Latest Updates
-
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
மழைக்காலத்தில் வீட்டை கவனிங்க!

மழைக்காலத்தில் மரக்கதவு, ஜன்னல்களை மூடித்திறப்பதும் கடினம் தான். எனவேதான் குடும்பத்தலைவிகளுக்கு வீட்டை பராமரிப்பு என்பது, மழைக்காலத்தில் சற்றே கூடுதல் வேலைதான். என்ன செய்தால் எளிதாக வீட்டின் பராமரிக்கலாம் என்று ஆலோசனை கூறியுள்ளனர் நிபுணர்கள் படியுங்களேன்.
மழைக்காலத்தில் தரை முழுவதும் கிருமிகளின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் எனவே வீட்டின் தரைகளை கிருமிநாசினி திரவம் கொண்டு சுத்தம் செய்யவேண்டும். வீட்டை கழுவி விடாமல், மாப்' கொண்டு துடைத்தால் ஈரத்தை தவிர்க்கலாம்.வீடுமுழுவதும் சுத்தமான சாம்பிராணி புகையை அடிக்கடி காட்டினால், கொசுக்கள் ஓடிவிடும் வீடும் மணக்கும். மிதியடிகளை, இரண்டு நாளைக்கு ஒருமுறையாவது மாற்ற வேண்டும்.
துணிகள் காய்ந்தாலும், புழுக்கமான நாற்றம் வரும். எனவே துணிகளுக்கும் டெட்டால் போட்டு துவைக்கவேண்டும். காலையில் துவைத்த துணிகளை, வெயில் இருக்கும் போதே எடுத்துவைத்தால், மீண்டும் ஈரப்பதம் படியாது. பூஞ்சையும் வராது.
கழிப்பறை சுத்தம் மழைக்காலத்தில் ரொம்ப அவசியம். சுவர்களும் ஈரம் படிந்திருப்பதால் துர்நாற்றம் வரும். கிருமிநாசினி திரவத்தை தினமும் தெளிக்க வேண்டும்.
மரக்கதவு, ஜன்னல்கள் ஈரத்தால் இறுகிவிடும். திறந்து, மூடுவது கஷ்டமாக இருக்கும். அடிக்கடி எண்ணெய் இட்டு, பராமரிக்க வேண்டும்.
வீட்டில் கப்போர்டு, ஷூ ஸ்டாண்டு போன்ற இடங்களில் சிலிகா ஜெல் பாக்கெட்டுகளை போட்டு வைக்கலாம் மழைக்காலத்தில் பூச்சிகள் அடைவது தவிர்க்கப்படும்.
மழைக்காலத்தில் பெட்ரூம், ஷோபா போன்ற இடங்களில் பயன்படுத்தும் விரிப்புகள், தலையணை உறைகளை லைட்கலரில் உபயோகிக்க வேண்டாம் ஏனெனில் அவை எளிதில் அழுக்காகிவிடும். எனவே டார்க் கலர் விரிப்புகளை பயன்படுத்தலாம் என்கின்றனர் நிபுணர்கள்.



Click it and Unblock the Notifications











