காதலை உணர்த்தும் மணம் தரும் மலர்கள்

By Mayura Akilan

Rose
அழகான மலர்கள் காண்பதும், நுகர்வதும் மனதில் உள்ள பாரத்தை நீக்கி மகிழ்ச்சியை ஏற்படுத்தும். நமது எண்ணங்களை துணையிடம் வெளிப்படுத்துபவை மலர்கள். அழகான மலர்களை வீட்டுதோட்டத்தில் வளர்தாலே மனதில் அழுத்தம் நீங்கி உற்சாகம் ஊற்றெடுக்கும். காதலை உணர்த்தும் மலர்களை வீட்டுத் தோட்டங்களில் வளர்ப்பது குறித்து தெரிவிக்கின்றனர் வீட்டு உள் அலங்கார நிபுணர்கள்

சிவப்பு ரோஜா

காதலை தெரிவிக்க அனைவரும் உபயோகிக்கும் மலர் சிவப்பு ரோஜா. இது உணர்வுப் பூர்வமாக வெளிப்படுத்த ஏற்ற மலர். இந்த சிவப்பு ரோஜாக்களை தோட்டத்தில் வளர்த்து பராமரித்தால் வீட்டிற்குள் காதலுக்கு பஞ்சமிருக்காது. இதனை வீட்டிற்குள்ளேயும் வளர்க்கலாம். தினந்தோறும் ஒருமுறை தண்ணீர் விட்டாலே போதுமானது. நாள்தோறும் இரண்டு முதல் நான்கு மணிநேரம் சூரிய ஒளியில் வைக்கவேண்டும்.

மணம் தரும் பெருங்கள்ளி

புளுமெரியா என்றும் பெருங்கள்ளி என்றும் அழைக்கப்படும் இந்த மலர்கள் எண்ணற்ற மணம் தரக்கூடியவை. இது மஞ்சள், பிங்க் என பல வர்ணங்களில் காணப்படுகின்றன. எளிதில் வளரும் வீட்டிற்குள்ளேயும் வளர்க்கலாம். குளுமையான சீதோஷ்ணமே போதுமானது. மனதிற்கு இதம் தரும் மலர் இது.

மயக்கும் மல்லிகை

மல்லிகை மணத்திற்கு மயங்காதவர் எவரும் இல்லை. இந்த மலர்களின் மணம் தம்பதியருக்கு ஏற்றது. காதலை வெளிப்படுத்த ஒரு முழம் மல்லிகையை கொடுத்து துணையை வழிக்கு கொண்டுவந்தவர்கள் ஏராளம். இந்த மல்லிகையை வீட்டுத் தோட்டத்தில் வைத்த வளர்த்தால் மணத்தோடு மனதிற்கு இதம் தரும். சரியான அளவில் தண்ணீர் விட்டு வளர்த்தால் நீண்ட காலத்திற்கு நறுமணம் தரும் மல்லிகை மலர்களை தரும்..

துலிப் மலர்கள்

துலிப் மலர்கள் கண்களை கவர்வதோடு மனதிற்கும் இதம் தரும் செந்நிறம் மட்டுமல்லாது பல வண்ணங்களில் இது கிடைக்கிறது. துணையின் எண்ணத்தையும், மனதையும் மாற்றுவதில் இந்த மலர்களுக்கு ஈடு இல்லை. இந்த மலர்களை தோட்டத்தில் வளர்ப்பது கண்ணுக்கு இதம் தருவதோடு காதலையும் வளர்க்கும் என்கின்றனர் தோட்டக்கலை நிபுணர்கள்.

Story first published: Monday, January 23, 2012, 17:09 [IST]
Desktop Bottom Promotion