வீட்டை சுத்தம் செய்ய பேக்கிங் சோடா மற்றும் வினிகர் இருக்க பயம் ஏன்...?

By Maha

அனைவருமே வீட்டை சுத்தப்படுத்துவதற்கு எளிமையான பொருட்கள் கிடைக்காதா என்று ஏங்குவோம். அப்போது டிவியில், வீட்டை சுத்தப்படுத்துவதற்கு என்ற பொருளை விளம்பரப்படுத்தினால், உடனே அது எவ்வளவு விலையாக இருந்தாலும் வாங்கி பயன்படுத்துவோம். மேலும் தற்போது வீட்டை சுத்தப்படுத்துவதற்கு நேரம் கிடைக்காததால், எளிமையாக வீட்டை சுத்தப்படுத்துவதற்கான வழிமுறைகளையே பலரும் தேடுகின்றனர்.

அவ்வாறு கஷ்டப்பட்டு பணத்தை செலவழித்து வீட்டை சுத்தப்படுத்த பயன்படும் பொருளை வாங்குவதற்கு பதிலாக, வீட்டில் இருக்கும் எளிய பொருட்களைக் கொண்டு எப்படி சுத்தம் செய்வது என்பதை தெரிந்து கொண்டால், ஈஸியாக இருக்கும் அல்லவா? ஆகவே இப்போது பேக்கிங் சோடா மற்றும் வினிகரைப் பயன்படுத்தி எவற்றையெல்லாம் சுத்தம் செய்யலாம் என்று பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பாத்திரம் கழுவும் தொட்டி

பாத்திரம் கழுவும் தொட்டி

சமையலறையில் உள்ள தொட்டியை சுத்தம் செய்வது என்பது சற்று கடினமான வேலையாக இருக்கலாம். ஏனெனில் அங்குள்ள குழாயில் உணவுப் பொருட்கள் தங்கி அடைப்பை ஏற்படுத்துதோடு, துர்நாற்றத்தையும் வெளிப்படுத்தும். எனவே இத்தகைய பிரச்சனையை எளிதில் போக்குவதற்கு பேக்கிங சோடா வினிகரில் கலந்து, தொட்டியில் தெளித்து, 20 நிமிடம் ஊற வைத்து, பின் தேய்த்து கழுவினால், தொட்டி பளிச்சென்று மின்னும். ஒருவேளை குழாயில் அடைப்பு இருந்தால், இரவில் இந்த கலவையை ஊற்றி இரவு முழுவதும் ஊற விட்டு, காலையில் சூடான நீரை ஊற்றினால், அடைப்பு எளிதில் நீங்கிவிடும்.

குளியலறை

குளியலறை

குளியலறையை பேக்கிங் சோடா மற்றும் வினிகர் கொண்டு சுத்தம் செய்யலாம். இவ்வாறு இதனைக் கொண்டு செய்வதால், குளியலறையில் உள்ள கறைகள் அனைத்து எளிதில் நீங்கிவிடும். மேலும் குளியலறையில் இதனை அவ்வப்போது தெளித்து விட்டால், துர்நாற்றமின்றியும் இருக்கும்.

கார்பெட் கறைகள்

கார்பெட் கறைகள்

கார்பெட்டில் குழம்பு அல்லது ஒயின் சிந்தினால், அப்போது வினிகர் மற்றும் பேக்கிங் சோடா கலவையில் நனைத்தால், கார்பெட்டில் உள்ள கறை முற்றிலும் நீங்கிவிடும்.

ஷவர்

ஷவர்

சில சமயங்களில் ஷவரில் அடைப்பு ஏற்படும். அப்போது அந்த அடைப்பை எளிதில் நீக்க, பேக்கிங் சோடா மற்றும் வினிகர் கலவையில் ஊற வைத்தால், அடைப்பு நீங்கிவிடும்.

கழிவறை

கழிவறை

கழிவறையை சுத்தம் செய்ய, வினிகரை முதலில் கழிவறையில் தெளித்து, 15 நிமிடம் ஊற வைத்து, பின் பேக்கிங் சோடாவை தூவி, 10 நிமிடம் ஊற வைத்து, பின் தண்ணீர் ஊற்றி தேய்த்தால், கறைகள் நீங்குவதோடு, துர்நாற்றமின்றியும் இருக்கும்.

அடிப்பிடித்த பாத்திரம்

அடிப்பிடித்த பாத்திரம்

மறதியில் சில நேரங்களில் அடுப்பில் வைத்த பாத்திரங்களை மறந்திருப்போம். அதனால் பாத்திரங்கள் அடிப்பிடித்திருக்கும். அத்தகைய கறையை போக்குவதற்கு, பேக்கிங் சோடா மற்றும் வினிகர் கலந்த கலவையை தெளித்து 10 நிமிடம் ஊற வைத்தால், கறைகள் மட்டுமின்றி, அதிலிருந்து வெளிவரும் நாற்றத்தையும் போக்கும்.

கண்ணாடி ஜன்னல்

கண்ணாடி ஜன்னல்

கண்ணாடி ஜன்னலில் உள்ள கையின் அச்சு, எண்ணெய் பசை கறைகள் அவ்வளவு எளிதில் போகாது. ஆனால், வினிகர் கலவையை தெளித்து, செய்தித்தாள் கொண்டு துடைத்தால், அவை எளிதில் போய்விடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion