Latest Updates
-
தேங்காய் தோசையும்.. தேங்காய் சட்னியும்.. - இந்த காம்போவை எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 13 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க சொந்த காசுல சூனியம் வைச்சுக்கப் போறாங்களாம்...! -
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது...
உங்களுக்கு உயர் இரத்த அழுத்தம் இருக்கா? அப்ப இந்த டீயை தினமும் குடிங்க.. பிபி கண்ட்ரோலா இருக்கும்..
நீங்கள் தினமும் காலையில் டீ குடிக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தால், உங்கள் உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைக்க ஒருசில டீக்களை குடித்து வர நல்ல பலன் கிடைக்கும்.
இன்று உயர் இரத்த அழுத்த பிரச்சனையால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். உயர் இரத்த அழுத்தம் என்பது, தமனிகளை பாதிக்கும் ஒரு பொதுவான நிலையாகும். உயர் இரத்த அழுத்த பிரச்சனை இருந்தால், தமனி சுவர்களுக்கு எதிராக இரத்தத்தின் அழுத்தம் தொடர்ந்து அதிகமாக இருக்கும். இந்நிலையில் இரத்தத்தை மற்ற உறுப்புக்ளுக்கு அனுப்ப இதயம் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளாவிட்டால், அது இதய நோய் மற்றும் பக்கவாதத்தின் அபாயத்தை அதிகரிக்கிறது.

ஒருவருக்கு உயர் இரத்த அழுத்த பிரச்சனை வருவதற்கு முக்கிய காரணங்களாக இருப்பது மோசமான உணவுப் பழக்கம், உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது, மோசமான தூக்க பழக்கம் மற்றும் உடலுக்கு போதுமான ஓய்வு கொடுக்காமை போன்றவையாகும். உயர் இரத்த அழுத்தம் இதயத்தை பாதிப்பதோடு, உடலில் பிற பிரச்சனைகளின் அபாயத்தையும் அதிகரிக்கிறது. ஆனால் இந்த உயர் இரத்த அழுத்த பிரச்சனைகளை சரியான உணவுப் பழக்கம் மற்றும் மருந்துகளின் உதவியுடன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள முடியும். இது தவிர ஒருசில டீக்களும் உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள உதவுகின்றன.
நீங்கள் தினமும் காலையில் டீ குடிக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தால், உங்கள் உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைக்க ஒருசில டீக்களை குடித்து வர நல்ல பலன் கிடைக்கும். இப்போது உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும் டீக்கள் எவையென்பதைக் காண்போம்.

க்ரீன் டீ
உடல் எடையைக் குறைப்பது முதல் பல ஆரோக்கிய பிரச்சனைகளை நிர்வகிப்பது வரை, பல நன்மைகளை உள்ளடக்கிய ஒரு ஆரோக்கியமான டீ தான் க்ரீன் டீ. ஆய்வுகளில் க்ரீன் டீயை குடிப்பது, உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதோடு, இதய திசுக்களில் ஏற்படும் அழற்சியின் அபாயத்தைக் குறைக்க உதவுவது தெரிய வந்துள்ளது. மேலும் க்ரீன் டீயில் இதய ஆரோக்கியத்திற்கு நன்மை விளைவிக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளன. எனவே பிபி நோயாளிகள், ஒரு நாளைக்கு 1-2 கப் க்ரீன் டீயை குடித்து வந்தால், பிபியை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளலாம்.

செம்பருத்தி டீ
இந்தியாவின் பெரும்பாலான வீடுகளில் உள்ள ஒரு பூச்செடி தான் செம்பருத்தி. இந்த செம்பருத்தி பூவில் ஏராளமான நன்மை விளைவிக்கும் பண்புகள் உள்ளன. குறிப்பாக இரத்த அழுத்தத்தை நிர்வகிக்க செம்பருத்தி டீ பெரிதும் உதவி புரிகிறது. செம்பருத்தி டீயை குடித்து வந்தால், அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன. இருப்பினும், இந்த செம்பருத்தி டீயை உயர் இரத்த அழுத்த நோயாளிகள் குடிக்கும் முன், மருத்துவரிடம் கேடுக் கொள்ள வேண்டும்.

ஊலாங் டீ
உயர் இரத்த அழுத்த நோயாளிகளுக்கு நன்மை விளைவிக்கும் மற்றொரு அற்புதமான மற்றும் ஆரோக்கியமான டீ தான் ஊலாங் டீ. இந்த டீயில் உள்ள மருத்துவ பண்புகள், இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகின்றன. முக்கியமாக இதில் உள்ள அதிகப்படியான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தி பாதுகாக்கின்றன.

சீமைச்சாமந்தி டீ
சீமைச்சாமந்தி டீ தற்போது ஏராளமான மக்களால் குடிக்கப்பட்டு வரும் மற்றொரு அற்புதமான டீயாகும். இந்த டீ உயர் இரத்த அழுத்தத்தை நிர்வகிக்கும் பண்புகளைக் கொண்டுள்ளன. ஆய்வுகளிலும் சீமைச்சாமந்தி டீ உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுவது தெரிய வந்துள்ளது. செம்பருத்தி டீயைப் போன்றே, சீமைச்சாமந்தி டீயும் ரத்த நாளங்களை ரிலாக்ஸடைய செய்து, இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. மேலும் இந்த டீயை தினமும் குடித்து வந்தால், இரவு நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெறலாம். ஒருவர் நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெற்றால், அதுவே இரத்த அழுத்தம் அதிகரிப்பதை தடுக்கும்.

ப்ளாக் டீ
பால் டீயை விரும்பாத பலரும் தினமும் குடித்து வரும் ஒரு டீ தான் ப்ளாக் டீ. இந்த ப்ளாக் டீ ஏராளமான நன்மைகளைக் கொண்டுள்ளன. அதில் ஒன்று தான் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைப்பது. ஆய்வுகளில் கூட, ஒரு நாளைக்கு 3 கப் ப்ளாக் டீ குடித்து வந்த உயர் இரத்த அழுத்த நோயாளிகளின் இரத்த அழுத்த அளவானது 2-3 புள்ளிகள் குறைந்திருப்பது தெரிய வந்துள்ளது. எனவே நீங்கள் டீ பிரியராக இருந்தால், இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள, ப்ளாக் டீயை தினமும் குடித்து வாருங்கள்.



Click it and Unblock the Notifications











