Latest Updates
-
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்...
கண்ணாடியை பளிச்சென்று மின்னச் செய்ய சில டிப்ஸ்....
அனைவரும் கண்ணாடியை சுத்தம் செய்வது என்பது மிகவும் எளிது என்று நினைக்கின்றனர். உண்மையில், அது தான் தவறு. என்ன தான் வெறும் தண்ணீரைக் கொண்டு, கண்ணாடியை துடைத்தாலும், அதிலிருக்கும் கறைகளானது முற்றிலும் போகாமல் இருக்கும். எனவே கண்ணாடியில் படிந்திருக்கும் கறைகளை முற்றிலும் போக்குவதற்கு, ஒருசில பொருட்களைப் பயன்படுத்தினால், நிச்சயம் முகம் பார்க்கும் கண்ணாடியானது பளிச்சென்று மின்னும்.
அத்தகைய கண்ணாடியில் உள்ள கறைகளை போக்க சில ட்ரிக்ஸ் உள்ளன. உதாரணமாக, ஈரமான துணியைக் கொண்டு கண்ணாடியை துடைத்து விட்டு, காய்ந்த சுத்தமான துணியைக் கொண்டு துடைப்பதற்கு பதிலாக, செய்தித்தாள்களைப் பயன்படுத்தலாம். இதனால் கண்ணாடியில் உள்ள ஈரம் முற்றிலும் உறிஞ்சப்படுவதோடு, தண்ணீர் கறைகளும் அகலும். சரி, இப்போது இது போன்ற சில ட்ரிக்ஸ்களை கொடுத்துள்ளோம். அதைப் படித்து கண்ணாடியைத் துடைத்துப் பார்த்து, எப்படியிருந்தது என்று சொல்லுங்கள்.

செய்தித்தாள்
கண்ணாடிகள் நன்கு பளிச்சென்று மின்னுவதற்கு, சிறிது தண்ணீரை கண்ணாடியில் தெளித்து, செய்தித்தாள் கொண்டு துடைக்க வேண்டும். அதிலும் துடைக்கும் போது சற்று அழுத்தி துடைக்க வேண்டும். மேலும் இந்த நேரத்தில் கைவிரல்களை கண்ணாடியில் உடனே வைக்கக்கூடாது.

வெள்ளை வினிகர்
வெதுவெதுப்பான நீரில் சிறிது வெள்ளை வினிகரை சேர்த்து கலந்து, கண்ணாடியின் மீது தெளித்து, பேப்பர் கொண்டு துடைத்தால், முகம் பார்க்கும் கண்ணாடியானது மின்னும்.

எலுமிச்சை சாறு
எலுமிச்சை சாறு முகத்தை மட்டுமின்றி, கண்ணடியையும் தான் பளிச்சென்று வைத்துக் கொள்ள உதவும். அதற்கு எலுமிச்சை சாற்றை தண்ணீரில் கலந்து, கண்ணாடியில் தெளித்து காகிதம் கொண்டு துடைக்க வேண்டும். இதனால் நல்ல நறுமணமும் வீசும்.

ஆல்கஹால்
ஆல்கஹாலை நீரில் கலந்து, கறை உள்ள கண்ணாடியின் மீது தெளித்து, சுத்தமான பேப்பரால் துடைத்தால், கறைகள் நீங்கிவிடும்.

போராக்ஸ்
கண்ணாடியை சுத்தப்படுத்த மற்றொரு முறை, போராக்ஸ் பொடியை வெள்ளை வினிகருடன் சேர்த்து கலந்து, அந்த கலவையை கண்ணாடியில் தெளித்து துடைக்க வேண்டும்.

மென்மையான காட்டன் துணி
கண்ணாடியை சுத்தப்படுத்த மென்மையான காட்டன் துணியைப் பயன்படுத்த வேண்டும். இதனால் கண்ணாடியில் உள்ள கறைகள் மற்றும் அழுக்குகள் அனைத்தும் வெளியேறிவிடும்.



Click it and Unblock the Notifications











