Latest Updates
-
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க
செடிகள் செழிப்பாக வளர வேண்டுமா?

செடிகள் செழிப்பாக வளர...
1. வீட்டில் சமைக்க பயன்படுத்தும் பூண்டை தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து, அந்த தண்ணீரை ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொள்ளவும். பின் அந்த தண்ணீரை தோட்டத்தில் உள்ள பூச்சிகளால் பாதிக்கப்பட்ட செடிகளின் மீது தெளித்தால், பூச்சிகள் அழிந்துவிடும். இதனால் செடிகளானது எந்த ஒரு பூச்சிகளாலும் தாக்கப்படாமல் இருக்கும்.
2. வெள்ளை அல்லது ஆப்பிள் பழச்சாற்றால் ஆன வினிகரை, தண்ணீரில் கலந்து, செடிகளின் மீது தெளித்தால் களை மற்றும் பூச்சிகள் அழிந்து, செடிகளின் வளர்ச்சியானது அதிகரிக்கும். இந்த கலவையை ஒன்று அல்லது இரண்டு வாரங்களுக்கு கூட சேமித்து வைக்க முடியும்.
3. வேப்ப இலை ஒரு சிறந்த இயற்கை உரம். இந்த உரத்தை எளிதில் வீட்டிலேயே தயாரிக்க முடியும். அதற்கு சிறிது வேப்பிலையை தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து, அந்த நீரை தோட்டத்தில் உள்ள செடிகளுக்கு தெளிக்க வேண்டும். அதனால் தோட்டத்தில் செடிகளை தாக்கும் பூச்சிகள், வண்டுகள் அழியும். மேலும் தோட்டத்தில் பாம்புகள் வராமலும் இருக்கும். அதிலும் வேப்பிலை கொசுக்கள் மற்றும் சிலந்திகளையும் அழித்துவிடும்.
4. வீட்டில் உடம்பு சரியில்லை என்று வாங்கி வைத்திருக்கும் மாத்திரைகளை செடிகளுக்கு பொடி செய்து தூவினால், செடிகள் நன்கு செழிப்பாக வளரும்.
5. தண்ணீரை கொதிக்க வைத்து செடிகள் இருக்கும் நிலத்தில் ஊற்றலாம். இதனால் நிலத்தில் இருக்கும் பாக்டீரியா, பாசி மற்றும் எறும்புகள் அழிந்துவிடும். வேண்டுமென்றால் மிளகுத்தூள் அல்லது உப்பு சேர்த்து கூட ஊற்றலாம்.
இவ்வாறு இயற்கையான முறையில் வீட்டில் இருக்கும் பொட்களை வைத்து செய்து, செடிகளை செழிப்பாக வளர்த்து சந்தோஷப்படுங்கள்.



Click it and Unblock the Notifications