தலைசுற்ற வைக்கும் பெண்களின் கன்னித்தன்மையை சோதிக்கும் முறைகள்... இப்பவும் இந்தியாவில் இவை இருக்காம்...!

உலகம் முழுவதும் பெண்கள் பல துறைகளில் சாதித்த வருகிறார்கள், பெண்ணியம் மற்றும் பெண்களைப் பற்றிய பார்வையை மாற்றிக்கொள்ள சமூகம் தயாராகி வரும் அதே வேளையில், இந்தியாவில் கன்னித்தன்மை சோதனையை நம்பும் பெரும்பாலான கிராமங்கள் இப்ப

உலகம் முழுவதும் பெண்கள் பல துறைகளில் சாதித்த வருகிறார்கள், பெண்ணியம் மற்றும் பெண்களைப் பற்றிய பார்வையை மாற்றிக்கொள்ள சமூகம் தயாராகி வரும் அதே வேளையில், இந்தியாவில் கன்னித்தன்மை சோதனையை நம்பும் பெரும்பாலான கிராமங்கள் இப்போதும் இருப்பது துரதிர்ஷ்டவசமானது. ஒரு பெண்ணின் தனியுரிமையை தகர்க்கும் வகையில் தங்களுடைய சொந்த விதிகளை வகுத்திருக்கும் இந்த சமூகங்களுக்கு திருமணத்திற்குப் பிறகு ஒரு பெண் கன்னியாக இருக்கிறாளா இல்லையா என்பதை அறிவது மிகவும் முக்கியமானதாக இருக்கிறது.

Unusual Virginity Tests For Women That Still in Many Parts of India in Tamil

பெண்களுக்கு மன உளைச்சலையும் அவமானத்தையும் ஏற்படுத்தும் கன்னித்தன்மை அப்படியே உள்ளதா என்பதைச் சரிபார்ப்பதற்காகவே இந்த அனைத்துப் பரிசோதனைகளும் செய்யப்படுகிறது. இந்தியாவில் பல கிராமங்களில் கன்னித்தன்மை சோதனையில் தோல்வியடைந்த மனைவியை விட்டு செல்லும் வழக்கம் இன்றும் நடைமுறையில் உள்ளது. இந்த மோசமான பழக்கவழக்கங்கள் இன்னும் நம் நாட்டில் இருப்பது ஒரு சாபக்கேடு. இந்தியாவில் இன்றும் பெண்களுக்கு செய்யப்படும் சில மோசமான கன்னித்தன்மை பரிசோதனைகள் என்னென்ன என்று தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தண்ணீர் சோதனை

தண்ணீர் சோதனை

ஒரு பெண் கன்னியாக இருப்பதை உறுதி செய்வதற்காக, சில சமூகங்கள் பெண்ணை தண்ணீருக்கு அடியில் மூச்சைப் பிடித்துக் கொள்ளச் செய்கின்றனர். சித்திரவதைக்கு ஆளானவர்களுக்கான சர்வதேச மறுவாழ்வு மையம், இந்த சோதனையை "பெண்களின் உரிமைகளின் மொத்த மீறல் மற்றும் சர்வதேச சட்டத்தின் கீழ் மோசமாக நடத்துதல் மற்றும் சித்திரவதைக்கு சமமான ஒன்று" என்று விவரிக்கிறது.

அக்னிபரிட்சை

அக்னிபரிட்சை

அக்னிபரிட்சையில், மணமகள் சிவப்பு-சூடான இரும்பை கையில் ஏந்த வேண்டும். இதனை செய்ய முடியாத அல்லது பாதியிலேயே விட்டு விடும் பெண் தூய்மையற்றவளாகக் கருதப்படுகிறார். கன்னித்தன்மை சோதனையில் தோல்வியுற்ற பெண், அவர்கள் யாரிடம் கன்னித்தன்மை இழந்தார்கள் என்பதையும் சொல்ல கட்டயாப்படுத்துவார்கள். சில சமயங்களில், பெண் மருத்துவர்களிடம் மீண்டும் சோதனை நடத்துவார்கள்.

கறை படிந்த பெட்ஷீட்

கறை படிந்த பெட்ஷீட்

பெண் கன்னித்தன்மையுடன் இருக்கிறாரா என்பதை உறுதிப்படுத்த, திருமணமான முதல் இரவில், தம்பதிகள் படுக்கையில் ஒரு வெள்ளை பெட்ஷீட் விரிக்கப்படுகிறது. மறுநாள் காலையில், குடும்பத்தின் பெரியவர்கள் இரத்தத்தின் தடயங்கள் இருக்கிறதா என்று பார்ப்பார்கள். சில சமூகங்களில் இருக்கும்போது, அவர்களது சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தம்பதியினர் உடலுறவு கொள்ளும் அறைக்கு வெளியே காத்திருக்கிறார்கள். பெண்கள் கன்னித்தன்மையை நிரூபிக்கும் வகையில் ரத்தக்கறை படிந்த பெட்ஷீட்டை அவர்களுக்கு காட்டுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரு விரல் சோதனை

இரு விரல் சோதனை

பொதுவாக அறியப்பட்ட மற்றொரு கன்னித்தன்மை சோதனை இரண்டு விரல் சோதனை ஆகும். பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டவர்களைச் சோதனை செய்ய இது முன்பு பொதுவாகப் பயன்படுத்தப்பட்டது. கடந்த காலங்களில் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் இந்திய உச்ச நீதிமன்றம் சோதனை நடத்தியது. மனித உரிமைகள் கண்காணிப்பகம் இந்த சோதனை ‘இழிவானது மற்றும் அறிவியலற்றது' என்று விமர்சித்துள்ளது. இரண்டு விரல் சோதனையில், பெரும்பாலும் வயதான பெண்கள் தங்கள் விரல்களைப் பயன்படுத்தி கன்னித்திரையை தேடுகிறார்கள். இருப்பினும், ஒரு பெண்ணுக்கு வழக்கமாக உடலுறவில் ஈடுபட்டிருந்தால், யோனி தசைகளின் தளர்ச்சியை சரிபார்க்க துல்லியமான வழி இல்லாததால் இது அறிவியலுக்கு மாறானது என்பதால் நிராகரிக்கப்பட்டது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion