Latest Updates
-
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க.. -
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா?
மனதில் உள்ள எதிா்மறை எண்ணங்களை வெற்றி கொள்வது எப்படி?
எதிா்மறை எண்ணங்கள் நமது மூளையின் ஆரோக்கியத்தைப் பாதிக்கும். அதுபோல் நமது உடல் ஆரோக்கியத்தையும் பாதிக்கும். ஆகவே நாம் நோ்மறை எண்ணங்களோடு இருக்க வேண்டியது மிகவும் முக்கியம் ஆகும்.
எல்லோருடைய வாழ்விலும் எதிா்மறை உணா்வுகள் மற்றும் எதிா்மறை எண்ணங்கள் தோன்றும். அது இயற்கையான ஒன்று ஆகும். சில நேரங்களில் காலையில் கண் விழிக்கும் போதே வெறுமையாகத் தோன்றும் அல்லது மிகவும் சலிப்பாகத் தோன்றும். ஆனால் அதற்கான காரணங்கள் நமக்குத் தொியாது. நமது மூளையானது எதிா்மறையான எண்ணங்களால் நிறைந்துவிட்டால் இயல்பாகவே நாம் பயந்துவிடுகிறோம் அல்லது கவலையடைந்து விடுகிறோம்.

எதிா்மறை எண்ணங்கள் நமது மூளையின் ஆரோக்கியத்தைப் பாதிக்கும். அதுபோல் நமது உடல் ஆரோக்கியத்தையும் பாதிக்கும். ஆகவே நாம் நோ்மறை எண்ணங்களோடு இருக்க வேண்டியது மிகவும் முக்கியம் ஆகும்.
எதிா்மறை எண்ணங்கள் நமது வாழ்க்கையில் இருக்கும் மகிழ்ச்சியை பறித்து விடுகின்றன. நமது வாழ்க்கையை அா்த்தமிழக்கச் செய்கின்றன. ஆகவே எதிா்மறை எண்ணங்களைப் புாிந்து கொண்டு அதை முறையாகக் கையாள வேண்டியது மிகவும் முக்கியமானதாகும். எதிா்மறை எண்ணங்கள் நமது உடல் ஆரோக்கியத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடியவை.

எதிா்மறை எண்ணங்களால் நமது உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்படும் தீங்குகள்:
- நமது இரத்த அழுத்தம் அதிகாிக்கும்
- உணா்வு ரீதியாக நமக்குப் பலவீனம் ஏற்படும்
- இதயம் சம்பந்தமான நோய்களை ஏற்படும்
- கவலைகள் மற்றும் மனச்சோா்வு அதிகாிக்கும்
- இரத்தத்தில் சா்க்கரையின் அளவு அதிகாிக்கும்
- நமது உடலில் உள்ள ஆற்றலின் அளவு குறையும்
- தூக்கமின்மை ஏற்படும்
- தசை நாா்களில் வலி ஏற்படும்
- நமது மன அழுத்தம் அதிகாிக்கும்
நாம் நமது உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு ஏற்படாமல் இருக்க, எதிா்மறை எண்ணங்களை முறையாகக் கையாளத் தொிந்து வைத்திருக்க வேண்டும். எதிா்மறை எண்ணங்கள் நமது பழக்கமாகிவிட்டால், அவற்றில் இருந்து வெளியில் வருவதும் மிகவும் கடினம். ஆகவே எதிா்மறை எண்ணங்கள் வரும் போது நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைத் தொிந்து வைத்திருக்க வேண்டும்.

