Latest Updates
-
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..!
வீட்டில் மருதாணி செடி இருக்கா? அப்ப இந்த தவறுகளை மறந்தும் செஞ்சுடாதீங்க..
Maruthani Plant: உங்கள் வீட்டில் பலவிதமான செடிகளை வளர்க்கிறீர்களா? குறிப்பாக உங்கள் வீட்டில் மருதாணி செடி உள்ளதா? நிறைய பேருக்கு வீட்டில் மருதாணி செடியை வளர்க்கலாமா என்ற கேள்வி மனதில் இருக்கும்.
மருதாணி செடியானது லட்சுமி தேவியின் அம்சத்தைக் குறிக்கிறது. இது தவிர மருதாணி செடியின் ஒவ்வொரு பகுதியும் பலவித நன்மைகளை வழங்குகின்றன. வீட்டில் மருதாணி செடி இருந்தால், அது அந்த வீட்டில் கெட்ட சக்தி நுழைவதைத் தடுக்கும்.

இதற்கு காரணம் மருதாணியின் வாசனை தான். இந்த வாசனைக்கு எந்த கெட்ட சக்தியும் மட்டுமின்றி, பூச்சிகளும் வராது. உங்கள் வீட்டில் மருதாணி செடி இருந்தால், அதன் ஒவ்வொரு பகுதியையும் எப்படி பயன்படுத்தலாம் மற்றும் மருதாணி செடியை வைத்திருந்தால் செய்யக்கூடாத தவறுகள் குறித்து இப்போது காண்போம்.
வீட்டில் உள்ள கெட்ட சக்திகள் நீங்க..
வீட்டில் உள்ள கெட்ட சக்திகளை நீக்க விரும்பினால், மருதாணி செடியின் விதைகளை எடுத்து வெயிலில் நன்கு காய வைத்து, ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் வீட்டில் சாம்பிராணி போடும் போது, அதில் சிறிது இந்த விதைகளை சேர்த்து தூபம் போட்டால், அதன் வாசனைக்கு கெட்ட சக்திகள் நீங்குவதோடு, வீட்டில் பூச்சிகள் வராமலும் இருக்கும்.
நிம்மதியான தூக்கத்தைப் பெற...
மருதாணி செடியின் பூக்கள் நல்ல மணத்தைக் கொண்டது. நீங்கள் இரவு நேரத்தில் தூக்கம் வராமல் அவதிப்படுவீர்களா? அப்படியானால் மருதாணி செடியில் உள்ள பூக்களை பறித்து, அதை ஒரு துணியில் போட்டு கட்டி, அதை தலையணைக்கு அடியில் வைத்து தூங்கினால், அதிலிருந்து வரும் மணம் மனதை ரிலாக்ஸ் அடையச் செய்து, நல்ல தூக்கத்தைப் பெற உதவும்.
வாஸ்து தோஷம் நீங்க..
உங்கள் வீட்டில் வாஸ்து தோஷம் இருந்தால், அந்த தோஷத்தைப் போக்கும் சக்தி மருதாணி செடிக்கு உள்ளது என்பது தெரியுமா? அதுவும் நீங்கள் வாடகை வீட்டில் இருந்து, அந்த வீட்டில் உள்ள வாஸ்து தோஷத்தை எளிதில் நீக்க நினைத்தால், ஒரு சிறிய தொட்டியில் மருதாணி செடியை வைத்து வளர்த்து வந்தால் வாஸ்து தோஷம் நீங்குவதோடு, வீடும் செல்வ செழிப்போடு இருக்கும்.
செய்யக்கூடாத தவறுகள்
மருதாணி செடியை வீட்டில் வைத்திருப்பவர்கள், யாருக்காவது மருதாணி இலைகளைப் பறித்து கொடுப்பதாக இருந்தால், அதை இலவசமாக கொடுக்காதீர்கள். ஒரு ரூபாயாவது வாங்கிக் கொண்டு கொடுங்கள். மருதாணி செடியானது லட்சுமி தேவியாக கருதப்படுவதால், யாருக்கும் இலவசமாக கொடுக்காதீர்கள்.
அதேப் போல் மருதாணி செடியின் இலைகளை மாலை வேளையில் விளக்கு வைத்த பின் தானமாக கொடுக்க வேண்டாம். ஏன் காசு கொடுத்தால் கூட மருதாணி இலைகளை கொடுத்துவிடாதீர்கள். அப்படி கொடுத்தால், அது வீட்டில் உள்ள லட்சுமி தேவியை வீட்டில் இருந்து வெளியேற்றுவதற்கு சமம். எனவே இந்த தவறை செய்யாதீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications











