Latest Updates
-
ஆகஸ்ட் மாதத்தில் உதயமாகும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு கடன் தொல்லை நீங்கி பண வரவு அதிகரிக்கும்! -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் கோதுமை ரவா பாசிப்பருப்பு பாயாசம் - எப்படி செய்யணும் தெரியுமா? -
தலைமுடி உதிர்வை தடுக்கணுமா? அப்ப நம்ம பாட்டிமார்கள் பின்பற்றிய இந்த வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
ஆகஸ்ட் 01-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரங்க வாழ்வில் பிரச்சனை புயல் வீசப்போகுது.. -
52000 கோடி ரூபாய் இழப்பீடு செலுத்தப்போகும் பிரபல நிறுவனம் - அதிர்ச்சியளிக்கும் காரணம் என்ன தெரியுமா? -
பொட்டுக்கடலை பூர்ண பணியாரம் - ஈவ்னிங் டைம்-ல பிள்ளைகளுக்கு செஞ்சு குடுங்க, விரும்பி சாப்பிடுவாங்க.. -
கஜலக்ஷ்மி யோகம் ஆகஸ்ட் 05-ல் உருவாவதால் புது சொத்துக்களை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 5 அறிகுறிகள் தெரியுதா? அப்ப வைட்டமின் சி குறைபாடு இருக்குன்னு அர்த்தம்.. -
கேரளா ஸ்டைல் மசாலா ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையா, ஆரோக்கியமா இருக்கும் -
வக்கீல்களும், நீதிபதிகளும் ஏன் கருப்பு நிற கோட் மட்டுமே அணிகிறார்கள் தெரியுமா?
சுவற்றில் எண்ணெய் பசையா இருக்கா...?

எண்ணெய் கரையை நீக்க சில வழிகள்...
வினிகர் : பஞ்சை சிறிது எடுத்துக் கொண்டு, அதை வினிகரில் முற்றிலும் நனைத்து எண்ணெய் உள்ள இடத்தில், அந்த கரை போகும் வரை நன்கு தேய்க்கவும். இந்த முறையை மேற்கொண்டால் சுற்றில் உள்ள கரையானது எளிதாக போய்விடும். மேலும் கரையை வினிகர் கொண்டு தேய்த்தப் பின், ஒரு சுத்தமான துணியைக் கொண்டு துடைக்கவும். இதனால் கரையானது போய் விடும்.
சோளக்கஞ்சி : சோளக்கஞ்சியை நீரில் கரைத்து பேஸ்ட் செய்து கொள்ளவும். பின் அந்த போஸ்ட்-ஐ எண்ணெய் கரை உள்ள இடத்தில் தடவி சிறிது நேரம் ஊற வைக்கவும். பின் அந்த இடத்தை ஈரமான துணி கொண்டு துடைத்து எடுக்கவும். இந்த முறையை தொடர்ந்து கரை போகும் வரை செய்யவும். இது சுவற்றில் இருந்து எண்ணெய் பசையை நீக்க ஒரு சிறந்த வழியாகும்.
வெப்பம் : சுவற்றில் இருந்து கரையை அகற்ற இரு ஒரு சிறந்த வழி. முதலில் ஒரு சிறு இரும்புத் துண்டை சிறு தீயில் சூடேற்றிக் கொள்ளவும். பின் சிறிது டிஸ்யூ பேப்பரை எடுத்து மடித்துக் கொள்ளவும். பின் அந்த டிஸ்யூ பேப்பரை கரை உள்ள இடத்தில் வைத்து பிறகு சூடேற்றிய இரும்பை வைத்து அந்த இடத்தில் பேப்பர் மீது தேய்க்கவும். இவ்வாறு பல முறை தேய்த்தால் கரையானது போய்விடும். அப்படி தேய்க்கும் போது கவனமாக செய்ய வேண்டும். இப்படி இரும்பை வைத்து தேய்க்கும் போது எண்ணெயானது இளகிவிடும், அந்த இளகிய எண்ணெயை பேப்பர் ஆனது உறிஞ்சிவிடும். பின் அதனை வெதுவெதுப்பான சோப்புத் தண்ணீரால் சுத்தம் செய்து, பின் துணியால் துடைத்தால் கரையானது போய்விடும்.
பெயிண்ட் : எண்ணெய் கரையானது வீடு முழுவதும் இருந்தால், அப்போது அதனை சுத்தம் செய்வதென்பது மிகவும் கடினம். அதனை நீக்க ஒரே வழி, சுவற்றில் பெயிண்ட் அடிப்பது தான். எமல்சன் பெயிண்டானது கரைகளை நீக்காது. ஆனால் அதற்கு ஒரு வழி இருக்கிறது. அது என்னவென்றால், முதலில் சுவற்றை வெதுவெதுப்பான சோப்பு தண்ணீரால் கழுவ வேண்டும். பின் அந்த சுவற்றில் கீழ்ப்பூச்சு பூசி காய வைக்க வேண்டும். பிறகு அந்த சுவற்றில் உண்மையான கலரை அடிக்க வேண்டும். இதனால் அந்த எண்ணெய் கரையை அகற்றலாம்.
மேற்கூரிய இந்த குறிப்புகள் மிகவும் பயனுள்ளவையாக இருக்கும். இவ்வாறெல்லாம் செய்தால் எண்ணெய் கரையானது எளிதாகப் போய்விடும்.



Click it and Unblock the Notifications