Latest Updates
-
30 ஆண்டுக்கு பின் சனியும்-செவ்வாயும் மீனத்தில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
No Oil Noi Boil Recipe: அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...! -
1 வருடத்துக்கு பின் மேஷம் செல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது...
சுடு தண்ணீரில் துணியை ஏன் துவைக்க கூடாது???

அலசினால் என்ன ஏற்படும்...?
1. துணி சுருக்கிவிடும் : துணிகளை லான்டரியில் போடுகிறோம், அங்கு துணிகளில் உள்ள கரைகள் நீங்க சுடு தண்ணீரை பயன்படுத்துகிறார்கள், அதனால் துணிகளானது கரை இல்லாமல் பளிச்சென்று இருக்கிறது. ஆனால் அந்த துணிகளைப் போட்டு பார்த்தால் இறுக்கமாக இருக்கும். அப்போது நீங்கள் குண்டாகிவிட்டீர்கள் என்று நினைப்பீர்கள், ஆனால் உண்மையில் துணியானது சுருங்கி இருக்கும். ஏனெனில் சுடு நீரானது துணியின் மெட்டீரியலை பாதிக்கும்.
2. நிறம் மங்குதல் : சுடு நீரானது துணியின் கலரை நீக்கும் சக்தியுடையது. ஏனெனில் சுடு தண்ணீரில் உள்ள வெப்பத்தின் அளவானது துணியில் உள்ள நிறத்தை அகற்றிவிடும்.
3. நூல் நஞ்சிவிடுதல் : சுடு நீரில் அலசும் துணி சுருங்குவதால், துணியில் உள்ள நூல்கள் வலுவிழந்து நஞ்சிவிடுகிறது. மேலும் சுடு தண்ணீரில் ஊற வைத்து துவைக்கும் துணியில் அழுக்கை போக்க பிரஸ் போட்டால் கண்டிப்பாக துணியானது கிழிந்து விடும்.
நினைவில் கொள்ள வேண்டியவை...
1. துணியை வாங்கும் போது அதில் துணியைப் பற்றி லேபிளில் போட்டிருப்பதை படிக்க வேண்டும். முக்கியமாக துணியை சுடு நீரில் அலசலாமா, வேண்டாமா என்று பார்ப்ப வேண்டும். காட்டனை சுடு தண்ணீரில் அலசலாம், ஆனால் லேபிளில் கொடுத்திருப்பதையும் பார்க்க வேண்டும்.
2. வேண்டுமென்றால் துணியின் சிறு பகுதியை சுடு நீரில் 4 5 நிமிடம் வரை ஊற வைத்து, சுருங்கியிருந்தாலோ அல்லது நிறம் போனாலோ அந்த துணியை சுடு நீரில் போட வேண்டாம். இதனால் துணியை சுடு நீரில் போடலாமா வேண்டாமா என்று தெரிந்து விடும்.
3. பொதுவாக துணிகளை 10 15 நிமிடத்திற்கு மேல் சுடு தண்ணீரில் ஊற வைக்க வேண்டாம். இதனால் எந்த துணியானாலும் சுருக்கத்தை அடையும்.
4. சுடு நீரில் அலச இருக்கும் துணியை வெதுவெதுப்பான தண்ணீரில் அலசினால் துணியானது விரைவில் பாதிப்படைவதைத் தடுக்கலாம்.
துணிகள் நீண்ட நாட்கள் வர வேண்டும் என்று நினைத்தால், சுடு நீரில் பெரும்பாலும் அலசுவதை தவிர்க்கவும். கரைகள் போக சுடு நீரில் போடுவதற்கு பதில் மற்ற பொருட்களான எலுமிச்சை, பேக்கிங் சோடா அல்லது வினிகரை பயன்படுத்தலாம்.



Click it and Unblock the Notifications











