Latest Updates
-
ஆண்களே! உங்கள் விந்தணு ஆரோக்கியமா இருக்கானு தெரிஞ்சிகணுமா? இந்த அறிகுறிகளை செக் பண்ணி பாருங்க...! -
இந்த 4 ராசிக்காரங்க சாத்தானின் செல்ல குழந்தைகளாம்... தீய குணங்கள்தான் இவங்ககிட்ட அதிகமா இருக்குமாம்,,,! -
கொங்குநாடு தக்காளி குருமா ரெசிபி... இதை ஒருதடவை செஞ்சு பாருங்க...இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும்...! -
2K கிட்ஸ் அதிகம் விரும்பும் Slow Dating என்றால் என்ன? இளைஞர்கள் ஏன் டேட்டிங்கை விரும்புகிறார்கள் தெரியுமா? -
சனிபகவான்-சுக்கிரனின் அரிய இணைப்பால் இந்த 3 ராசிக்காரர்கள் வாழ்க்கையில் அற்புத மாற்றங்கள் நிகழப்போகுதாம்...! -
1/2 கப் கோதுமை ரவா இருந்தா.. காலையில் இந்த டிபனை செய்யுங்க.. கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 05 மார்ச் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க கவனமாக வாகனம் ஓட்டணும்...! -
12 ஆண்டுக்கு பின் நடக்கும் குருபகவானின் நேரடி இயக்கத்தால் இந்த 3 ராசிகள் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம்... -
வேர்க்கடலையுடன் இந்த 2 பொருட்களை சேர்த்து ஆந்திரா ஸ்டைலில் சட்னி அரைங்க... இட்லி, தோசைக்கு செமையா இருக்கும்... -
சூரியன்-புதன் உருவாக்கும் புதாதித்ய யோகம் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு பணமும், புகழும் குவியப்போகுதாம்...!
துவைக்கும் போது நாம் செய்யும் பொதுவான 8 தவறுகள்!
இங்கு துவைக்கும் போது நீர் மற்றும் துணி சார்ந்து நாம் செய்யும் பொதுவான சில தவறுகள் பற்றி கூறப்பட்டுள்ளது.
புது ஆடைகள் வாங்குவது என்பது எல்லாருக்கும் இருக்கும் பெரிய ஆசை. ஆடைகளை தேடி, தேடி ஆசையுடன் வாங்குவார்கள். ஆனால், இந்த ஆசையும், மோகமும் புது பொண்டாட்டி போல ஆகிவிடுகிறது. ஆரம்பத்தில் அதன் மீது இருக்கும் விருப்பம், தொடர்ந்து இருப்பதில்லை.
சரியாக துவைக்க மாட்டார்கள், பல நாள் லாண்டரி கூடையில் அந்த துணி அழுக்காகவே கிடக்கும். இப்படி பலவன இருக்கிறது. இதில் முக்கியமாக நாம் செய்யும் தவறு துவைக்கும் போது தான் நிகழ்கிறது...

தவறு #1
ஒரு முறை பயன்படுத்திய உடனே துணி துவைக்க வேண்டும் என்பது அவசியமில்லை. கெட்ட வாடை, அழுக்கு அல்லது வியர்வை அதிகம் உறுஞ்சி இருந்தால் மட்டுமே துவைத்தால் போதும்.

தவறு #2
வெளிர் நிற துணிகளை வண்ண துணிகளுடன் கலக்க கூடாது. அது வெள்ளை என்று மட்டுமில்லாமல் எதுவாக இருந்தாலும் இரண்டையும் சேர்த்து துவைக்க கூடாது.

தவறு #3
அதிக நேரம் சோப்பு நீரில் ஊறவைத்தல், அதிக நேரம் மெஷினில் துவைத்தல் போன்றவை அழுக்கு போக்க செய்யும் என எண்ண வேண்டாம். இது துணி மற்றும் ஆடையின் தரத்தை குறைக்க செய்யும்.

தவறு #4
சிலர் அதிகப்படியான டிடர்ஜென்ட் பயன்படுத்தினால் அழுக்கு முழுக்க போகும் என கருதுகின்றனர். இது முற்றிலும் தவறு. இதுவும் ஆடை மற்றும் நூலின் தரத்தை இழக்க செய்யும்.

தவறு #5
உள்ளாடைகளை சோப்பு போட்டு தான் துவைக்க வேண்டும் என்றில்லை. நீங்கள் குளித்த பிறகு அலாசி போட்டால் கூட போதுமானது.

தவறு #6
சட்டை, பேன்ட் எதுவாக இருந்தாலும் துவைக்கும் போது பட்டங்கள், ஜிப் போன்றவற்றை அவிழ்த்து துவைக்க வேண்டும். இல்லையேல் அதன் இறுக்கம் குறைந்து போகலாம், பட்டன் வலுவிழந்து போகலாம்.

தவறு #7
துவைத்த பிறகு நீண்ட நேரம் துணியை பக்கெட்டில் அல்லது வாஷிங் மெஷினில் போட்டு வைக்க வேண்டாம். இதனால் பாக்டீரியாக்கள் தாக்கம் பெருகும்.

தவறு #8
வாஷிங் மெஷின் பயன்படுத்துவோர், உங்கள் துணிகளின் மீது விருப்பம் கொண்டிருந்தால், மெஷினையும் அவ்வப்போது கழுவ வேண்டும்.



Click it and Unblock the Notifications











