Latest Updates
-
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம்
வீட்டை அழகாக்கும் நந்தவனம்!

வீடுகளுக்கு ஏற்ற பெருஞ்செடிகள்
இத்தகைய பெருஞ்செடிகள் சற்றே கடினதோற்றத்தில் அழகிய இலை மற்றும் பூக்களைக் கொண்டவை. சிறிய வீடுகள் மற்றும் தோட்டத்திற்கு மிகவும் ஏற்றவை. வீடுகளின் முன்பகுதியில் பெரும்பாலான பூக்கின்ற தன்மையையுடைய செடிகள் வளர்க்கப்படுகின்றன.
சவுக்கு, லட்சக்கொட்டைக் கீரை போன்ற இலை அழகுப் பெருஞ்செடிகள் மற்றும் செம்பருத்தி, டெக்கோமா, இச்சோரா போன்ற பூ அழகுப் பெருஞ்செடிகளும் வளர்க்கப்படுகின்றன. இத்தகைய செடிகள் பூந்தொட்டிகளிலும் வளர்க்க ஏற்றவை.
செம்பருத்தி, பவளமல்லி
உயரமாக வளரும் செம்பருத்தி செடிகள் வருடந்தோறும் பசுமையான இலைகளையும் அழகிய வண்ணங்களில் பூக்களையும் தர வல்லது. ஓரடுக்கு, பல அடுக்கு என பூக்கள் பூக்கும். அழகான இதழ்களை உடையது.
மல்லிகை , முல்லை போன்ற தாவரங்கள் வருடத்தில் 5-6 மாதங்கள் பூக்கும் தன்மையுடையது. அழகோடு வாசனையும் தரக் கூடியது. உயரமாக வளரும் பவள மல்லிச் செடியானது கீழ்நோக்கி கிளைத்து பூக்கும் தன்மையுடையது. பூக்கள் இரவு நேரத்தில் விரிவடைந்து நறுமணத்தைப் பரப்பும்.
இட்லிப்பூ
வருடந்தோறும் பூக்கின்ற தன்மையுடையது. சிறப்பு, வெள்ளை நிறங்களில் பூக்கும், தண்டு மூலம் பயிர்பெருக்கும். அதிக முட்கள் உள்ள லன்டானா செடி மிகவும் அடர்த்தியாக வளரும் மஞ்சள், சிவப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் பூக்கின்றன.
பென்டாஸ் எனப்படுவது ஒரு நீண்ட கால அலங்காரச் செடி ஆகும்.வெள்ளை சிவப்பு மற்றும் அடர் சிவப்பு நிறங்களில் பூக்கும்.
லட்சக் கொட்டைக் கீரை
லட்சக் கொட்டைக் கீரை தாவரமானது உயரமாக வளர்ந்து இளம்பச்சை மற்றும் மஞ்சள் கலந்து பச்சை நிறத்தில் இலைகள் அழகாக காணப்படும்.
ஓரடுக்கு மற்றும் நெருக்கமான இதழ்களுடைய நந்தியாவட்டை ஒரு அழகிய குட்டை வகை தாவரம்.
நித்திய கல்யாணி செடி அதிகம் கிளைத்து வருடந்தோறும் வெள்ளை சிவப்பு நிறங்களில் பூக்கும் ஒரு பொதுவான தாவரம்.
அகாலிபா எனப்படுவது அழகிய இலை அலங்காரச் செடி ஆகும். இந்தப் பூக்கள் மேல் நோக்கியோ, கீழ் நோக்கியோ வளரும் தன்மையுடையது.
காகிதப்பூ தாவரம் உயரமாக வளரும் ஒரு கொடி வகைத் தாவரம், முள் உள்ள இக்கொடிகள் நட்சத்திர வடிவ பூக்களை உடையது. வறட்சியை தாங்கி வளரும்.
டிசம்பர் கனகாம்பரம் அதிக உயரம் வளராத பெருஞ்செடி, மஞ்சள், வயலட் நிறத்தில் பூக்கள் பூக்கள் பூக்கும். பெரும்பாலும் பனிக்காலத்தில் பூத்துக் குலுங்கும்.
குரோட்டன்ஸ்
குரோட்டன்ஸ் செடிகள் மிதமான உயரத்தில் பல இலை வடிவம், வண்ணங்களில் வளரும் தன்மையுள்ளது. பவுட்டர் பப் சற்றே குட்டையான இச்செடிகளின் கிளைகள் அகன்றதாகவும் பரந்ததாகவும் இருக்கும் பூக்கள் அடர்சிவப்பு நிறத்தில் பூக்கும் தன்மையுடையது.
வண்டு கொல்லிகள்
உயரமாக வளரும், அதிகம் கிளைக்காத செடி, பூக்கள் அடர் மஞ்சள் நிறத்திலும் நீளமாக இறக்கை வடிவிலான காய்கள் இச்செடியின் அழகுக்குக் காரணமானவை.
டுராண்டா
உயரமாக வளரும் முள்ளுடைய செடி வகை. ஊதா நிற பூக்களையும், மஞ்சள் நிற காய்களையும் கொண்டது. இலை அழகு கண்ணைக் கவரும். முள்ளுடைய செடி உடையதால் அடிக்கடி வெட்டிவிட வேண்டியிருக்கும். கிராப்டோபில்லம் எனப்படும் இலை அழகுச் செடியான தாவரம் நிழலுள்ள இடங்களில் வளர்க்க ஏற்றது.
இந்தச் செடிகளை மண்ணின் தன்மைக் கேற்ப வளர்த்தால் நம்முடைய வீடும் பூப் பூக்கும் நந்தவனமாகும்.



Click it and Unblock the Notifications











