Latest Updates
-
இன்றைய ராசிபலன் 10 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஆபத்துகள் நிறைந்த நாளாக இருக்குமாம் -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் 2027 வரை துரதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சத்தான பீர்க்கங்காய் சாதம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
இந்தியாவிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட மாவட்டம் எது? அது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? -
ஹைதராபாத் முட்டை மசாலா ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - தோசை, சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
குருபகவான் கடக ராசியில் உச்சமடைவதால் கோடி நன்மைகளை பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சன்டே ஸ்பெஷல் - சிக்கன் வாங்குனா இந்த மாதிரி குழிப் பணியாரம் செஞ்சு பாருங்க - வித்தியாசமா, சூப்பரா இருக்கும் -
பாகிஸ்தானில் இந்திய ரூபாயின் மதிப்பு எவ்ளோ தெரியுமா? இந்திய ரூபாய் பாகிஸ்தானை விட வலிமையாக இருக்க காரணம் என்ன? -
கேரளா ஸ்டைல் நாடன் சிக்கன் கறி - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 09 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க அதிர்ஷ்ட படிக்கட்டில் வேகமாக ஏறப் போறாங்களாம்
உங்களுக்கு உயர் இரத்த அழுத்தம் இருக்கா? அப்ப இந்த டீயை தினமும் குடிங்க.. பிபி கண்ட்ரோலா இருக்கும்..
நீங்கள் தினமும் காலையில் டீ குடிக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தால், உங்கள் உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைக்க ஒருசில டீக்களை குடித்து வர நல்ல பலன் கிடைக்கும்.
இன்று உயர் இரத்த அழுத்த பிரச்சனையால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். உயர் இரத்த அழுத்தம் என்பது, தமனிகளை பாதிக்கும் ஒரு பொதுவான நிலையாகும். உயர் இரத்த அழுத்த பிரச்சனை இருந்தால், தமனி சுவர்களுக்கு எதிராக இரத்தத்தின் அழுத்தம் தொடர்ந்து அதிகமாக இருக்கும். இந்நிலையில் இரத்தத்தை மற்ற உறுப்புக்ளுக்கு அனுப்ப இதயம் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளாவிட்டால், அது இதய நோய் மற்றும் பக்கவாதத்தின் அபாயத்தை அதிகரிக்கிறது.

ஒருவருக்கு உயர் இரத்த அழுத்த பிரச்சனை வருவதற்கு முக்கிய காரணங்களாக இருப்பது மோசமான உணவுப் பழக்கம், உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது, மோசமான தூக்க பழக்கம் மற்றும் உடலுக்கு போதுமான ஓய்வு கொடுக்காமை போன்றவையாகும். உயர் இரத்த அழுத்தம் இதயத்தை பாதிப்பதோடு, உடலில் பிற பிரச்சனைகளின் அபாயத்தையும் அதிகரிக்கிறது. ஆனால் இந்த உயர் இரத்த அழுத்த பிரச்சனைகளை சரியான உணவுப் பழக்கம் மற்றும் மருந்துகளின் உதவியுடன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள முடியும். இது தவிர ஒருசில டீக்களும் உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள உதவுகின்றன.
நீங்கள் தினமும் காலையில் டீ குடிக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தால், உங்கள் உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைக்க ஒருசில டீக்களை குடித்து வர நல்ல பலன் கிடைக்கும். இப்போது உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும் டீக்கள் எவையென்பதைக் காண்போம்.

க்ரீன் டீ
உடல் எடையைக் குறைப்பது முதல் பல ஆரோக்கிய பிரச்சனைகளை நிர்வகிப்பது வரை, பல நன்மைகளை உள்ளடக்கிய ஒரு ஆரோக்கியமான டீ தான் க்ரீன் டீ. ஆய்வுகளில் க்ரீன் டீயை குடிப்பது, உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதோடு, இதய திசுக்களில் ஏற்படும் அழற்சியின் அபாயத்தைக் குறைக்க உதவுவது தெரிய வந்துள்ளது. மேலும் க்ரீன் டீயில் இதய ஆரோக்கியத்திற்கு நன்மை விளைவிக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளன. எனவே பிபி நோயாளிகள், ஒரு நாளைக்கு 1-2 கப் க்ரீன் டீயை குடித்து வந்தால், பிபியை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளலாம்.

செம்பருத்தி டீ
இந்தியாவின் பெரும்பாலான வீடுகளில் உள்ள ஒரு பூச்செடி தான் செம்பருத்தி. இந்த செம்பருத்தி பூவில் ஏராளமான நன்மை விளைவிக்கும் பண்புகள் உள்ளன. குறிப்பாக இரத்த அழுத்தத்தை நிர்வகிக்க செம்பருத்தி டீ பெரிதும் உதவி புரிகிறது. செம்பருத்தி டீயை குடித்து வந்தால், அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன. இருப்பினும், இந்த செம்பருத்தி டீயை உயர் இரத்த அழுத்த நோயாளிகள் குடிக்கும் முன், மருத்துவரிடம் கேடுக் கொள்ள வேண்டும்.

ஊலாங் டீ
உயர் இரத்த அழுத்த நோயாளிகளுக்கு நன்மை விளைவிக்கும் மற்றொரு அற்புதமான மற்றும் ஆரோக்கியமான டீ தான் ஊலாங் டீ. இந்த டீயில் உள்ள மருத்துவ பண்புகள், இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகின்றன. முக்கியமாக இதில் உள்ள அதிகப்படியான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தி பாதுகாக்கின்றன.

சீமைச்சாமந்தி டீ
சீமைச்சாமந்தி டீ தற்போது ஏராளமான மக்களால் குடிக்கப்பட்டு வரும் மற்றொரு அற்புதமான டீயாகும். இந்த டீ உயர் இரத்த அழுத்தத்தை நிர்வகிக்கும் பண்புகளைக் கொண்டுள்ளன. ஆய்வுகளிலும் சீமைச்சாமந்தி டீ உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுவது தெரிய வந்துள்ளது. செம்பருத்தி டீயைப் போன்றே, சீமைச்சாமந்தி டீயும் ரத்த நாளங்களை ரிலாக்ஸடைய செய்து, இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. மேலும் இந்த டீயை தினமும் குடித்து வந்தால், இரவு நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெறலாம். ஒருவர் நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெற்றால், அதுவே இரத்த அழுத்தம் அதிகரிப்பதை தடுக்கும்.

ப்ளாக் டீ
பால் டீயை விரும்பாத பலரும் தினமும் குடித்து வரும் ஒரு டீ தான் ப்ளாக் டீ. இந்த ப்ளாக் டீ ஏராளமான நன்மைகளைக் கொண்டுள்ளன. அதில் ஒன்று தான் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைப்பது. ஆய்வுகளில் கூட, ஒரு நாளைக்கு 3 கப் ப்ளாக் டீ குடித்து வந்த உயர் இரத்த அழுத்த நோயாளிகளின் இரத்த அழுத்த அளவானது 2-3 புள்ளிகள் குறைந்திருப்பது தெரிய வந்துள்ளது. எனவே நீங்கள் டீ பிரியராக இருந்தால், இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள, ப்ளாக் டீயை தினமும் குடித்து வாருங்கள்.



Click it and Unblock the Notifications