Latest Updates
-
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது -
May Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. மே மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
ஐயங்கார் ஸ்டைல் பருப்பு உருண்டை குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, செமையா இருக்கும் -
வெயிலால் கருமையாகியுள்ள சருமத்தை வெள்ளையாக்கணுமா? அப்ப இந்த முலாம் பழ ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
வெயிலின் தாக்கத்தை குறைக்க வாஸ்து செடிகளுக்கு மவுசு: மணி பிளாண்ட், அரேகா பாம் வாங்க மக்கள் ஆர்வம் -
செஃப் தாமு ஸ்டைல் பருப்பு ரசம் - 5 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க...
துவைக்கும் போது நாம் செய்யும் பொதுவான 8 தவறுகள்!
இங்கு துவைக்கும் போது நீர் மற்றும் துணி சார்ந்து நாம் செய்யும் பொதுவான சில தவறுகள் பற்றி கூறப்பட்டுள்ளது.
புது ஆடைகள் வாங்குவது என்பது எல்லாருக்கும் இருக்கும் பெரிய ஆசை. ஆடைகளை தேடி, தேடி ஆசையுடன் வாங்குவார்கள். ஆனால், இந்த ஆசையும், மோகமும் புது பொண்டாட்டி போல ஆகிவிடுகிறது. ஆரம்பத்தில் அதன் மீது இருக்கும் விருப்பம், தொடர்ந்து இருப்பதில்லை.
சரியாக துவைக்க மாட்டார்கள், பல நாள் லாண்டரி கூடையில் அந்த துணி அழுக்காகவே கிடக்கும். இப்படி பலவன இருக்கிறது. இதில் முக்கியமாக நாம் செய்யும் தவறு துவைக்கும் போது தான் நிகழ்கிறது...

தவறு #1
ஒரு முறை பயன்படுத்திய உடனே துணி துவைக்க வேண்டும் என்பது அவசியமில்லை. கெட்ட வாடை, அழுக்கு அல்லது வியர்வை அதிகம் உறுஞ்சி இருந்தால் மட்டுமே துவைத்தால் போதும்.

தவறு #2
வெளிர் நிற துணிகளை வண்ண துணிகளுடன் கலக்க கூடாது. அது வெள்ளை என்று மட்டுமில்லாமல் எதுவாக இருந்தாலும் இரண்டையும் சேர்த்து துவைக்க கூடாது.

தவறு #3
அதிக நேரம் சோப்பு நீரில் ஊறவைத்தல், அதிக நேரம் மெஷினில் துவைத்தல் போன்றவை அழுக்கு போக்க செய்யும் என எண்ண வேண்டாம். இது துணி மற்றும் ஆடையின் தரத்தை குறைக்க செய்யும்.

தவறு #4
சிலர் அதிகப்படியான டிடர்ஜென்ட் பயன்படுத்தினால் அழுக்கு முழுக்க போகும் என கருதுகின்றனர். இது முற்றிலும் தவறு. இதுவும் ஆடை மற்றும் நூலின் தரத்தை இழக்க செய்யும்.

தவறு #5
உள்ளாடைகளை சோப்பு போட்டு தான் துவைக்க வேண்டும் என்றில்லை. நீங்கள் குளித்த பிறகு அலாசி போட்டால் கூட போதுமானது.

தவறு #6
சட்டை, பேன்ட் எதுவாக இருந்தாலும் துவைக்கும் போது பட்டங்கள், ஜிப் போன்றவற்றை அவிழ்த்து துவைக்க வேண்டும். இல்லையேல் அதன் இறுக்கம் குறைந்து போகலாம், பட்டன் வலுவிழந்து போகலாம்.

தவறு #7
துவைத்த பிறகு நீண்ட நேரம் துணியை பக்கெட்டில் அல்லது வாஷிங் மெஷினில் போட்டு வைக்க வேண்டாம். இதனால் பாக்டீரியாக்கள் தாக்கம் பெருகும்.

தவறு #8
வாஷிங் மெஷின் பயன்படுத்துவோர், உங்கள் துணிகளின் மீது விருப்பம் கொண்டிருந்தால், மெஷினையும் அவ்வப்போது கழுவ வேண்டும்.



Click it and Unblock the Notifications