இந்த பிரச்சனை இருக்குறவங்க உடம்புல கொரோனா வந்தா.. அது உயிருக்கே ஆபத்தை உண்டாக்கிடுமாம்... உஷார்...

கோவிட் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான மக்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படாமல் லேசான, மிதமான பிரச்சனையை சந்திக்கிறார்கள். ஆனால் சிலர் கடுமையான கோவிட் சிக்கல்களை சந்திப்பதோடு, மரணத்தையும் சந்திக்கிறார்கள்.

கொடிய கொரோனா வைரஸ் உலகெங்கிலும் பரவியுள்ளது. சிறிதும் பாரபட்சம் பார்க்காமல் மக்கள் அனைவரையும் தாக்கிக் கொண்டிருக்கிறது. என்ன தான் அனைவரையும் தாக்கினாலும், அது ஏற்படுத்தும் நோயின் தீவிரம் ஒருவருக்கு ஒருவர் வேறுபடும். இந்நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான மக்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படாமல் லேசான மற்றும் மிதமான பிரச்சனையை சந்திக்கிறார்கள். ஆனால் சிலர் கடுமையான கோவிட் சிக்கல்களை சந்திப்பதோடு, மரணத்தையும் சந்திக்கிறார்கள்.

Risk Factors for Developing Severe Covid-19 Complications

உதாரணமாக, வயதானவர்கள் மற்றும் ஒருசில ஆரோக்கிய பிரச்சனைகளைக் கொண்டவர்களை கொரோனா நோய்த்தொற்று தாக்கினால், அவர்கள் கோவிட்-19 இன் கடுமையான சிக்கல்களைப் பெறுவதற்கான ஆபத்து அதிகமாக இருப்பதாக பல்வேறு சுகாதார அதிகாரிகள் ஆவணப்படுத்தியுள்ளனர். கீழே ஆய்வுகள் பரிந்துரைத்தபடி கடுமையான கோவிட் -19 ஐ உருவாக்கும் சில ஆபத்து காரணிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உடல் பருமனாக இருப்பது

உடல் பருமனாக இருப்பது

தி லான்செட் நீரிழிவு மற்றும் உட்சுரப்பியல் இதழில் வெளியிடப்பட்ட ஒரு புதிய ஆய்வில், அதிக எடையுடன் இருப்பது ICU சேர்க்கை உட்பட கோவிட்-19 இன் கடுமையான விளைவுகளின் அபாயத்தை அதிகரிப்பது தெரிய வந்துள்ளது. இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்களின் கூற்றுப்படி, கோவிட்-19 இன் மோசமான விளைவுகளின் ஆபத்து ஒரு சதுர மீட்டருக்கு 23 கிலோகிராம் (கிலோ / மீ 2) க்கு மேல் BMI உள்ளவர்களில் உயரத் தொடங்குகிறது. அதுவும் BMI-யின் ஒவ்வொரு யூனிட் அதிகரிப்பிற்கும், மருத்துவமனையில் சேர்க்கும் ஆபத்து 5 சதவீதம் அதிகமாகவும், ICU சேர்க்கையின் ஆபத்து 10 சதவீதமாகவும் அதிகரிக்கும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

எடை குறைவாக இருப்பது

எடை குறைவாக இருப்பது

எடை குறைவான நபர்களும் (BMI 18.5 க்கும் குறைவானவர்கள்) கடுமையான கோவிட்-19 ஐ உருவாக்கும் அபாயத்தில் உள்ளனர் என்று மேற்குறிப்பிட்டுள்ள அதே லான்செட் ஆய்வில் தெரிய வந்துள்ளது. முந்தைய ஆய்வுகள் கூட எடை குறைவாக இருப்பதை மருத்துவமனையில் சேர்ப்பது மற்றும் இறப்பது ஆகியவற்றுடன் இணைத்துள்ளன. மேலும் ஒரு ஆய்வில், நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் (CDC) ஆராய்ச்சியாளர்கள், மிக அதிகமான அல்லது மிகக் குறைந்த BMI இருப்பது கோவிட்-19 இன் கடுமையான நிகழ்வுகளுக்கு வலுவான ஆபத்து காரணி எனவும் விவரித்தனர்.

சர்க்கரை நோய்

சர்க்கரை நோய்

சர்க்கரை நோய் உள்ளவர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்படும் போது, அவர்கள் கடுமையான அறிகுறிகளையும், சிக்கல்களையும் சந்திக்க வாய்ப்புள்ளதாக பல்வேறு ஆய்வுகள் சுட்டிக்காட்டியுள்ளன. அதுவும் சர்க்கரை நோயுடன், இதய நோய் அல்லது பிற நோய்களை கொண்டிருந்தால், அது கோவிட்-19 இன் தீவிரத்தை மேலும் மோசமாக்கும். எனவே கோவிட் தொற்றால் நோய்வாய்ப்படும் அபாயத்தைக் குறைக்க சர்க்கரை நோயை நன்கு நிர்வகிக்க முயலுங்கள்.

கர்ப்பம்

கர்ப்பம்

கடுமையான கோவிட்-19 க்கு கர்ப்பமும் ஒரு ஆபத்து காரணியாக நம்பப்படுகிறது. கோவிட்-19 இன் கடுமையான அறிகுறிகளை அனுபவித்த கர்ப்பிணிப் பெண்களுக்கு சிசேரியன் பிரசவம், பிரசவத்திற்குப் பிந்தைய ரத்தக்கசிவு, கர்ப்ப கால உயர் இரத்த அழுத்தக் கோளாறுகள் மற்றும் குறைப்பிரசவத்திற்கு அதிக வாய்ப்புள்ளது என்று ஒரு தேசிய சுகாதார ஆய்வின் ஆரம்ப கண்டுபிடிப்புகள் தெரிவிக்கின்றன.

புற்றுநோய் சிகிச்சை

புற்றுநோய் சிகிச்சை

EBioMedicine இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, புற்றுநோய் சிகிச்சைக்கு உட்படுத்தப்படும் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் நீண்டகால கோவிட் -19 நோய்த்தொற்றை அனுபவிக்க வாய்ப்புள்ளது மற்றும் நோயெதிர்ப்பு மண்டலங்களின் சமரசம் காரணமாக பல மாதங்களுக்கு கோவிட் பரிசோதனையில் பாசிட்டிவ் முடிவு பெறப்படுகிறது. இன்டர்நேஷனல் ஜர்னல் ஆஃப் கிளினிக்கல் ஆன்காலஜியில் வெளியிடப்பட்ட ஆய்வில், புற்றுநோய் அல்லாத நோயாளிகளுடன் ஒப்பிடும் போது புற்றுநோய் உள்ள நோயாளிகளில் மிகவும் கடுமையான கோவிட் -19 தொற்று மற்றும் இறப்பு எண்ணிக்கை அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion