Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
வீட்டுக்குள் தோட்டம் போடுறவங்களுக்கு உபயோகமான டிப்ஸ்

சூரிய வெளிச்சம்
தாவரங்களின் வளர்ச்சிக்கு சூரிய வெளிச்சம் மிகவும் அவசியமான ஒன்று. ஜன்னல் அருகில் காலி இடம் இருந்தால் அங்கு அழகு செடிகளை வளர்க்கலாம். சில செடிகளுக்கு குறைவான சூரிய வெளிச்சம் இருந்தாலே போதுமானது அந்த மாதிரியான செடிகளை கிச்சன், டைனிங்டேபிள், ஷோகேஸ் அருகில் வைத்து வளர்க்கலாம்.
வீட்டுற்குள் வளர்க்கும் தாவரங்களை சரியான வகையை தேர்ந்தெடுக்கவேண்டும். காக்டஸ், போன்சாய், கற்றாழை, மூங்கில் போன்ற தாவரங்களை வீட்டிற்குள் வளர்க்கலாம். சரியான இடத்தை தேர்ந்தெடுத்து அதற்குரிய இடத்தில் தாவர தொட்டிகளை வைக்கலாம்
அழகான தொட்டிகள்
இன்றைக்கு அழகழகான டிசைன்களில் தொட்டிகள் கிடைக்கின்றன. வீட்டிற்குள் வளர்ப்பதற்கு என்று சரியான வடிகால் வசதியுள்ள தொட்டிகள் விற்பனை செய்யப்படுகின்றன. அந்த மாதிரியான தொட்டிகளை தேர்வு செய்து தாவரங்களை வளர்க்க வேண்டும். தண்ணீர் வழிந்து வீட்டு தரைகளில் சேதம் ஏற்படாமல் இருக்க தொட்டிகளின் அடியில் அழகான ட்ரே, தட்டு போன்றவைகளை வைக்கலாம்.
சரியான உரமிடுங்கள்
வீட்டுத்தோட்டமோ, வெளியில் போட்டிருக்கும் தோட்டமோ எதுவென்றாலும் சரியான உரமிடவேண்டும். அப்பொழுதுதான் தாவரங்களின் வளர்ச்சி செழிப்பாக இருக்கும். வீட்டிற்குள் வளர்க்கும் தாவரங்களுக்கு இரண்டு தாத இடைவெளியில் உரமிடவேண்டும். தண்ணீர் ஊற்றும்போது எளிதாக அந்த உரம் கரைந்து தாவரங்களுக்கு கிடைக்கும் வகையில் வடிகால் வசதி அமைந்திருக்க வேண்டும். அதேபோல் காற்று வசதியும், சூரிய வெளிச்சமும் சரியான அளவு கிடைக்கச் செய்யவேண்டும். ஏனெனில் அதுவே தாவரங்களின் வளர்ச்சிக்கு ஏற்றது. தினசரி மாலை நேரத்தில் சூரியன் மறைந்த உடன் வீட்டு பால்கனியில் தொட்டிகளை வைத்து சுவாசிக்க செய்யலாம். இதனால் தாவரங்களுக்குத் தேவையான ஆக்ஸிசன் கிடைக்கும். தவாரங்களும் புத்துணர்ச்சியோடு இருக்கும்.



Click it and Unblock the Notifications