Latest Updates
-
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
சுவையான இந்த காயில் செய்யும் சட்னி உங்க நோயெதிர்ப்பு சக்தியை பலமடங்கு அதிகரிக்குமாம்...!
எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறி (ஐ.பி.எஸ்) பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த சட்னியைத் தவிர்க்க வேண்டும். கர்ப்பிணிப் பெண்கள் கூட இதை குறைந்த அளவில் உட்கொள்ள வேண்டும்.
ஒரு வலுவான நோயெதிர்ப்பு அமைப்பு எப்போதும் நீண்ட மற்றும் நோய் இல்லாத வாழ்க்கையை வாழ மிக முக்கியமானது. ஆனால் இப்போது நாம் நெருக்கடியான காலகட்டத்தில் இருக்கும். கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பேரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. லட்சகணக்கான மக்கள்உயிரிழந்துள்ளனர். இந்த கொரோனா வைரஸை கையாளும் போது, ஒரு வலுவான நோய் எதிர்ப்பு சக்தி இருப்பது முன்னெப்போதையும் விட முக்கியமானது. ஆதலால், ஒவ்வொருவரும் நோயெதிர்ப்பு சக்தியை வளர்த்துக்கொள்ள முயல்கின்றனர்.

உடலின் இயற்கையான பாதுகாப்பு அமைப்பை வலுப்படுத்துவது நேரம் எடுக்கும் செயல்முறையாக இருந்தாலும், பல விஷயங்கள் மூலம் நீங்கள் தொற்றுநோயைக் குறைக்க முயற்சி செய்யலாம். மக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தேநீர் மற்றும் மூலிகைகளை முயற்சி செய்கிறார்கள். உங்கள் உணவில் ஆரோக்கியமான மற்றும் சுவையான ஒன்றை நீங்கள் சேர்க்க விரும்பினால், உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மாங்காய் சட்னியை முயற்சிக்கவும். மாங்காய் சட்னி உங்களின் நோயெதிர்ப்பு சக்தியை எப்படி வலுப்படுத்தும் என்பதை இக்கட்டுரையில் காணலாம்.

நோய் எதிர்ப்பு சக்தி
கோடைகாலம் என்றாலே பலருக்கு முதலில் நியாபகம் வருவது மாம்பழம் சீசன். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் முக்கனிகளில் ஒன்று மா. இதை காயாகவும், பழமாகவும் மற்றும் சமையலிலும் சேர்த்து உண்ணலாம். மாங்காய் மற்றும் மாம்பழம், இரண்டுமே அதன் தனித்துவமான சுவையை கொண்டுள்ளன மற்றும் அவற்றின் அற்புதமான ஆரோக்கிய நன்மைகளுக்கு பெயர் பெற்றவை.

மாங்காய் சட்னி
நீங்கள் சாப்பிடும் ஒவ்வொரு உணவுடனும் ஒரு ஸ்பூன் மாங்காய் சட்னி சேர்ப்பதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் என்றால் நீங்கள் நம்புவீர்களா? ஆம். ஊட்டச்சத்து நிபுணர்களின் கூற்றுப்படி, நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மாங்காய் சட்னி உதவுவதாக கூறுகின்றனர். பருப்பு, அரிசி, ரோட்டி மற்றும் சப்ஜி ஆகியவற்றைக் கொண்ட பாரம்பரிய உணவோடு மாங்காய் சட்னியும் சேர்த்து குடும்பத்தில் உள்ள அனைவரையும் மகிழ்விக்க முடியும்.

தேவையான பொருட்கள்
ஒரு மாங்காய்
3 பூண்டு பற்கள்
இஞ்சி சிறிதளவு
1/2 சிறிய வெங்காயம்
1 சிறிய தக்காளி
1 டீஸ்பூன் மாதுளை விதைகள்
10-12 புதிய கறிவேப்பிலை
4-5 புதிய அஜ்வைன் இலைகள்
5-6 புதிய துளசி இலைகள்

அதை எவ்வாறு தயாரிப்பது
மாங்காயை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளவும். பின்னர் மேலே கொடுக்கப்பட்டுள்ள தேவையான பொருட்கள் அனைத்தையும், நறுக்கி வைத்துள்ள மாங்காயையும் மிக்சியில் சேர்த்து அரைத்து கொள்ள வேண்டும். பின்னர், இதை எடுத்து பரிமாறலாம். இந்த சட்னியின் 1-2 தேக்கரண்டி தினமும் உங்கள் சாப்பாட்டுடன் சேர்த்து நீங்கள் சாப்பிடலாம்.

இறுதி குறிப்பு
எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறி (ஐ.பி.எஸ்) பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த சட்னியைத் தவிர்க்க வேண்டும். கர்ப்பிணிப் பெண்கள் கூட இதை குறைந்த அளவில் உட்கொள்ள வேண்டும்.



Click it and Unblock the Notifications











