Latest Updates
-
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா? -
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்!
பட்டாசுக்களால் தரையில் ஏற்பட்ட கறைகளைப் போக்க சில வழிகள்!!!
தீபாவளி பண்டிகையின் போது அனைவரும் பல்வேறு பட்டாசுக்களை விட்டு குதூகலமாக இருந்திருப்போம். அப்படி சந்தோஷமாக பட்டாசுக்களை வீட்டின் முன்பும், மாடியிலும் வெடித்ததால் தரையில் கருப்பாக கறைகளானது படிந்திருக்கும். இதனால் தரையே கேவலமாக இருக்கும். மேலும் அப்படி படிந்துள்ள கறைகளை வெறும் நீர் கொண்டு போக்குவது என்பது சுலமானது அல்ல.
ஆனால் வீட்டில் இருக்கும் ஒருசில பொருட்களைப் பயன்படுத்தி தரையை சுத்தம் செய்தால், பட்டாசுக்களால் ஏற்பட்ட கறைகளை எளிதில் நீக்கலாம். இங்கு தரையில் ஏற்பட்ட பட்டாசுக் கறைகளைப் போக்க சில வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் பார்ப்போமா!!!
சோப்புத் தண்ணீர்

சில நேரங்களில் வெறும் தண்ணீரைக் கொண்டு தரையை சுத்தம் செய்தாலும் கறைகளானது போகாமல் இருக்கும். அந்த சமயங்களில் கறைப் படிந்த இடத்தில் சோப்பு நீரை தெளித்து சிறிது நேரம் ஊற வைத்து, பின் தேய்த்து குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
எலுமிச்சை
கறைகளானது கடுமையாக இருந்தால், எலுமிச்சையைப் பயன்படுத்தலாம். ஏனெனில் எலுமிச்சையில் உள்ள அமிலமானது, கடுமையான கறைகளையும் எளிதில் நீக்கும்.
ப்ளீச்சிங் பவுடர்
ப்ளீச்சிங் பவுடர் கூட அருமையான ஒரு பொருள். எனவே கறைப் படிந்த இடத்தில் ப்ளீச்சிங் பவுடரை தூவி 2-3 மணிநேரம் கழித்து, துடைப்பம் கொண்டு நன்கு தேய்த்து கழுவினால், கறைகள் அகலும்.
மண்ணெண்ணெய்
தரையில் படிந்துள்ள கடுமையான கறைகளை எளிதில் நீக்க மண்ணெண்ணெய் பெரிதும் உதவியாக இருக்கும். அதற்கு மண்ணெண்ணெயை கறையுள்ள இடத்தில் தெளித்து துணியால் துடைத்து எடுக்க வேண்டும். மேலும் சிலர் மண்ணெண்ணெயை மற்ற கறைகளைப் போக்கவும் இதனைப் பயன்படுத்துவார்கள்.



Click it and Unblock the Notifications


