Latest Updates
-
18 மாதம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் செவ்வாய்: இன்றுமுதல் அடுத்த 45 நாட்கள் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் -
உடல் எடை மடமடன்னு குறைய உதவும் கருப்பு சுண்டல் தோசையும், பீட்ரூட் சட்னியும் - எப்படி செய்யணும் தெரியுமா? -
இன்றைய ராசிபலன் 11 மே 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு பணமழை கொட்டுமாம் -
சுக்கிர பெயர்ச்சியால் மே 14 முதல் இந்த 4 ராசிக்காரர்களுக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுது... -
உங்களுக்கு திரும்ப திரும்ப ஒரே கனவு வருதா? அதுக்கு என்ன அர்த்தம்-ன்னு தெரியுமா? -
அன்னையர் தினம் 2026: அம்மாவிற்கு சர்ப்ரைஸ் கொடுக்கணுமா? இந்த UPI ஆஃபர்களை மிஸ் பண்ணிடாதீங்க! -
மாம்பழ லட்டு - 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
அன்னையர் தினத்தில் மனைவி vs அம்மா? இந்த ஒரு சின்ன மாற்றம் போதும், குடும்பத்தில் அமைதி நிலவும்! -
முகத்தில் உள்ள அழுக்கை நீக்கணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் வாஷ்களை யூஸ் பண்ணுங்க.. -
ஒரே வாரத்தில் 3 முறை நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்..
விருந்தினர்களை கவரும் வீட்டின் வரவேற்பு மேஜை அலங்காரம்

மணம் மயக்கும் மலர்கள்
மேஜையின் மீது சிறிய அளவிலான கிண்ணம் வைத்து அதில் தண்ணீர் ஊற்றி மலர்களைப் போட்டு வைக்கலாம். வண்ணமயமான இந்த மலர்கள் மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.
சிறிய பூ ஜாடியை வைத்து அதில் பல வண்ண மலர்களால் அலங்கரிப்பது அறைக்கு பளிச் தோற்றத்தை ஏற்படுத்தும். மேஜையின் வடிவத்திற்கு தக்கவாறு ஏற்ற மலர்களால் அலங்கரிப்பது அழகை அதிகரிக்கும்.
போன்சாய் மரங்கள்
தற்போது போன்சாய் மரங்களினால் அலங்கரிப்பது அதிகரித்து வருகிறது. எனவே மேஜையின் நடுவே பூக்களைக் கொண்டும் , போன்சாய் மரங்கள் மூலமும் அலங்கரிக்கலாம். காய்கறிகள், பழங்களைக் கொண்டும் அலங்கரிக்கலாம், அது வரவேற்பரையின் அழகை அதிகரிக்கும். வருபவர்கள் எடுத்த உண்ண வசதியாகவும் இருக்கும்.
மன அமைதி தரும்
மேஜையின் நடுவில் மெழுகுவர்த்தியால் அலங்கரிப்பது, எழிலோடு, ஸ்டைலாகவும் இருக்கும். மெழுகுவர்த்தி ஏற்றுவது மனதிற்கு அமைதியை தரும். அதுவும், வரவேற்பு அறையின் மேஜையில் அலங்கரிக்கப்பட்ட மெழுகுவர்த்தியை மாலை நேரத்தில் அதனை ஏற்றி வைப்பது அழகோடு மன அமைதிக்கு வழிவகுக்கும்.
புத்தகங்கள், நாளிதழ்கள்
புத்தகங்கள், நாளிதழ்கள் போன்றவைகளை மேஜை மீது அழகாக அடுக்கி வைப்பது வரவேற்பறையின் அழகினை அதிகரிக்கும். படிகங்களினால் ஆனா பொருட்களைக் கொண்டும் அலங்கரிக்கலாம்.
பாரம்பரியப் பொருட்கள்
மேஜை மீது பாரம்பரியம் மிக்க விரிப்புகளை பயன்படுத்துவது அழகை அதிகரிக்கும். சணல் மேஜை விரிப்பை பயன்படுத்துவது அழகாக இருப்பதோடு பாதுகாப்பானதாகவும் இருக்கும். வெண்கலத்தான் ஆன சிலைகளை மேஜை மீது அலங்கரிப்பது பாரம்பரியமாக இருப்பதோடு அழகை அதிகரிக்கும். ஆனால் அது ஸ்டைலுக்கு மட்டுமே ஏற்றது.
எளிமையே அழகு
மேஜையில் இடம் காலியாக இருக்கிறது என்பதற்காக கண்டதையும் கொண்டு நிரப்பவேண்டாம். எளிமையான சிறிய அளவிலான பொருட்களே அழகே அதிகரிக்கும். உற்சாகத்தையும் ஏற்படுத்தும் என்கின்றனர் உள்அலங்கார நிபுணர்கள்.



Click it and Unblock the Notifications