Latest Updates
-
நாக பஞ்சமி 2026: இந்த வருட நாக பஞ்சமி எந்த நாளில் வருகிறது? இந்த நாளில் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? -
வெஜ் கோலாப்பூரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு சூப்பரா இருக்கும் -
சனி-குரு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சுதந்திர தின ஸ்பெஷல் மூவர்ண பூரியும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 15 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டத்தின் சாவி கைக்கு வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 25-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்கு வருமானம் அதிகரிக்கப்போகுது! -
புதன் ஆயில்ய நட்சத்திரத்திற்கு செல்வதால் புது சொத்துக்களை வாங்கும் யோகமுள்ள 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா -
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்தன்று இந்த ஸ்டைலில் வாழ்த்துக்களை சொல்லுங்க.. -
தேசியக்கொடியின் நடுவில் அசோக சக்கரம் ஏன் நீல நிறத்தில் உள்ளது? அதில் ஏன் 24 ஆரங்கள் உள்ளது தெரியுமா? -
ரோட்டுக்கடை இட்லி தக்காளி சாம்பார் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. அள்ளும்..
களைச்செடிகளின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்துவதற்கான சில எளிய வழிகள்!!!
தோட்டத்தில் செடிகளை கஷ்டப்பட்டு நட்டு வைத்து வளர்த்து வருவோம். ஆனால் சில நேரங்களில் செடியின் வளர்ச்சியானது தடைப்டும். அதற்கு முக்கிய காரணம் தோட்டத்தில் களைச்செடிகள் வளர்ச்சியடைவது தான். களைச்செடிகள் என்பது தோட்டத்தில் வளரும் தேவையில்லாத செடிகள். இவை அதிக வளர்ச்சியுடையவை. அதிலும் இந்த களைச்செடிகளுக்கு எந்த ஒரு விதைகளோ தேவையில்லை. தானாகவே தோட்டத்தில் உள்ள இடங்களில் வளரக்கூடியது.
இவை தோட்டத்தில் அதிகம் இருந்தால், செடிகளின் வளர்ச்சிக்கு தடையாக இருப்பதோடு, செடிகளுக்கு போட்டும் அனைத்து சத்துக்களையும் களைச்செடிகள் உறிஞ்சிக் கொண்டு வளர ஆரம்பிக்கும். எனவே செடிகள் நன்கு ஆரோக்கியமாக வளர வேண்டுமென்று ஆசைப்பட்டால், முதலில் களைச்செடிகளை தோட்டத்தில் இருந்து அகற்ற வேண்டும். அதற்கான சில எளிய வழிகளைத் தான் கீழே கொடுத்துள்ளோம். அதை முயற்சித்தால், களைச்செடிகளின் வளர்ச்சியை தடை செய்துவிடலாம்.

* தோட்டம் சிறியதாக இருந்து, களைச்செடிகள் அதிகம் இருந்தால், அவற்றின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்த வேரோடு பிடுங்கிவிட்டால், களைச்செடிகள் வளராமல் தடுக்கலாம்.
* இல்லையெனில் தோட்டக்கருவிகளைக் கொண்டு கொத்திவிட்டு, பின் அவற்றை அப்புறப்படுத்தலாம்.
* கெமிக்கல் இல்லாத பொருட்களைக் கொண்டு, களைச்செடிகளை அழிக்க நினைத்தால், களைகளைக் கட்டுப்படுத்தும் பூச்சிகளைப் பயன்படுத்தலாம். ஆனால் இந்த முறையில் தோட்டமானது பெரியதாக இருந்தால் தான் நல்ல பலன் கிடைக்கும். மேலும், உயிரியல் களைக் கட்டுப்பாடு ஒரு நீண்ட கால முறையாகும்.
* தற்போது மார்கெட்டில் பல ஆர்கானிக் களைக்கொல்லிகள் கிடைக்கின்றன. அதில் ஆர்கானிக் சோப்பு மற்றும் செடி எண்ணெய் போன்றவை மிகவும் சிறந்த களைக்கொல்லிகளாகும். அதிலும் செரிவூட்டப்பட்ட வினிகரைப் பயன்படுத்தினால், இன்னும் நல்லப் பயனைப் பெறலாம்.
* குறிப்பாக மேற்கூறியவற்றையெல்லாம் மேற்கொண்டால் மட்டும் போதாது, அவ்வப்போது களைகளின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்த மண் மற்றும் சாகுபடியை கண்காணிப்பதன் மூலம், வளர்ச்சியைக் கட்டுப்படுத்துவதோடு, வளர்ச்சியை முற்றிலும் தடுக்கவும் முடியும். அதிலும் களைச்செடிகள் வளர ஆரம்பிக்கும் முன்பே அதனை பிடுங்கிப் போட்டால், அது பரவுவதைத் தவிர்க்கலாம்.



Click it and Unblock the Notifications