Latest Updates
-
பட்டாணி மசாலா சாதம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, பிரியாணி மாதிரியே இருக்கும் -
சனி பகவான் உதயமாகியிருப்பதால் இன்று முதல் இந்த 5 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருந்தால் உங்க உடலில் நீரின் அளவு ஆபத்தான கட்டத்திற்கு சென்றுவிட்டதாம் - ஜாக்கிரதை -
கோடை வெயிலில் வீடு அனல் பறக்குதா? இந்த வாஸ்து செடிகள் இருந்தா போதும்… குளிர்ச்சியும் அதிர்ஷ்டமும் தேடி வரும்! -
வாஸ்துப்படி மணி பிளாண்ட் வைக்கும் திசை இதுவா? பணவரவு தடையின்றி கொழிக்க இதை உடனே மாற்றுங்க! -
கசப்பில்லாத பொன்னாங்கண்ணி கீரை கூட்டு - 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு சாப்பிடுங்க.. -
மே மாதத்தில் உருவாகும் கப்பார் யோகத்தால் பெரிய ஆபத்துகளையும், நஷ்டத்தையும் சந்திக்கப்போகும் 3 ராசிகள் -
வெறும் 5 ரூபாயில் கிடைக்கும் இந்த பொருள் கோடையில் சந்திக்கும் பாதி பிரச்சனையை தடுக்குமாம் - கூறும் டாக்டர்! -
அடிச்சது ஜாக்பாட் - தென்னிந்தியாவின் இந்த மாநிலத்தில் மிகப்பெரிய தங்கச் சுரங்கம் கிடைத்திருக்காம் -
சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சியால் ஏப்ரல் 27 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் லாபமும், வெற்றியும் குவியப்போகுது..
வீட்டில் கிளிசரினை எப்படியெல்லாம் யூஸ் பண்ணலாம்..?
அழகுப் பராமரிப்பில் பயன்படும் பொருட்களில் ஒன்று தான் கிளிசரின். இத்தகைய பொருளை அழகைப் பராமரிக்க மட்டுமின்றி, வீட்டைப் பராமரிக்கவும் பயன்படுத்தலாம். ஏனெனில் கிளிசரின் வீட்டின் பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு பெரிதும் உதவியாக உள்ளது.
மேலும் கிளிசரினை வீட்டைப் பராமரிக்கப் பயன்படுத்தினால், வீடு சுத்தமாக இருக்கும். அப்படி கிளிசரினை எப்படியெல்லாம் யூஸ் பண்ணலாம் என்று கேட்கிறீர்களா? அதைப் பற்றி தான் இங்கு கொடுத்துள்ளோம். அதைப் படித்து அதன் படி முயற்சித்துப் பாருங்கள். உண்மையிலேயே அசந்து போய்விடுவீர்கள்.

சப்தம் கொடுக்கும் கதவுகள்
சில நேரங்களில் கதவுகளில் இருந்து சப்தம் எழுவதோடு, மூட முடியாமல் அவஸ்தைப்படுவோம். அப்போது நாம் பொதுவாக எண்ணெய் தான் பயன்படுத்துவோம். ஆனால் அந்நேரத்தில் கிளிசரின் இருந்தால், அதனைப் பயன்படுத்தினால், சப்தம் எழுவது நிற்பதோடு, கதவுகளை எளிமையாக திறந்து மூடலாம்.

பழைய பூட்டுகள்
சிலர் வீடுகளில் பல நாட்களாக சில பூட்டுகளைப் பயன்படுத்தாமல் இருப்பார்கள். அத்தகைய பூட்டுகளை திடீரென்று பயன்படுத்த எடுத்தால், அதில் சாவியானது நுழையாமல் இருக்கும். அப்போது அவ்விடத்தில் கிளிசரினைப் பயன்படுத்தினால், எளிதில் பூட்டுகளை திறந்து பூட்டலாம்.

நேச்சுரல் சோப்பு
கிளிசரினில் இயற்கையாகவே சுத்தப்படுத்தும் பொருள் உள்ளதால், இதனை பாத்திரம் கழுவும் போது பயன்படுத்தலாம்.

பூக்களை பிரஷ்ஷாக வைக்க...
பூ ஜாடியில் உள்ள பூ வாடாமல் நீண்ட நேரம் பிரஷ்ஷாக இருக்க வேண்டுமானால், தண்ணீரில் சிறிது கிளிசரினைக் கலந்து, அதனை பூக்களின் மேல் தெளித்தால், பூக்கள் நீண்ட நேரம் வாடாமல் இருக்கும்.

ஜன்னல் கதவுகளை சுத்தம் செய்ய...
பொதுவாக கதவுகளில் தூசிகளானது மூலை முடுக்குகளில் தங்கிக் கொண்டு வெளியே வராமல் இருக்கும். ஆனால் கிளிசரின் பயன்படுத்தி ஜன்னல் கதவுகளைத் துடைத்தால், தூசிகள் எளிதில் நீங்கி, கதவுகளும் பாதிப்படையாமல் இருக்கும்.

முட்டைகளை விட உதவும்
குழந்தைகளின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது, நீரில் கிளிசரினைக் கலந்து, அதனைக் கொண்டு முட்டைகளை விடலாம். இதனால் பிறந்தநாள் கொண்டாட்டமானது சிறப்பாக இருக்கும்.



Click it and Unblock the Notifications