Just In
- 32 min ago இந்தியாவில் இன்றும் ராஜவாழ்க்கை வாழும் அரச குடும்பங்கள்..இவங்களுக்கு எங்க இருந்து இவ்வளவு பணம் வருது தெரியுமா?
- 42 min ago கோடையில் பால் கெட்டுப்போகாமல் இருக்க எளிய டிப்ஸ்..!
- 1 hr ago தினமும் 10 பவுன் தங்கத்தை தூசியாக உமிழும் அதிசய எரிமலை... இந்த எரிமலையா இல்ல தங்கச்சுரங்கமானே தெரிலயே...!
- 2 hrs ago இந்த அறிகுறிகள் காலை வேளையில் தெரியுதா? அப்ப கல்லீரல் ஆபத்தில் இருக்கு-ன்னு அர்த்தம்.. உஷார்..
Don't Miss
- Movies இந்த ஒற்றுமையை நோட் பண்ணீங்களா?.. ஸ்டார் நடிகர்கள் ஒரே மாதிரி வந்து ஓட்டுப் போட்டு இருக்காங்களே!
- Finance AC வாங்கப் போறிங்களா? இந்த தவறை பண்ணிடாதீங்க.. முதல்ல இதை நோட் பண்ணுங்க!
- News சென்னைக்கு வரப்போகும் புல்லட் ரயிலை விடுங்க.. அதைவிட சிறப்பான சூப்பர் சம்பவம் இருக்கு.. இதை பாருங்க
- Sports இதுதான் கிரிக்கெட்.. அஷுதோஷ் சர்மாவிடம் கற்றுக் கொள்ள ஆவலாக உள்ளேன்.. சூர்யகுமாரே சொல்லிட்டாரு!
- Technology புது ரூல்ஸ்.. தேர்தல் முடிந்ததும் அமல்.. இனி 24 மணி நேரம் தான்.. ரயில் டிக்கெட் சேவையில் 2 பெரிய மாற்றங்கள்!
- Automobiles போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
பட்டாசுக்களால் தரையில் ஏற்பட்ட கறைகளைப் போக்க சில வழிகள்!!!
தீபாவளி பண்டிகையின் போது அனைவரும் பல்வேறு பட்டாசுக்களை விட்டு குதூகலமாக இருந்திருப்போம். அப்படி சந்தோஷமாக பட்டாசுக்களை வீட்டின் முன்பும், மாடியிலும் வெடித்ததால் தரையில் கருப்பாக கறைகளானது படிந்திருக்கும். இதனால் தரையே கேவலமாக இருக்கும். மேலும் அப்படி படிந்துள்ள கறைகளை வெறும் நீர் கொண்டு போக்குவது என்பது சுலமானது அல்ல.
ஆனால் வீட்டில் இருக்கும் ஒருசில பொருட்களைப் பயன்படுத்தி தரையை சுத்தம் செய்தால், பட்டாசுக்களால் ஏற்பட்ட கறைகளை எளிதில் நீக்கலாம். இங்கு தரையில் ஏற்பட்ட பட்டாசுக் கறைகளைப் போக்க சில வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் பார்ப்போமா!!!
சோப்புத் தண்ணீர்
சில நேரங்களில் வெறும் தண்ணீரைக் கொண்டு தரையை சுத்தம் செய்தாலும் கறைகளானது போகாமல் இருக்கும். அந்த சமயங்களில் கறைப் படிந்த இடத்தில் சோப்பு நீரை தெளித்து சிறிது நேரம் ஊற வைத்து, பின் தேய்த்து குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
எலுமிச்சை
கறைகளானது கடுமையாக இருந்தால், எலுமிச்சையைப் பயன்படுத்தலாம். ஏனெனில் எலுமிச்சையில் உள்ள அமிலமானது, கடுமையான கறைகளையும் எளிதில் நீக்கும்.
ப்ளீச்சிங் பவுடர்
ப்ளீச்சிங் பவுடர் கூட அருமையான ஒரு பொருள். எனவே கறைப் படிந்த இடத்தில் ப்ளீச்சிங் பவுடரை தூவி 2-3 மணிநேரம் கழித்து, துடைப்பம் கொண்டு நன்கு தேய்த்து கழுவினால், கறைகள் அகலும்.
மண்ணெண்ணெய்
தரையில் படிந்துள்ள கடுமையான கறைகளை எளிதில் நீக்க மண்ணெண்ணெய் பெரிதும் உதவியாக இருக்கும். அதற்கு மண்ணெண்ணெயை கறையுள்ள இடத்தில் தெளித்து துணியால் துடைத்து எடுக்க வேண்டும். மேலும் சிலர் மண்ணெண்ணெயை மற்ற கறைகளைப் போக்கவும் இதனைப் பயன்படுத்துவார்கள்.