Just In
- 16 hrs ago
சூரிய பெயர்ச்சி: மேஷம் செல்லும் சூரியனால் இந்த 7 ராசிக்கு அட்டகாசமான காலமா இருக்கப் போகுது...
- 17 hrs ago
உங்கள் தைராய்டு சுரப்பியை ஆரோக்கியமாக வைத்திருக்க சாப்பிட வேண்டிய எளிய உணவுகள் என்ன தெரியுமா?
- 18 hrs ago
இந்த தமிழ் புத்தாண்டுக்கு உங்க நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் இத சொல்ல மறந்துடாதீங்க...!
- 23 hrs ago
இன்றைய ராசிப்பலன் (13.04.2021): இன்று இந்த ராசிக்காரர்கள் வீண் விவாதத்தைத் தவிர்த்தால் நல்லது…
Don't Miss
- News
புதுவையில் ரெம்டெசிவிர் மருந்து தட்டுப்பாடு.. விமானம் மூலம் கொண்டு வந்து உதவிய தமிழிசை!
- Sports
ரோகித் பத்தி மோசமான கமெண்ட்... பதிவை உடனடியாக நீக்கிய ஸ்விகி... குவியும் எதிர்ப்பு
- Automobiles
ஆட்டோமேட்டிக் காராகவும் தயாராகும் 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ!! சன்ரூஃப்-ஐயும் பெற்று வருகிறது...
- Finance
இந்திய பொருளாதாரம் 2021ல் 12.5 சதவீத வளர்ச்சி அடையும்..!
- Movies
தளபதி65 படத்தில் நடிக்கிறேனா? அது நடந்தா உங்களுக்கு ட்ரீட் வைக்கிறேன்… பவித்ரா லட்சுமி பதில் !
- Education
பி.இ, பி.டெக் பட்டதாரியா நீங்க? ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மத்திய நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
காதலை உணர்த்தும் மணம் தரும் மலர்கள்
அழகான மலர்கள் காண்பதும், நுகர்வதும் மனதில் உள்ள பாரத்தை நீக்கி மகிழ்ச்சியை ஏற்படுத்தும். நமது எண்ணங்களை துணையிடம் வெளிப்படுத்துபவை மலர்கள். அழகான மலர்களை வீட்டுதோட்டத்தில் வளர்தாலே மனதில் அழுத்தம் நீங்கி உற்சாகம் ஊற்றெடுக்கும். காதலை உணர்த்தும் மலர்களை வீட்டுத் தோட்டங்களில் வளர்ப்பது குறித்து தெரிவிக்கின்றனர் வீட்டு உள் அலங்கார நிபுணர்கள்
சிவப்பு ரோஜா
காதலை தெரிவிக்க அனைவரும் உபயோகிக்கும் மலர் சிவப்பு ரோஜா. இது உணர்வுப் பூர்வமாக வெளிப்படுத்த ஏற்ற மலர். இந்த சிவப்பு ரோஜாக்களை தோட்டத்தில் வளர்த்து பராமரித்தால் வீட்டிற்குள் காதலுக்கு பஞ்சமிருக்காது. இதனை வீட்டிற்குள்ளேயும் வளர்க்கலாம். தினந்தோறும் ஒருமுறை தண்ணீர் விட்டாலே போதுமானது. நாள்தோறும் இரண்டு முதல் நான்கு மணிநேரம் சூரிய ஒளியில் வைக்கவேண்டும்.
மணம் தரும் பெருங்கள்ளி
புளுமெரியா என்றும் பெருங்கள்ளி என்றும் அழைக்கப்படும் இந்த மலர்கள் எண்ணற்ற மணம் தரக்கூடியவை. இது மஞ்சள், பிங்க் என பல வர்ணங்களில் காணப்படுகின்றன. எளிதில் வளரும் வீட்டிற்குள்ளேயும் வளர்க்கலாம். குளுமையான சீதோஷ்ணமே போதுமானது. மனதிற்கு இதம் தரும் மலர் இது.
மயக்கும் மல்லிகை
மல்லிகை மணத்திற்கு மயங்காதவர் எவரும் இல்லை. இந்த மலர்களின் மணம் தம்பதியருக்கு ஏற்றது. காதலை வெளிப்படுத்த ஒரு முழம் மல்லிகையை கொடுத்து துணையை வழிக்கு கொண்டுவந்தவர்கள் ஏராளம். இந்த மல்லிகையை வீட்டுத் தோட்டத்தில் வைத்த வளர்த்தால் மணத்தோடு மனதிற்கு இதம் தரும். சரியான அளவில் தண்ணீர் விட்டு வளர்த்தால் நீண்ட காலத்திற்கு நறுமணம் தரும் மல்லிகை மலர்களை தரும்..
துலிப் மலர்கள்
துலிப் மலர்கள் கண்களை கவர்வதோடு மனதிற்கும் இதம் தரும் செந்நிறம் மட்டுமல்லாது பல வண்ணங்களில் இது கிடைக்கிறது. துணையின் எண்ணத்தையும், மனதையும் மாற்றுவதில் இந்த மலர்களுக்கு ஈடு இல்லை. இந்த மலர்களை தோட்டத்தில் வளர்ப்பது கண்ணுக்கு இதம் தருவதோடு காதலையும் வளர்க்கும் என்கின்றனர் தோட்டக்கலை நிபுணர்கள்.