Latest Updates
-
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது -
May Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. மே மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்...
வீட்டுக்குள் தோட்டம் போடுறவங்களுக்கு உபயோகமான டிப்ஸ்

சூரிய வெளிச்சம்
தாவரங்களின் வளர்ச்சிக்கு சூரிய வெளிச்சம் மிகவும் அவசியமான ஒன்று. ஜன்னல் அருகில் காலி இடம் இருந்தால் அங்கு அழகு செடிகளை வளர்க்கலாம். சில செடிகளுக்கு குறைவான சூரிய வெளிச்சம் இருந்தாலே போதுமானது அந்த மாதிரியான செடிகளை கிச்சன், டைனிங்டேபிள், ஷோகேஸ் அருகில் வைத்து வளர்க்கலாம்.
வீட்டுற்குள் வளர்க்கும் தாவரங்களை சரியான வகையை தேர்ந்தெடுக்கவேண்டும். காக்டஸ், போன்சாய், கற்றாழை, மூங்கில் போன்ற தாவரங்களை வீட்டிற்குள் வளர்க்கலாம். சரியான இடத்தை தேர்ந்தெடுத்து அதற்குரிய இடத்தில் தாவர தொட்டிகளை வைக்கலாம்
அழகான தொட்டிகள்
இன்றைக்கு அழகழகான டிசைன்களில் தொட்டிகள் கிடைக்கின்றன. வீட்டிற்குள் வளர்ப்பதற்கு என்று சரியான வடிகால் வசதியுள்ள தொட்டிகள் விற்பனை செய்யப்படுகின்றன. அந்த மாதிரியான தொட்டிகளை தேர்வு செய்து தாவரங்களை வளர்க்க வேண்டும். தண்ணீர் வழிந்து வீட்டு தரைகளில் சேதம் ஏற்படாமல் இருக்க தொட்டிகளின் அடியில் அழகான ட்ரே, தட்டு போன்றவைகளை வைக்கலாம்.
சரியான உரமிடுங்கள்
வீட்டுத்தோட்டமோ, வெளியில் போட்டிருக்கும் தோட்டமோ எதுவென்றாலும் சரியான உரமிடவேண்டும். அப்பொழுதுதான் தாவரங்களின் வளர்ச்சி செழிப்பாக இருக்கும். வீட்டிற்குள் வளர்க்கும் தாவரங்களுக்கு இரண்டு தாத இடைவெளியில் உரமிடவேண்டும். தண்ணீர் ஊற்றும்போது எளிதாக அந்த உரம் கரைந்து தாவரங்களுக்கு கிடைக்கும் வகையில் வடிகால் வசதி அமைந்திருக்க வேண்டும். அதேபோல் காற்று வசதியும், சூரிய வெளிச்சமும் சரியான அளவு கிடைக்கச் செய்யவேண்டும். ஏனெனில் அதுவே தாவரங்களின் வளர்ச்சிக்கு ஏற்றது. தினசரி மாலை நேரத்தில் சூரியன் மறைந்த உடன் வீட்டு பால்கனியில் தொட்டிகளை வைத்து சுவாசிக்க செய்யலாம். இதனால் தாவரங்களுக்குத் தேவையான ஆக்ஸிசன் கிடைக்கும். தவாரங்களும் புத்துணர்ச்சியோடு இருக்கும்.



Click it and Unblock the Notifications