Latest Updates
-
மணமணக்கும் பன்னீர் பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.! -
ஜூலை 20-ல் சூரியன் நட்சத்திரத்தை மாற்றுவதால் இரட்டை ராஜயோகத்தை பெறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
இந்த 5 காலை பழக்கங்கள் இதய நோயின் அபாயத்தை அதிகரிக்குமாம்.. உஷார்.. -
400 ஆண்டுக்கு முன் தோன்றி இப்போதும் செயல்பாட்டில் உள்ள உலகின் முதல் வங்கி எது? அதன் முதலாளி யார் தெரியுமா? -
ராகுவின் நட்சத்திர பெயர்ச்சி: ஆகஸ்ட் 02 முதல் இந்த 4 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுது! -
மசாலா மினி இட்லி - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு சாப்பிடுங்க.. -
இன்றைய ராசிபலன் 20 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் -
ஜூலை 27-ல் சனிபகவான் வக்ர பெயர்ச்சியை தொடங்குவதால் 138 நாட்கள் துரதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
மணமணக்கும் மல்லி வெண் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
இந்த 5 ரேகைகளில் ஒன்று கையில் இருப்பவர்களுக்கு நிச்சயம் காதல் திருமணம்தான் நடக்குமாம் - உங்க கையில் இருக்கா?
செடிகள் செழிப்பாக வளர வேண்டுமா?

செடிகள் செழிப்பாக வளர...
1. வீட்டில் சமைக்க பயன்படுத்தும் பூண்டை தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து, அந்த தண்ணீரை ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொள்ளவும். பின் அந்த தண்ணீரை தோட்டத்தில் உள்ள பூச்சிகளால் பாதிக்கப்பட்ட செடிகளின் மீது தெளித்தால், பூச்சிகள் அழிந்துவிடும். இதனால் செடிகளானது எந்த ஒரு பூச்சிகளாலும் தாக்கப்படாமல் இருக்கும்.
2. வெள்ளை அல்லது ஆப்பிள் பழச்சாற்றால் ஆன வினிகரை, தண்ணீரில் கலந்து, செடிகளின் மீது தெளித்தால் களை மற்றும் பூச்சிகள் அழிந்து, செடிகளின் வளர்ச்சியானது அதிகரிக்கும். இந்த கலவையை ஒன்று அல்லது இரண்டு வாரங்களுக்கு கூட சேமித்து வைக்க முடியும்.
3. வேப்ப இலை ஒரு சிறந்த இயற்கை உரம். இந்த உரத்தை எளிதில் வீட்டிலேயே தயாரிக்க முடியும். அதற்கு சிறிது வேப்பிலையை தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து, அந்த நீரை தோட்டத்தில் உள்ள செடிகளுக்கு தெளிக்க வேண்டும். அதனால் தோட்டத்தில் செடிகளை தாக்கும் பூச்சிகள், வண்டுகள் அழியும். மேலும் தோட்டத்தில் பாம்புகள் வராமலும் இருக்கும். அதிலும் வேப்பிலை கொசுக்கள் மற்றும் சிலந்திகளையும் அழித்துவிடும்.
4. வீட்டில் உடம்பு சரியில்லை என்று வாங்கி வைத்திருக்கும் மாத்திரைகளை செடிகளுக்கு பொடி செய்து தூவினால், செடிகள் நன்கு செழிப்பாக வளரும்.
5. தண்ணீரை கொதிக்க வைத்து செடிகள் இருக்கும் நிலத்தில் ஊற்றலாம். இதனால் நிலத்தில் இருக்கும் பாக்டீரியா, பாசி மற்றும் எறும்புகள் அழிந்துவிடும். வேண்டுமென்றால் மிளகுத்தூள் அல்லது உப்பு சேர்த்து கூட ஊற்றலாம்.
இவ்வாறு இயற்கையான முறையில் வீட்டில் இருக்கும் பொட்களை வைத்து செய்து, செடிகளை செழிப்பாக வளர்த்து சந்தோஷப்படுங்கள்.



Click it and Unblock the Notifications