Latest Updates
-
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க!
வீட்டுக்குள் தோட்டம் போடுறவங்களுக்கு உபயோகமான டிப்ஸ்

சூரிய வெளிச்சம்
தாவரங்களின் வளர்ச்சிக்கு சூரிய வெளிச்சம் மிகவும் அவசியமான ஒன்று. ஜன்னல் அருகில் காலி இடம் இருந்தால் அங்கு அழகு செடிகளை வளர்க்கலாம். சில செடிகளுக்கு குறைவான சூரிய வெளிச்சம் இருந்தாலே போதுமானது அந்த மாதிரியான செடிகளை கிச்சன், டைனிங்டேபிள், ஷோகேஸ் அருகில் வைத்து வளர்க்கலாம்.
வீட்டுற்குள் வளர்க்கும் தாவரங்களை சரியான வகையை தேர்ந்தெடுக்கவேண்டும். காக்டஸ், போன்சாய், கற்றாழை, மூங்கில் போன்ற தாவரங்களை வீட்டிற்குள் வளர்க்கலாம். சரியான இடத்தை தேர்ந்தெடுத்து அதற்குரிய இடத்தில் தாவர தொட்டிகளை வைக்கலாம்
அழகான தொட்டிகள்
இன்றைக்கு அழகழகான டிசைன்களில் தொட்டிகள் கிடைக்கின்றன. வீட்டிற்குள் வளர்ப்பதற்கு என்று சரியான வடிகால் வசதியுள்ள தொட்டிகள் விற்பனை செய்யப்படுகின்றன. அந்த மாதிரியான தொட்டிகளை தேர்வு செய்து தாவரங்களை வளர்க்க வேண்டும். தண்ணீர் வழிந்து வீட்டு தரைகளில் சேதம் ஏற்படாமல் இருக்க தொட்டிகளின் அடியில் அழகான ட்ரே, தட்டு போன்றவைகளை வைக்கலாம்.
சரியான உரமிடுங்கள்
வீட்டுத்தோட்டமோ, வெளியில் போட்டிருக்கும் தோட்டமோ எதுவென்றாலும் சரியான உரமிடவேண்டும். அப்பொழுதுதான் தாவரங்களின் வளர்ச்சி செழிப்பாக இருக்கும். வீட்டிற்குள் வளர்க்கும் தாவரங்களுக்கு இரண்டு தாத இடைவெளியில் உரமிடவேண்டும். தண்ணீர் ஊற்றும்போது எளிதாக அந்த உரம் கரைந்து தாவரங்களுக்கு கிடைக்கும் வகையில் வடிகால் வசதி அமைந்திருக்க வேண்டும். அதேபோல் காற்று வசதியும், சூரிய வெளிச்சமும் சரியான அளவு கிடைக்கச் செய்யவேண்டும். ஏனெனில் அதுவே தாவரங்களின் வளர்ச்சிக்கு ஏற்றது. தினசரி மாலை நேரத்தில் சூரியன் மறைந்த உடன் வீட்டு பால்கனியில் தொட்டிகளை வைத்து சுவாசிக்க செய்யலாம். இதனால் தாவரங்களுக்குத் தேவையான ஆக்ஸிசன் கிடைக்கும். தவாரங்களும் புத்துணர்ச்சியோடு இருக்கும்.



Click it and Unblock the Notifications











