Latest Updates
-
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்!
பித்தப்பை கற்கள் மாயமா மறையணுமா? அப்ப தினமும் இத குடிங்க...
பித்தக்கற்கள் இருந்தால், அதை வெறும் அறுவை சிகிச்சையின் மூலம் மட்டுமே நீக்க முடியும் என்பதில்லை. அந்த கற்களை இயற்கையாகவே ஒருசில இயற்கை வைத்தியங்களின் மூலம் கரைக்க முடியும்.
உடலில் பித்தப்பையானது மிகச்சிறிய அளவில் பேரிக்காய் வடிவில் கல்லீரலுக்கு பின்புறம் இருக்கும். பித்தப்பையின் வேலையே, கல்லீரல் சுரக்கும் கொலஸ்ட்ராலைக் கரைக்கத் தேவையான பித்தநீரை சேகரித்து வைப்பதாகும். எப்போது கொழுப்பு நிறைந்த உணவுகள் குடலை அடைகிறதோ, அப்போது குடலானது பித்தப்பைக்கு பித்த நீரை அனுப்புமாறு ஒரு சிக்னல் அனுப்பும்.

உடனே பித்தப்பையும் பித்த நீரை அனுப்பி, கொழுப்பு நிறைந்த உணவை எளிதில் உடைத்தெறியச் செய்து, செரிமான செயல்பாட்டை எளிதாக்கும். சிலருக்கு இத்தகைய பித்தப்பையில் கற்கள் உருவாகும். ஒருவரது பித்தப்பையில் கற்கள் உருவாவதற்கு பித்தநீரின் வேதியியல் தயாரிப்பில் உள்ள ஏற்றத்தாழ்வு தான் காரணம். மேலும் வேறு சில காரணங்களாலும் பித்தக்கற்கள் உருவாகலாம்.
பித்தக்கற்கள் இருந்தால், அதை வெறும் அறுவை சிகிச்சையின் மூலம் மட்டுமே நீக்க முடியும் என்பதில்லை. அந்த கற்களை இயற்கையாகவே ஒருசில இயற்கை வைத்தியங்களின் மூலம் கரைக்க முடியும். இக்கட்டுரையில் பித்தக்கற்களைக் கரைக்க உதவும் ஒருசில இயற்கை பானங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அந்த பானங்கள் நிச்சயம் பித்தக்கற்களைக் கரைத்துவிடும்.

ஆப்பிள் ஜூஸ்
ஆப்பிள் ஜூஸ் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் சிறப்பான ஒரு பானம். அதிலும் ஒரு டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை ஒரு டம்ளர் நற்பதமான ஆப்பிள் ஜூஸ் உடன் சேர்த்து கலந்து, தினமும் காலையில் குடிக்க வேண்டும். இப்படி செய்தால், ஆப்பிள் ஜூஸில் உள்ள மாலிக் அமிலம், பித்தக்கற்களை மென்மையாக்கும் மற்றும் வினிகர் பித்தப்பையில் உள்ள அதிகப்படியான கொலஸ்ட்ராலைக் குறைக்கும். இந்த இரண்டு பொருட்களும் தொடர்ந்து பித்தப்பைக்குள் செல்லும் போது, பித்தக்கற்கள் மெதுவாக கரைய ஆரம்பித்துவிடும்.

டான்டேலியன் மற்றும் மில்க் திஸ்டல்
டான்டேலியன் தாவரத்தின் இலைகள் பித்தப்பையில் பித்தநீரின் சுரப்பைத் தூண்டும் மற்றும் மில்க் திஸ்டல் கல்லீரலால் அடர்த்தி குறைவான பித்தநீரை உற்பத்தி செய்ய உதவும். இந்த இரண்டு பொருட்களுமே பித்தக்கற்களைக் கரைக்க உதவக்கூடியவை. ஒரு கப் டான்டேலியன் இலைகளை மிக்ஸியில் போட்டு அரைத்து, அத்துடன் 1/4 கப் மில்க் திஸ்டன் இலைகளை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பின் அதை ஒரு டம்ளரில் ஊற்றி, சுவைக்கு தேன் சேர்த்துக் கொள்ளலாம். இந்த பானத்தைக் குடித்தால் பித்தக்கற்களை விரைவில் கரையும்.

எப்சம் உப்பு ஜூஸ்
பித்தநீர் குழாய் வழியாக பித்தப்பைகளை எளிதில் நகர்த்துவதற்கு எப்சம் உப்புகள் காரணமாகின்றன. காலையில் எழுந்ததும் ஒரு டீஸ்பூன் எப்சம் உப்பை நீரில் போட்டு அறை வெப்பநிலையில் வைத்து, தினமும் மாலையில் குடிக்க வேண்டும். இப்படி ஒரு வாரம் தொடர்ந்து குடிக்க வேண்டும். வேண்டுமானால் இரண்டு மணிநேரத்திற்கு ஒருமுறை கூட எப்சம் உப்பு நீரைக் குடிக்கலாம். ஆனால் சிலருக்கு எப்சம் உப்பு நீரை அதிகம் குடித்த பின் தீவிரமான வயிற்றுப்போக்கு ஏற்பட்டதாக ரிபோர்ட்டுகள் கூறுகின்றன.

எலுமிச்சை ஜூஸ்
நற்பதமான 4 எலுமிச்சை பழங்களைப் பிழிந்து ஜூஸ் போட்டு, தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடியுங்கள். இப்படி ஒரு வாரம் தொடர்ந்து செய்து வந்தால், வலியின்றி பித்தக்கற்கள் வெளியேறிவிடும். மேலும் பித்தக்கற்கள் உடலில் இருந்து முழுமையாக வெளியேற வேண்டுமானால், அதிகளவு நீரைப் பருக வேண்டியது அவசியம்.

பேரிக்காய் ஜூஸ்
1/2 டம்ளர் சுடுநீரில் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து, எஞ்சிய பாதியில் பேரிக்காய் ஜூஸ் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும். இதனால் பேரிக்காயில் உள்ள பெக்டின், பித்தக்கற்களை இயற்கையாக கரைத்துவிடும்.

புதினா டீ
புதினா பித்த நீர் மற்றும் டெர்பீனின் ஓட்டத்தைத் தூண்டுவதற்கு பொறுப்பாகும். இது பித்தக்கற்களையும் கரைக்க உதவும். ஒரு டம்ளர் நற்பதமான புதினா டீ தயாரிப்பதற்கு, சில புதினா இலைகளை சுடுநீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து, இறக்கி வடிகட்டி குடிக்க வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு பலமுறை குடித்தால், பித்தக்கற்கள் கரைத்துவிடும்.

ஹெர்பல் டீ
மூலிகை சாறுகள் பித்தக்கற்களைக் கரைக்கும் பணியை சிறப்பாக செய்யக்கூடியவை. எனவே ஒரு நாளைக்கு இரண்டு முறை ஹெர்பல் டீயைக் குடிப்பதன் மூலம், பித்தக்கல் பிரச்சனையில் இருந்து விடுபடலாம். இந்த டீ தயாரிப்பதற்கு, 4-5 விருப்பமான ஏதேனும் மூலிகை இலையை கொதிக்கும் நீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி பருக வேண்டும்.



Click it and Unblock the Notifications