Just In
- 22 min ago எப்பவும் ஒரே மாதிரி சட்னி செய்யாம.. ஒருமுறை தீயில் சுட்ட தக்காளி சட்னியை செய்யுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்..
- 3 hrs ago Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- 9 hrs ago 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- 9 hrs ago 40 வருடங்கள் கழித்து கருவுற்றால் இந்த விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்!
Don't Miss
- News ஒரு ஓட்டுக்காக போராடிய "சர்க்கார்" விஜய் நிலையா இது.. கட்சி தலைவரான முதல் தேர்தலிலேயே ஏமாற்றம்
- Movies BMW கார் வாங்கிய இயக்குநர்.. எடுத்ததே ஒரே படம்.. குதர்க்கமாக கேள்வி கேட்கும் நெட்டிசன்ஸ்!
- Sports ரூ.14 கோடி வீரருக்கு ஆப்பு.. லக்னோ பிட்சால் சிஎஸ்கே அணியில் நடக்கப்போகும் மாற்றம்.. ருதுராஜ் முடிவு!
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
வீட்டை அழகாக்கும் நந்தவனம்!
வீடுகளுக்கு ஏற்ற பெருஞ்செடிகள்
இத்தகைய பெருஞ்செடிகள் சற்றே கடினதோற்றத்தில் அழகிய இலை மற்றும் பூக்களைக் கொண்டவை. சிறிய வீடுகள் மற்றும் தோட்டத்திற்கு மிகவும் ஏற்றவை. வீடுகளின் முன்பகுதியில் பெரும்பாலான பூக்கின்ற தன்மையையுடைய செடிகள் வளர்க்கப்படுகின்றன.
சவுக்கு, லட்சக்கொட்டைக் கீரை போன்ற இலை அழகுப் பெருஞ்செடிகள் மற்றும் செம்பருத்தி, டெக்கோமா, இச்சோரா போன்ற பூ அழகுப் பெருஞ்செடிகளும் வளர்க்கப்படுகின்றன. இத்தகைய செடிகள் பூந்தொட்டிகளிலும் வளர்க்க ஏற்றவை.
செம்பருத்தி, பவளமல்லி
உயரமாக வளரும் செம்பருத்தி செடிகள் வருடந்தோறும் பசுமையான இலைகளையும் அழகிய வண்ணங்களில் பூக்களையும் தர வல்லது. ஓரடுக்கு, பல அடுக்கு என பூக்கள் பூக்கும். அழகான இதழ்களை உடையது.
மல்லிகை , முல்லை போன்ற தாவரங்கள் வருடத்தில் 5-6 மாதங்கள் பூக்கும் தன்மையுடையது. அழகோடு வாசனையும் தரக் கூடியது. உயரமாக வளரும் பவள மல்லிச் செடியானது கீழ்நோக்கி கிளைத்து பூக்கும் தன்மையுடையது. பூக்கள் இரவு நேரத்தில் விரிவடைந்து நறுமணத்தைப் பரப்பும்.
இட்லிப்பூ
வருடந்தோறும் பூக்கின்ற தன்மையுடையது. சிறப்பு, வெள்ளை நிறங்களில் பூக்கும், தண்டு மூலம் பயிர்பெருக்கும். அதிக முட்கள் உள்ள லன்டானா செடி மிகவும் அடர்த்தியாக வளரும் மஞ்சள், சிவப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் பூக்கின்றன.
பென்டாஸ் எனப்படுவது ஒரு நீண்ட கால அலங்காரச் செடி ஆகும்.வெள்ளை சிவப்பு மற்றும் அடர் சிவப்பு நிறங்களில் பூக்கும்.
லட்சக் கொட்டைக் கீரை
லட்சக் கொட்டைக் கீரை தாவரமானது உயரமாக வளர்ந்து இளம்பச்சை மற்றும் மஞ்சள் கலந்து பச்சை நிறத்தில் இலைகள் அழகாக காணப்படும்.
ஓரடுக்கு மற்றும் நெருக்கமான இதழ்களுடைய நந்தியாவட்டை ஒரு அழகிய குட்டை வகை தாவரம்.
நித்திய கல்யாணி செடி அதிகம் கிளைத்து வருடந்தோறும் வெள்ளை சிவப்பு நிறங்களில் பூக்கும் ஒரு பொதுவான தாவரம்.
அகாலிபா எனப்படுவது அழகிய இலை அலங்காரச் செடி ஆகும். இந்தப் பூக்கள் மேல் நோக்கியோ, கீழ் நோக்கியோ வளரும் தன்மையுடையது.
காகிதப்பூ தாவரம் உயரமாக வளரும் ஒரு கொடி வகைத் தாவரம், முள் உள்ள இக்கொடிகள் நட்சத்திர வடிவ பூக்களை உடையது. வறட்சியை தாங்கி வளரும்.
டிசம்பர் கனகாம்பரம் அதிக உயரம் வளராத பெருஞ்செடி, மஞ்சள், வயலட் நிறத்தில் பூக்கள் பூக்கள் பூக்கும். பெரும்பாலும் பனிக்காலத்தில் பூத்துக் குலுங்கும்.
குரோட்டன்ஸ்
குரோட்டன்ஸ் செடிகள் மிதமான உயரத்தில் பல இலை வடிவம், வண்ணங்களில் வளரும் தன்மையுள்ளது. பவுட்டர் பப் சற்றே குட்டையான இச்செடிகளின் கிளைகள் அகன்றதாகவும் பரந்ததாகவும் இருக்கும் பூக்கள் அடர்சிவப்பு நிறத்தில் பூக்கும் தன்மையுடையது.
வண்டு கொல்லிகள்
உயரமாக வளரும், அதிகம் கிளைக்காத செடி, பூக்கள் அடர் மஞ்சள் நிறத்திலும் நீளமாக இறக்கை வடிவிலான காய்கள் இச்செடியின் அழகுக்குக் காரணமானவை.
டுராண்டா
உயரமாக வளரும் முள்ளுடைய செடி வகை. ஊதா நிற பூக்களையும், மஞ்சள் நிற காய்களையும் கொண்டது. இலை அழகு கண்ணைக் கவரும். முள்ளுடைய செடி உடையதால் அடிக்கடி வெட்டிவிட வேண்டியிருக்கும். கிராப்டோபில்லம் எனப்படும் இலை அழகுச் செடியான தாவரம் நிழலுள்ள இடங்களில் வளர்க்க ஏற்றது.
இந்தச் செடிகளை மண்ணின் தன்மைக் கேற்ப வளர்த்தால் நம்முடைய வீடும் பூப் பூக்கும் நந்தவனமாகும்.