Latest Updates
-
ஆங்கிலேயர்களுக்கே கடன் கொடுத்து இந்தியாவில் முதன் முதலாக கார் வாங்கிய பணக்கார வியாபாரி யார் தெரியுமா? -
மீன ராசியில் அஸ்தமனமாகும் சனி பகவான்: மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்... -
கடுகளவும் பொறுமையில்லாத 4 ராசிக்காரங்க இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
மூங்கில் அரிசி கிச்சடி - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 09 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு வெற்றிகள் குவியும் நாளாக இருக்குமாம்...! -
கும்ப ராசியில் உதயமாகும் புதன்: மார்ச் 14 முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும்... -
எவ்வளவு வயசானாலும் இளமையா காட்சியளிக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க.. -
காலிஃப்ளவரும், பட்டாணியும் இருந்தா.. இந்த மாதிரி கிரேவி செய்யுங்க.. சப்பாத்தி வேற லெவல்-ல இருக்கும்.. -
குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைவதால் மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
ஆட்டு ஈரலை இப்படி வறுவல் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட போட்டி போட்டு காலி பண்ணுவாங்க...
வீட்டிற்கு அழகூட்டும் கொடிவகை தாவரங்கள்

அடினோகேளிமா (பூண்டு கொடி)
பசுமையான இலைகளைக் கொண்ட வெண்மை கலந்த சிவப்பு நிறத்தில் பூக்கும் ஒரு கொடி அக்டோபர் – பிப்ரவரி மாதங்களில் பூக்கும். விண்பதியம் மூலம் பயிர்ப் பெருக்கம் செய்யலாம்.
செங்காந்தள் மலர்
தமிழ்நாட்டின் தேசிய மலர் எனப்படும் செங்காந்தள் மலர்கள் பிரிந்த நிலையில் அழகிய சிவப்பு மஞ்சள் நிறத்தில் இருக்கும். இது நலிவான கிளைகளையுடைய கொடி வகை ஆகும்.
ஹோம்ஸ்க்கியான்டியா
வளைவாகப்படரும் கொடி குளிர்காலங்களில் பச்சை சிவப்பு நிற பூக்களைத் தரும்.
ரயில்வே கொடி (ஐப்போமியா)
ஊதா நிறப்பூக்களை உடையது. நீண்ட காலத்திற்கு பூக்கும் தன்மையுடையது.
ஜாக்மோன்ஷியா
வயலட் நிறத்தில் பூக்கள் மிகவும் அடர்த்தியாக பூக்கும் தன்மை பெற்றது. சற்றே நிழலில் உள்ள இடங்களுக்கேற்றது.
ஆண்டி கோனான் லெப்டோப்பஸ் இரயில் பூ
கிழங்கு வகை கொடியாகும், பூக்கள் சிவப்பு நிறமாகவும் தேனீக்களை கவரும் கொடியாகும்.
அலமாண்டா
மெல்லிய கிளைகளை உடையது. பூக்கள் மஞ்சள் நிறத்தில் மழைக்காலங்களில் பூக்கும் தன்மை உடையது
அஸ்பராகஸ் ப்ளுமோசஸ்
சிறகு போன்ற இலையுடைய கொடி வகையாகும். விதை மூலம் பயிர்பெருக்கம்.
பிக்னோனியா வெனுஸ்டா
இலையுதிர் கொடி வகை ஆகும். பூக்கள் அடர் ஆரஞ்சு நிறத்தில் தொங்கிய வண்ணமிருக்கும். மெதுவாக வளரும் கொடிகள். பதியன் மூலம் பயிர்பெருக்கம்.
சங்குப்பூ
விதை மூலம் பயிர்பெருக்கம்,தொட்டியில் வளர்க்க ஏற்றவை. வெள்ளை மற்றும் ஊதா நிறப்பூக்கள்
பெட்ரியா
கொடி அடர்த்தியாக வளரும். மலர்கள் நீல நிறத்தில் கொத்து கொத்தாக இருக்கும். பிப்ரவரி – நவம்பர் வரை பூக்கும்.
வெர்னோனியா
இந்த தாவரங்களை நிழல் பந்தல்கள் , அலங்கார குடைகள் , நடைபாதை பந்தல்கள் ஆகியவற்றில் படரவிட்டு நல்ல நிழல் பெறலாம்.
தாட்பூட் பழக்கொடி
பெரிய இலைகளுடன் அடர்த்தியாக வளரும் கொடியினை பந்தல் , வேலி முதலிய இடங்களில் படரவிட்டு வளர்க்கலாம். வெள்ளை நிறத்தில் கவர்ச்சியான பெரிய பூக்கள் தோன்றும்.
ஆஸ்திரேலிய பைன் ஆப்பிள் (மான்ஸ்டீரியா)
பெரிய மரங்களில் படரவிட ஏற்ற கொடி. இலைகள் பெரியதாக அழகாக இருக்கும். தொட்டிகளில் நட்டு வீட்டின் உட்புற அலங்காரத்திற்கும் உபயோகப்படுத்தலாம்.



Click it and Unblock the Notifications