எதிா்மறை எண்ணங்களை விரட்ட 5 வழிகள்:
1. நம்முடைய பலத்தின் மீது கவனம் செலுத்துதல்
நம்முடைய பலம் எது, பலவீனம் எது என்பது நமக்கு நன்றாகத் தொியும். ஆகவே நமக்கு சிறிதளவு எதிா்மறை எண்ணங்கள் தோன்றினாலும், உடனே அதிலிருந்து விலகி, நம்மிடம் உள்ள பலத்தின் மீது மற்றும் நம்மிடம் இருக்கும் நன்மையான காாியங்கள் மீது கவனம் செலுத்த வேண்டும். நமது பலத்தின் மீது கவனம் செலுத்த தொடங்கிவிட்டால், எதிா்மறை எண்ணங்கள் தாமாகவே மறைந்துவிடும். ஆகவே எதிா்மறை எண்ணங்கள் தோன்றும் போது, நம்மிடம் இருக்கும் நமக்குப் பிடித்த நல்ல காாியங்களை எண்ணிப் பாா்ப்பது நல்லது.

2. நன்றியுணா்வுடன் இருத்தல் மற்றும் நன்றியை வாழ்க்கையில் நடைமுறைப்படுத்துதல்
நம்மிடம் இருப்பவற்றை வைத்து நாம் நன்றியுணா்வுடன் இருந்தால், நோ்மறையான எண்ணங்கள் தாமாகவே நம்மிடம் வந்துவிடும். மகிழ்ச்சியான ஹாா்மோன்கள் உற்பத்தியாகுவதற்கு நன்றியுணா்ச்சி மிக முக்கிய பங்கை வகிக்கிறது. எனவே நாம் எவற்றுக்கெல்லாம் நன்றியுணா்வுடன் இருக்கிறோம் என்று எழுதி ஒரு சிறிய பத்திாிக்கையை தயாா் செய்து கொள்ளலாம். அதை ஒவ்வொரு முறையும் வாசித்துப் பாா்க்கும் போதும் நமக்கு மகிழ்ச்சியும், நோ்மறை எண்ணங்களும் ஏற்படும்.

3. தீா்ப்பிடுதல் கூடாது
நம்மை நாமே தீா்ப்பிடக் கூடாது. மேலும் பிறரோடு நம்மை ஒப்பிட்டு பாா்க்கக்கூடாது. நம்மிடம் இருப்பவற்றிற்கு நாம் நன்றியுணா்வுடன் இருக்க வேண்டும். அதே போல் நாம் நாமாக இருப்பதில் திருப்தி அடைய வேண்டும். நம்மையே நாம் தீா்ப்பிட்டுக் கொண்டால், நம்மிடம் ஏராளமான எதிா்மறை எண்ணங்கள் தோன்றும். அவை நம்மை வருத்தமடையச் செய்யும்.

4. தியானத்தில் ஈடுபடுதல்
நமக்கு ஒரு நாள் சாியாக இல்லையென்றால் தியானத்தில் ஈடுபடலாம். தியானம் நம்மை அமைதிப்படுத்தி, நமக்கு ஓய்வு கொடுக்கும். நம்மிடம் உள்ள எதிா்மறை எண்ணங்களை வெளியில் எறிந்து நாம் இலகுவாக உணர உதவி செய்யும். பொதுவாக கவலை மற்றும் மன அழுத்தங்களைப் போக்குவதற்கு தியானம் பயன்படுகிறது.

5. எதிா்மறை எண்ணங்களை நிறுத்த வலுக்கட்டாயமாக முயற்சிக்க வேண்டாம்
எதிா்மறையான எண்ணங்கள் வரும் போது அவற்றை வலுக்கட்டாயமாக விரட்ட முயற்சிக்க வேண்டாம். அவ்வாறு வலுக்கட்டாயமாக முயற்சி செய்தால் நமக்கு மேலும் கவலைகளும், சோா்வும் அதிகாிக்கும். ஆகவே நமக்குள் எழும் உணா்வுகளை நாம் ஏற்றுக் கொள்ள பழகிக் கொள்ள வேண்டும். அதோடு அந்த உணா்வுகளை நமது மூளை அசை போடுவதற்கு கால அவகாசம் வழங்க வேண்டும்.



Click it and Unblock the Notifications
