Latest Updates
-
நாக பஞ்சமி 2026: இந்த வருட நாக பஞ்சமி எந்த நாளில் வருகிறது? இந்த நாளில் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? -
வெஜ் கோலாப்பூரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு சூப்பரா இருக்கும் -
சனி-குரு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சுதந்திர தின ஸ்பெஷல் மூவர்ண பூரியும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 15 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டத்தின் சாவி கைக்கு வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 25-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்கு வருமானம் அதிகரிக்கப்போகுது! -
புதன் ஆயில்ய நட்சத்திரத்திற்கு செல்வதால் புது சொத்துக்களை வாங்கும் யோகமுள்ள 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா -
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்தன்று இந்த ஸ்டைலில் வாழ்த்துக்களை சொல்லுங்க.. -
தேசியக்கொடியின் நடுவில் அசோக சக்கரம் ஏன் நீல நிறத்தில் உள்ளது? அதில் ஏன் 24 ஆரங்கள் உள்ளது தெரியுமா? -
ரோட்டுக்கடை இட்லி தக்காளி சாம்பார் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. அள்ளும்..
மழைக்காலத்தில் வீட்டை கவனிங்க!

மழைக்காலத்தில் மரக்கதவு, ஜன்னல்களை மூடித்திறப்பதும் கடினம் தான். எனவேதான் குடும்பத்தலைவிகளுக்கு வீட்டை பராமரிப்பு என்பது, மழைக்காலத்தில் சற்றே கூடுதல் வேலைதான். என்ன செய்தால் எளிதாக வீட்டின் பராமரிக்கலாம் என்று ஆலோசனை கூறியுள்ளனர் நிபுணர்கள் படியுங்களேன்.
மழைக்காலத்தில் தரை முழுவதும் கிருமிகளின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் எனவே வீட்டின் தரைகளை கிருமிநாசினி திரவம் கொண்டு சுத்தம் செய்யவேண்டும். வீட்டை கழுவி விடாமல், மாப்' கொண்டு துடைத்தால் ஈரத்தை தவிர்க்கலாம்.வீடுமுழுவதும் சுத்தமான சாம்பிராணி புகையை அடிக்கடி காட்டினால், கொசுக்கள் ஓடிவிடும் வீடும் மணக்கும். மிதியடிகளை, இரண்டு நாளைக்கு ஒருமுறையாவது மாற்ற வேண்டும்.
துணிகள் காய்ந்தாலும், புழுக்கமான நாற்றம் வரும். எனவே துணிகளுக்கும் டெட்டால் போட்டு துவைக்கவேண்டும். காலையில் துவைத்த துணிகளை, வெயில் இருக்கும் போதே எடுத்துவைத்தால், மீண்டும் ஈரப்பதம் படியாது. பூஞ்சையும் வராது.
கழிப்பறை சுத்தம் மழைக்காலத்தில் ரொம்ப அவசியம். சுவர்களும் ஈரம் படிந்திருப்பதால் துர்நாற்றம் வரும். கிருமிநாசினி திரவத்தை தினமும் தெளிக்க வேண்டும்.
மரக்கதவு, ஜன்னல்கள் ஈரத்தால் இறுகிவிடும். திறந்து, மூடுவது கஷ்டமாக இருக்கும். அடிக்கடி எண்ணெய் இட்டு, பராமரிக்க வேண்டும்.
வீட்டில் கப்போர்டு, ஷூ ஸ்டாண்டு போன்ற இடங்களில் சிலிகா ஜெல் பாக்கெட்டுகளை போட்டு வைக்கலாம் மழைக்காலத்தில் பூச்சிகள் அடைவது தவிர்க்கப்படும்.
மழைக்காலத்தில் பெட்ரூம், ஷோபா போன்ற இடங்களில் பயன்படுத்தும் விரிப்புகள், தலையணை உறைகளை லைட்கலரில் உபயோகிக்க வேண்டாம் ஏனெனில் அவை எளிதில் அழுக்காகிவிடும். எனவே டார்க் கலர் விரிப்புகளை பயன்படுத்தலாம் என்கின்றனர் நிபுணர்கள்.



Click it and Unblock the Notifications