Latest Updates
-
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்! -
வாஸ்து படி இந்த தவறுகள் உங்கள் வீட்டில் இருந்தால் ராகுவின் சாபம் உங்களை பாடாய்படுத்துமாம் - ஜாக்கிரதை -
உங்க கழுத்து கருப்பா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க...
கரையான் பாதிப்பில் இருந்து பழங்கால மரச்சாமான்களைப் பாதுகாக்க சில வழிகள்!!!
வீட்டில் மரத்தால் ஆன பொருட்கள் இருந்தால், அவற்றை சரியாக கவனிக்காவிட்டாலோ அல்லது நீண்ட நாட்கள் பயன்படுத்தாமல் இருந்தாலோ, அவற்றை கரையான்கள் அரிக்க ஆரம்பித்துவிடும். அதுவும் இந்த கரையான்களானது மரப்பொருட்களில் ஈரப்பதம் அதிகம் இருந்து ஊறி இருந்தால், எளிதில் தொற்றிக் கொண்டு அரிக்க ஆரம்பித்து, மரப்பொருட்களை பாழாக்கிவிடும்.
ஆகவே இப்படி வீட்டில் உள்ள மரப்பொருட்களில் கரையான்கள் இருந்தால், அவற்றை அழிப்பதற்கு கண்ட கண்ட கெமிக்கல்களை வாங்கிப் பயன்படுத்தாமல், வீட்டில் உள்ள சில பொருட்களைக் கொண்டே எளிதில் அவற்றை அழிக்கலாம். சரி, இப்போது கரையான்களை அழிப்பதற்கான சில எளிய வழிகளைப் பார்ப்போம். மேலும் வீட்டில் நீண்ட நாட்கள் மரப்பொருட்களை பயன்படுத்தாமல் இருந்தால், அவற்றில் கீழே கொடுக்கப்பட்டதை செய்தால், கரையான்கள் வருவதை தடுக்கலாம்.

சூரிய வெளிச்சம்
மரச்சாமான்களில் கரையான்கள் இருந்தால், அவற்றை வெளியில் குறைந்தது 4 மணிநேரமாவது வைக்க வேண்டும். இப்படி வைத்தால், சூரிய வெப்பமானது கரையான்களை அழித்து, எளிதில் வெளியேற்றிவிடும்.

வேப்பிலை
வேப்பிலை பொடியை கரையான் படிந்த மரச்சாமான்களில் தூவினால், அதில் உள்ள கசப்பு மற்றும் மருத்துவ தன்மையினால், கரையான்கள் விரைவில் அழிந்துவிடும்.

உப்பு
உப்பிற்கு கூட கரையான்களை அழிக்கும் சக்தி உள்ளது. எனவே கரையான்களை அழிக்க, இதனைக் கூட பயன்படுத்தலாம்.

மிளகாய் தூள்
மரச்சாமான்களில் கரையான் கூட்டைக் கண்டால், அப்போது அங்கு சிறிது மிளகாய் தூளை தூவினால், கூட்டில் உள்ள கரையான்கள் அழிந்துவிடும்.

கசப்பான பொருள்
கரையான்களுக்கு கசப்பான பொருளின் வாசனை என்றாலே ஆகாது. ஆகவே கரையான் கூட்டை பார்த்தால், அப்போது அந்த இடத்தில் சிறிது பாகற்காய் சாற்றினை தெளித்தால், கரையான் வளராமல் தடுக்கப்படுவதோடு, அழிந்தும்விடும்.



Click it and Unblock the Notifications