Latest Updates
-
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்... -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய பச்சப்புளி ரசம் - செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்றதுன்னு பாருங்க.. -
கேது-சந்திரன் உருவாக்கும் கிரகண யோகம் 2026: இந்த 3 ராசிக்காரங்க கோடிகளை குவிக்கப்போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
இந்த ஒரு மூலிகை டீயை தொடர்ந்து 14 நாட்கள் குடித்தால் சிறுநீரக கல் கரையுமாம் - கூறும் ஆயுர்வேத டாக்டர்! -
பாபா வாங்கா-நோஸ்ட்ரடாமஸ் கணிப்பு படி மூன்றாம் உலகப்போருக்கு பின் எந்த நாடு சக்திவாய்ந்ததாக இருக்கும் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடைந்த குரு பகவான்: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாரெல்லாம் கவனமா இருக்கணும் தெரியுமா?
இந்த பிரச்சனை இருக்குறவங்க உடம்புல கொரோனா வந்தா.. அது உயிருக்கே ஆபத்தை உண்டாக்கிடுமாம்... உஷார்...
கோவிட் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான மக்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படாமல் லேசான, மிதமான பிரச்சனையை சந்திக்கிறார்கள். ஆனால் சிலர் கடுமையான கோவிட் சிக்கல்களை சந்திப்பதோடு, மரணத்தையும் சந்திக்கிறார்கள்.
கொடிய கொரோனா வைரஸ் உலகெங்கிலும் பரவியுள்ளது. சிறிதும் பாரபட்சம் பார்க்காமல் மக்கள் அனைவரையும் தாக்கிக் கொண்டிருக்கிறது. என்ன தான் அனைவரையும் தாக்கினாலும், அது ஏற்படுத்தும் நோயின் தீவிரம் ஒருவருக்கு ஒருவர் வேறுபடும். இந்நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான மக்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படாமல் லேசான மற்றும் மிதமான பிரச்சனையை சந்திக்கிறார்கள். ஆனால் சிலர் கடுமையான கோவிட் சிக்கல்களை சந்திப்பதோடு, மரணத்தையும் சந்திக்கிறார்கள்.

உதாரணமாக, வயதானவர்கள் மற்றும் ஒருசில ஆரோக்கிய பிரச்சனைகளைக் கொண்டவர்களை கொரோனா நோய்த்தொற்று தாக்கினால், அவர்கள் கோவிட்-19 இன் கடுமையான சிக்கல்களைப் பெறுவதற்கான ஆபத்து அதிகமாக இருப்பதாக பல்வேறு சுகாதார அதிகாரிகள் ஆவணப்படுத்தியுள்ளனர். கீழே ஆய்வுகள் பரிந்துரைத்தபடி கடுமையான கோவிட் -19 ஐ உருவாக்கும் சில ஆபத்து காரணிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

உடல் பருமனாக இருப்பது
தி லான்செட் நீரிழிவு மற்றும் உட்சுரப்பியல் இதழில் வெளியிடப்பட்ட ஒரு புதிய ஆய்வில், அதிக எடையுடன் இருப்பது ICU சேர்க்கை உட்பட கோவிட்-19 இன் கடுமையான விளைவுகளின் அபாயத்தை அதிகரிப்பது தெரிய வந்துள்ளது. இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்களின் கூற்றுப்படி, கோவிட்-19 இன் மோசமான விளைவுகளின் ஆபத்து ஒரு சதுர மீட்டருக்கு 23 கிலோகிராம் (கிலோ / மீ 2) க்கு மேல் BMI உள்ளவர்களில் உயரத் தொடங்குகிறது. அதுவும் BMI-யின் ஒவ்வொரு யூனிட் அதிகரிப்பிற்கும், மருத்துவமனையில் சேர்க்கும் ஆபத்து 5 சதவீதம் அதிகமாகவும், ICU சேர்க்கையின் ஆபத்து 10 சதவீதமாகவும் அதிகரிக்கும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

எடை குறைவாக இருப்பது
எடை குறைவான நபர்களும் (BMI 18.5 க்கும் குறைவானவர்கள்) கடுமையான கோவிட்-19 ஐ உருவாக்கும் அபாயத்தில் உள்ளனர் என்று மேற்குறிப்பிட்டுள்ள அதே லான்செட் ஆய்வில் தெரிய வந்துள்ளது. முந்தைய ஆய்வுகள் கூட எடை குறைவாக இருப்பதை மருத்துவமனையில் சேர்ப்பது மற்றும் இறப்பது ஆகியவற்றுடன் இணைத்துள்ளன. மேலும் ஒரு ஆய்வில், நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் (CDC) ஆராய்ச்சியாளர்கள், மிக அதிகமான அல்லது மிகக் குறைந்த BMI இருப்பது கோவிட்-19 இன் கடுமையான நிகழ்வுகளுக்கு வலுவான ஆபத்து காரணி எனவும் விவரித்தனர்.

சர்க்கரை நோய்
சர்க்கரை நோய் உள்ளவர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்படும் போது, அவர்கள் கடுமையான அறிகுறிகளையும், சிக்கல்களையும் சந்திக்க வாய்ப்புள்ளதாக பல்வேறு ஆய்வுகள் சுட்டிக்காட்டியுள்ளன. அதுவும் சர்க்கரை நோயுடன், இதய நோய் அல்லது பிற நோய்களை கொண்டிருந்தால், அது கோவிட்-19 இன் தீவிரத்தை மேலும் மோசமாக்கும். எனவே கோவிட் தொற்றால் நோய்வாய்ப்படும் அபாயத்தைக் குறைக்க சர்க்கரை நோயை நன்கு நிர்வகிக்க முயலுங்கள்.

கர்ப்பம்
கடுமையான கோவிட்-19 க்கு கர்ப்பமும் ஒரு ஆபத்து காரணியாக நம்பப்படுகிறது. கோவிட்-19 இன் கடுமையான அறிகுறிகளை அனுபவித்த கர்ப்பிணிப் பெண்களுக்கு சிசேரியன் பிரசவம், பிரசவத்திற்குப் பிந்தைய ரத்தக்கசிவு, கர்ப்ப கால உயர் இரத்த அழுத்தக் கோளாறுகள் மற்றும் குறைப்பிரசவத்திற்கு அதிக வாய்ப்புள்ளது என்று ஒரு தேசிய சுகாதார ஆய்வின் ஆரம்ப கண்டுபிடிப்புகள் தெரிவிக்கின்றன.

புற்றுநோய் சிகிச்சை
EBioMedicine இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, புற்றுநோய் சிகிச்சைக்கு உட்படுத்தப்படும் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் நீண்டகால கோவிட் -19 நோய்த்தொற்றை அனுபவிக்க வாய்ப்புள்ளது மற்றும் நோயெதிர்ப்பு மண்டலங்களின் சமரசம் காரணமாக பல மாதங்களுக்கு கோவிட் பரிசோதனையில் பாசிட்டிவ் முடிவு பெறப்படுகிறது. இன்டர்நேஷனல் ஜர்னல் ஆஃப் கிளினிக்கல் ஆன்காலஜியில் வெளியிடப்பட்ட ஆய்வில், புற்றுநோய் அல்லாத நோயாளிகளுடன் ஒப்பிடும் போது புற்றுநோய் உள்ள நோயாளிகளில் மிகவும் கடுமையான கோவிட் -19 தொற்று மற்றும் இறப்பு எண்ணிக்கை அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டது.



Click it and Unblock the Notifications











