Latest Updates
-
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க!
கரையான் பாதிப்பில் இருந்து பழங்கால மரச்சாமான்களைப் பாதுகாக்க சில வழிகள்!!!
வீட்டில் மரத்தால் ஆன பொருட்கள் இருந்தால், அவற்றை சரியாக கவனிக்காவிட்டாலோ அல்லது நீண்ட நாட்கள் பயன்படுத்தாமல் இருந்தாலோ, அவற்றை கரையான்கள் அரிக்க ஆரம்பித்துவிடும். அதுவும் இந்த கரையான்களானது மரப்பொருட்களில் ஈரப்பதம் அதிகம் இருந்து ஊறி இருந்தால், எளிதில் தொற்றிக் கொண்டு அரிக்க ஆரம்பித்து, மரப்பொருட்களை பாழாக்கிவிடும்.
ஆகவே இப்படி வீட்டில் உள்ள மரப்பொருட்களில் கரையான்கள் இருந்தால், அவற்றை அழிப்பதற்கு கண்ட கண்ட கெமிக்கல்களை வாங்கிப் பயன்படுத்தாமல், வீட்டில் உள்ள சில பொருட்களைக் கொண்டே எளிதில் அவற்றை அழிக்கலாம். சரி, இப்போது கரையான்களை அழிப்பதற்கான சில எளிய வழிகளைப் பார்ப்போம். மேலும் வீட்டில் நீண்ட நாட்கள் மரப்பொருட்களை பயன்படுத்தாமல் இருந்தால், அவற்றில் கீழே கொடுக்கப்பட்டதை செய்தால், கரையான்கள் வருவதை தடுக்கலாம்.

சூரிய வெளிச்சம்
மரச்சாமான்களில் கரையான்கள் இருந்தால், அவற்றை வெளியில் குறைந்தது 4 மணிநேரமாவது வைக்க வேண்டும். இப்படி வைத்தால், சூரிய வெப்பமானது கரையான்களை அழித்து, எளிதில் வெளியேற்றிவிடும்.

வேப்பிலை
வேப்பிலை பொடியை கரையான் படிந்த மரச்சாமான்களில் தூவினால், அதில் உள்ள கசப்பு மற்றும் மருத்துவ தன்மையினால், கரையான்கள் விரைவில் அழிந்துவிடும்.

உப்பு
உப்பிற்கு கூட கரையான்களை அழிக்கும் சக்தி உள்ளது. எனவே கரையான்களை அழிக்க, இதனைக் கூட பயன்படுத்தலாம்.

மிளகாய் தூள்
மரச்சாமான்களில் கரையான் கூட்டைக் கண்டால், அப்போது அங்கு சிறிது மிளகாய் தூளை தூவினால், கூட்டில் உள்ள கரையான்கள் அழிந்துவிடும்.

கசப்பான பொருள்
கரையான்களுக்கு கசப்பான பொருளின் வாசனை என்றாலே ஆகாது. ஆகவே கரையான் கூட்டை பார்த்தால், அப்போது அந்த இடத்தில் சிறிது பாகற்காய் சாற்றினை தெளித்தால், கரையான் வளராமல் தடுக்கப்படுவதோடு, அழிந்தும்விடும்.



Click it and Unblock the Notifications











