Latest Updates
-
5 பச்சை மிளகாயும், 1/4 கப் தேங்காயும் இருந்தா.. இட்லி, தோசைக்கு இப்படி சட்னி செய்யுங்க.. செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 24 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும் -
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்!
பட்டாசுக்களால் தரையில் ஏற்பட்ட கறைகளைப் போக்க சில வழிகள்!!!
தீபாவளி பண்டிகையின் போது அனைவரும் பல்வேறு பட்டாசுக்களை விட்டு குதூகலமாக இருந்திருப்போம். அப்படி சந்தோஷமாக பட்டாசுக்களை வீட்டின் முன்பும், மாடியிலும் வெடித்ததால் தரையில் கருப்பாக கறைகளானது படிந்திருக்கும். இதனால் தரையே கேவலமாக இருக்கும். மேலும் அப்படி படிந்துள்ள கறைகளை வெறும் நீர் கொண்டு போக்குவது என்பது சுலமானது அல்ல.
ஆனால் வீட்டில் இருக்கும் ஒருசில பொருட்களைப் பயன்படுத்தி தரையை சுத்தம் செய்தால், பட்டாசுக்களால் ஏற்பட்ட கறைகளை எளிதில் நீக்கலாம். இங்கு தரையில் ஏற்பட்ட பட்டாசுக் கறைகளைப் போக்க சில வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் பார்ப்போமா!!!
சோப்புத் தண்ணீர்

சில நேரங்களில் வெறும் தண்ணீரைக் கொண்டு தரையை சுத்தம் செய்தாலும் கறைகளானது போகாமல் இருக்கும். அந்த சமயங்களில் கறைப் படிந்த இடத்தில் சோப்பு நீரை தெளித்து சிறிது நேரம் ஊற வைத்து, பின் தேய்த்து குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
எலுமிச்சை
கறைகளானது கடுமையாக இருந்தால், எலுமிச்சையைப் பயன்படுத்தலாம். ஏனெனில் எலுமிச்சையில் உள்ள அமிலமானது, கடுமையான கறைகளையும் எளிதில் நீக்கும்.
ப்ளீச்சிங் பவுடர்
ப்ளீச்சிங் பவுடர் கூட அருமையான ஒரு பொருள். எனவே கறைப் படிந்த இடத்தில் ப்ளீச்சிங் பவுடரை தூவி 2-3 மணிநேரம் கழித்து, துடைப்பம் கொண்டு நன்கு தேய்த்து கழுவினால், கறைகள் அகலும்.
மண்ணெண்ணெய்
தரையில் படிந்துள்ள கடுமையான கறைகளை எளிதில் நீக்க மண்ணெண்ணெய் பெரிதும் உதவியாக இருக்கும். அதற்கு மண்ணெண்ணெயை கறையுள்ள இடத்தில் தெளித்து துணியால் துடைத்து எடுக்க வேண்டும். மேலும் சிலர் மண்ணெண்ணெயை மற்ற கறைகளைப் போக்கவும் இதனைப் பயன்படுத்துவார்கள்.



Click it and Unblock the Notifications


