Latest Updates
-
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது...
கொரோனா நோயாளிகளை குறிவைத்து தாக்கும் கருப்பு பூஞ்சை நோய்... அதன் அறிகுறிகள் என்னென்ன தெரியுமா?
கருப்பு பூஞ்சை என்று அழைக்கப்படும் இது மருத்துவரீதியாக மியூகோமிகோசிஸ் எனப்படும் பூஞ்சை தொற்று என குறிப்பிடப்படுகிறது, இதுபோன்ற 200 க்கும் மேற்பட்ட வழக்குகள் இந்திய மாநிலங்களில் பதிவாகியுள்ளன.
COVID-19 வழக்குகள் நாடு முழுவதும் அதிர்ச்சியளிக்கும் வகையில் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன, மேலும் மூன்றாவது அலை குறித்த அச்சமும் நிலவி வருகிறது, தற்போது COVID-19 மட்டுமே நாம் எதிர்கொள்ளும் ஒரே பேரழிவு இல்லை. நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் இருந்து வரும் தகவல்களின் படி, COVID நோயாளிகளைப் பாதிக்கும் 'கருப்பு பூஞ்சை' இந்தியாவில் பல மாநிலங்களில் அதிகரித்து வருகிறது, மேலும் இது பல சிக்கல்களை ஏற்படுத்துகிறது.

கருப்பு பூஞ்சை என்று அழைக்கப்படும் இது மருத்துவரீதியாக மியூகோமிகோசிஸ் எனப்படும் பூஞ்சை தொற்று என குறிப்பிடப்படுகிறது, இதுபோன்ற 200 க்கும் மேற்பட்ட வழக்குகள் இந்திய மாநிலங்களில் பதிவாகியுள்ளன. இது எவ்வளவு ஆபத்தானது, இதன் அறிகுறிகள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

மியூகோமிகோசிஸ் என்றால் என்ன?
மியூகோமிகோசிஸ் இப்போது ஒரு பெரிய, கடுமையான அச்சுறுத்தலாகக் கருதப்படுகிறது. ஐ.சி.எம்.ஆர் இப்போது வழிகாட்டுதல்களின் படி, இது ஏராளமான COVID நோயாளிகளை குணப்படுத்துவதில் பாதிக்கக்கூடும் என்பது மட்டுமல்லாமல், சரியான சிகிச்சை அளிக்காவிட்டால் அது மிகவும் ஆபத்தானதாக மாறக்கூடும். நிபுணர்களின் கூற்றுப்படி, கறுப்பு பூஞ்சை தொற்று 'மியூகோர்மைசெட்ஸ்' எனப்படும் பூஞ்சை குழுவால் ஏற்படுகிறது, இது காற்றில் உள்ளது மற்றும் ஒரு நோய்வாய்ப்பட்ட நோயாளி இவற்றை உள்ளிழுக்கும்போது சிக்கல்களை ஏற்படுத்துகிறது, பின்னர் இது சைனஸ் குழிகள், நுரையீரல் மற்றும் மார்பு துவாரங்களில் பரவுகிறது.

கருப்பு பூஞ்சைக்கும் கொரோனாவிற்கும் உள்ள தொடர்பு?
COVID உடன் கருப்பு பூஞ்சை தொற்று எவ்வாறு சரியாக இணைக்கப்பட்டுள்ளது என்பது இன்னும் வெளியிடப்படவில்லை. இருப்பினும், சில வல்லுநர்கள் ஸ்டெராய்டுகளை அதிக அளவில் சார்ந்து இருப்பது (COVID நோயாளிகளுக்கு வீக்கத்திற்கு சிகிச்சையளிக்கப் பயன்படுகிறது), நீரிழிவு போன்ற முன்பே இருக்கும் கொமொர்பிடிட்டிகள் COVID நோயால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு மியூகோமிகோசிஸ் தாக்கும் ஆபத்தை அதிகரிக்கும் என்று நம்புகின்றனர்.

