Latest Updates
-
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது
சேர்ந்து சாப்பிடுங்க ! 'கேஸ்' மிச்சமாகும் !

ரெடியாக வைக்கவும்
ஸ்டவ்வை பற்ற வைத்துவிட்டு ப்ரிட்ஜை திறக்கவேண்டாம். சமைக்க போகும் போது தேவையான சமையல் பொருட்களை எல்லாம் எடுத்து பக்கத்தில் வைத்துக் கொண்டு சமையலில் ஈடுபடுங்கள். இல்லாவிட்டால் கேஸ் செலவு அதிகமாகிவிடும். முடிந்த வரை சின்ன பர்னரை பயன்படுத்தவும். பர்ணர்களின் அடைப்பு இல்லாமல் பார்த்துக்கொள்ளவும
அரிசியை ஊறவையுங்கள்
சமைப்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாக அரிசி மற்றும் நவதானிய பருப்பு பொருட்களை தண்ணீரில் ஊறவைத்துவிட்டு வேகவைத்தால் சீக்கிரமே வெந்துவிடும். இதனால் எரிவாயு செலவு மிச்சம் ஆகும். அரிசியையோ பருப்பு, கறி வகைகள் வேக விடும்போது தேவைக்கு தக்கபடி மட்டும் தண்ணீர் ஊற்றுங்கள். கூடுதல் தண்ணீர் ஊற்றினால் எரிபொருள் அதிகம் செலவாகும். ப்ரிட்ஜிலிருந்து எடுத்த பொருட்களை உடனே சமைத்தால் கேஸ் செலவு அதிகமாக்கும், குளிர் போன பிறகு சமைக்கவும்
உணவுகள் சமைக்கும் பொழுது வெளி காற்று அடுப்பை அனைக்காமல் பார்த்துக்கொள்ளவும். நாம் வேறு வேலையாக இருப்போம். அடுப்பு அணைந்து விடுவது தெரியாது. அதால் கேஸ் வீணகிவிடும். பாத்திரத்துக்கு மேல் தீ வராமல் குறைந்த தணலில் அடுப்பை எரியவிடவும்
குக்கர் சமையல்
பிரஷர் குக்கரில் சமையுங்கள். இதனால் எரிபொருள் செலவு கம்மியாகும் நேரமும் மிச்சமாகும். ஒருவேளை பாத்திரத்தில் சமைக்க நேர்ந்தால் பாத்திரத்தை மூடிவைத்து சமையல் செய்தால் வேலை சீக்கிரம் முடிவதோடு, கேஸ் செலவும் குறையும்.
முக்கியமாக அடுப்பில் உணவினை வைத்துவீட்டு தொலைக்காட்சி பார்ப்பதை தவிர்க்கவும். ஏனெனில் அடுப்பில் வைத்தது மறந்துவிடும். இதனால் உணவும், எரிபொருளும் வீணாகிவிடும்.
ஒரே நேரத்தில் சாப்பிடுங்கள்
சமைத்த உணவுகளை ஹாட்பாக்ஸில்போட்டு வைக்கவும். எப்பொழுதுமே வீட்டில் அனைவரும் ஒரே நேரத்தில் ஒன்றாக சாப்பிடுவது நல்லது. இதனால், அடிக்கடி சூடு செய்து சாப்பிட வேண்டிய அவசியம் ஏற்படாது.
சமைத்து முடித்தவுடன் தீயை அணைக்கவும். அதோடு சிலிண்டரையும் ஆப் செய்ய மறந்து விடாதீர்கள். இதேல்லாம் செய்தால் நிச்சயம் கேஸ் மிச்சமாகும். எரிபொருள் சிக்கனம் வீட்டுக்கு மட்டுமல்ல நாட்டுக்கும் நல்லதுதான்.



Click it and Unblock the Notifications