும். ஆகவே அப்போது அதனை ஒரு குழந்தையை எப்படி சமாளித்து, குளிப்பாட்டுகிறோமோ, அப்படி அதன் சிந்தனையையும் திசை திருப்ப வேண்டும். இதனால் அதன் பயம் போய்விடுவதோடு, அதற்கு ஒரு தன்னம்பிக்கையும் வரும்.
நாய்களின் மீது இருக்கும் முடிகளை தினமும் சீப்பை வைத்து சீவ வேண்டும். அதனால் நாய்களின் மீது இருக்கும் அழுக்குகள் நீங்கி விடுவதோடு, நாய்களுக்கும் ஒரு மசாஜ் போன்று இருக்கும்.
தினமும் எப்படி வாய் சுத்தமாக இருக்க வேண்டும் என்று நாம் பற்களை தேய்க்கின்றோமோ, அப்படி தான் நாய்களுக்கும் மூன்று நாட்களுக்கு ஒரு முறை என்று தேய்க்காமல், தினமும் ஒரு முறை பற்களை தேய்க்க வேண்டும். அதனால் அதன் பற்களில் எந்த ஒரு நோயும் வராமல் தடுப்பதோடு, அதற்கு பிற்காலத்தில் வரும் பிரச்சனையையும் தடுக்கலாம். ஆகவே அதற்கு கடைகளில் விற்கும் நாய்க்கான மென்மையான பிரஸ்களை வாங்கி, நல்ல பேஸ்ட் பயன்படுத்தி தேய்க்கலாம். ஆனால் அதை விட சிறந்தது பேக்கிங் சோடாவுடன், சிறிது உப்பு மற்றும் தண்ணீரை விட்டு கலந்து தேய்த்தால், அதன் பற்களில் இருக்கும் கிருமிகள் அழிந்துவிடும்.
அனைவருக்குமே நகங்கள் என்று இருந்தால், அதில் அழுக்குகள் கண்டிப்பாக இருக்கும். அதிலும் நாய்களுக்கு சொல்லவா வேண்டும். அது அங்கம் இங்கும் செல்லும் போது, மண் தரையில், எதையேனும் புதிதாக இருப்பது போல் தோன்றினால், தன் கால்களை வைத்து, தோண்டும் குழிகளில் அதன் நகங்களில் கோடிக்கணக்கில் கிருமிகள் புகுந்து விளையாடிக் கொண்டிருக்கும். ஆகவே நம் செல்ல நாய்கள் ஆரோக்கியமாக இருக்க, அதன் நகங்களை அடிக்கடி வெட்டி விட வேண்டும். நகங்கள் சற்று கடினமாக இருந்தால், நாய்களுக்கு குளிப்பாட்டியவுடன், ஈரமாக இருக்கும் போது வெட்டினால், ஈஸியாக வெட்டலாம்.
இவ்வாறெல்லாம் கவனித்து வந்தால், நம் வீட்டு செல்ல நாய்கள் ஆரோக்கியமாக இருப்பதோடு, நாமும் ஆரோக்கியமாக இருக்கலாம்.



Click it and Unblock the Notifications