நோய்த்தொற்றின் அறிகுறிகளை எவ்வாறு கண்டறிவது?
கருப்பு பூஞ்சை தொற்று பரவுகையில் ஏற்படும் முக்கியமான பிரச்சினை முகச்சிதைவு ஆகும். இருப்பினும், நோய்த்தொற்றின் சில அறிகுறிகள் உணர்ச்சி மற்றும் முக்கிய உறுப்புகளையும் பாதிக்கலாம். பரவலாகப் பார்க்கும்போது, சில முக்கியமான அறிகுறிகள் உள்ளன. அவை என்னென்ன என்று மேற்கொண்டு பார்க்கலாம்.

மோசமான தலைவலி
ஒரு நோயாளி பூஞ்சைகளை உள்ளிழுத்து அவை சைனஸ் குழிகள் மற்றும் நரம்புகளைத் தாக்கும்போது பூஞ்சை தொற்று அதிகமாக தீங்கு விளைவிக்கும். இது ஒருவருக்கு தொடர்ச்சியான வலி மற்றும் தலைவலி போன்ற அறிகுறிகள் ஏற்பட காரணமாகிறது.

பார்வைக் குறைபாடு
கண்களில் ஏற்படும் மாற்றங்கள் அல்லது பார்வை சிதைவு தொற்று பரவுவதற்கான எச்சரிக்கை அறிகுறிகளாகவும் இருக்கலாம் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். கருப்பு பூஞ்சை வளர்ந்து பரவுகையில், பார்வையும் சிதைந்துவிடும். சிலர் ஒரு கண்ணில் ஒருவித வீக்கத்தை அனுபவிக்கலாம், மங்கலான அல்லது மோசமான பார்வை இருக்கலாம் அல்லது கண்கள் இரத்த சிவப்பு நிறத்திற்கு மாறலாம்.

கன்னங்கள், கண்கள் அல்லது முகத்தின் பாகங்களில் வீக்கம்
கன்னத்தில் வீக்கம், கன்ன எலும்புகளில் வலி, அல்லது ஒரு பக்க முகத்தில் வலி அல்லது உணர்வின்மை போன்றவையும் இப்போது தொற்றுநோய்க்கான முதன்மை அறிகுறிகளாக இருக்கலாம். வீக்கத்தைத் தவிர, பூஞ்சை தொற்று சருமத்தின் ஆரோக்கியத்தையும் பாதிக்கும் மற்றும் இது புண்கள், நெக்ரோசிஸ் போன்றவற்றிற்கு வழிவகுக்கும்.

மாறும் மனநிலை, குழப்பம்
பூஞ்சை தொற்றை உள்ளிழுக்கும்போது அது மூளைக்கும் செல்ல வழிவகுக்கும் என்று அறியப்படுவதால், மனச்சோர்வு, நினைவாற்றல் இழப்பு, நரம்பியல் குறைபாடு போன்ற முக்கியமான அறிகுறிகள் ஏற்படலாம். அடிக்கடி மாறும் மனநிலை ஏற்படுவது நோயாளிக்கு கவனம் தேவை என்பதற்கான அறிகுறிகளாக இருக்கலாம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

மூக்கில் கருப்பு நிற மாற்றம்
முகத்தில் மாற்றம் என்பது நோய்த்தொற்றின் முதன்மை அம்சமாகும். மிகவும் கடுமையான சந்தர்ப்பங்களில், இந்த தொற்றானது கண்கள், மூக்கைச் சுற்றி கருப்பு திட்டுகளின் வளர்ச்சியை ஏற்படுத்தும். சில சந்தர்ப்பங்களில், பூஞ்சை தொற்றுநோய்களின் வளர்ச்சியானது ஒரு நபரின் பற்கள் அல்லது தாடைகலில் தாக்கத்தை ஏற்படுத்தும்.



Click it and Unblock the Notifications











