Just In
- 16 min ago இந்த 4 ராசிக்காரங்க சிறந்த பாலியல் துணையாக இருப்பார்களாம்... இவங்க வாழ்க்கைத்துணையா கிடைக்க அதிர்ஷ்டம் வேணும்!
- 1 hr ago எப்பவும் ஒரே மாதிரி சட்னி செய்யாம.. ஒருமுறை தீயில் சுட்ட தக்காளி சட்னியை செய்யுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்..
- 4 hrs ago Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- 10 hrs ago 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
Don't Miss
- News வல்லவர்களை..நல்லவர்களை..! இன்றைக்கு ரொம்ப முக்கியம்.. எடப்பாடி பழனிசாமி வைத்த முக்கிய கோரிக்கை..!
- Movies வேணாம் வேற மாதிரி ஆயிடும்… பயில்வானின் கேள்வியால் கடுப்பான விஷால்!
- Technology அள்ளி கொடுக்கும் Jio.. ப்ரீபெய்ட் திட்டங்களில் எக்ஸ்ட்ரா டேட்டா.. OTT.. வாய்ஸ் கால்கள்.. விட்றாதீங்க..
- Sports ரூ.14 கோடி வீரருக்கு ஆப்பு.. லக்னோ பிட்சால் சிஎஸ்கே அணியில் நடக்கப்போகும் மாற்றம்.. ருதுராஜ் முடிவு!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
காய்ச்சல் & தொண்டை நோய்தொற்றுகளை குணப்படுத்த உங்க வீட்டில் இருக்கும் இந்த மூலிகைகள் போதுமாம்!
இந்த தைம் வலுவான டானிக் மற்றும் கிருமி நாசினிகள் பண்புகளைக் கொண்டுள்ளது. மேலும் இந்த பண்புகள் காரணமாக, எலுமிச்சை தைம் ஒரு விதிவிலக்கான மூலிகையாகும்
எல்லா பருவங்களிலும், நாம் சில உடல்நல பிரச்சனைகளை அனுபவிக்கிறோம். குளிர்காலத்தின்போது, சூரிய ஒளியில் அமர்ந்து மதிய வேளைகளில் வெப்பத்தை அனுபவிக்கும் போது மிகவும் அற்புதமான ஒன்றாக இருக்கும். இந்த பருவத்தில், பெரும்பாலான மக்கள் காரமான மற்றும் வறுத்த உணவுகளில் ஈடுபட விரும்புகிறார்கள். ஏனெனில் நமது வளர்சிதை மாற்றம் அதிகரிக்கிறது மற்றும் நாம் உட்கொள்ளும் உணவு எளிதில் செரிமானமாகும். இருப்பினும், இந்த காலத்தில் சளி, இருமல், காய்ச்சல், வைரஸ் தொற்று மற்றும் வயிற்று வலி ஆகியவை உங்களை அதிகமாக பாதிக்கும் வாய்ப்புள்ளது. குளிர்ந்த காலநிலை காரணமாக மற்றவர்கள் சுவாசப் பிரச்சனைகளை உணர்கிறார்கள். இருப்பினும், இயற்கையில் எல்லாவற்றிற்கும் ஒரு சிகிச்சை உள்ளது,
மேலும் எளிய மூலிகைகளை உட்கொள்வதன் மூலம் நீங்கள் ஆரோக்கியமாக இருக்க முடியும். இந்தியா ஆயுர்வேத மருத்துவத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. அங்கு மூலிகைகள் மற்றும் அவற்றின் மருத்துவ குணங்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த குளிர்காலத்தில் நாம் உட்கொள்ள வேண்டிய பொதுவான மூலிகைகள் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.
லெமன் தைம்
இந்த தைம் வலுவான டானிக் மற்றும் கிருமி நாசினிகள் பண்புகளைக் கொண்டுள்ளது. மேலும் இந்த பண்புகள் காரணமாக, எலுமிச்சை தைம் ஒரு விதிவிலக்கான மூலிகையாகும். இது மார்பு மற்றும் தொண்டை நோய்த்தொற்றுகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுகிறது. இது குளிர்காலத்தில் மிகவும் பொதுவானது. இந்த மூலிகையிலிருந்து சில உடனடி முடிவுகளைப் பெற, ஒரு கப் வெந்நீரை எடுத்து அதனுடன் ஒரு துளி லெமன் தைம் சேர்க்கவும். கோப்பையை ஒரு மூடியால் மூடி, அதன் அத்தியாவசிய எண்ணெய்களை வெளியிட மூலிகையை அதில் உட்செலுத்தவும். இந்த லெமன் தைம் தண்ணீர் / தேநீரை ஒரு நாளைக்கு 2-3 முறை தொற்றுநோயைப் பொறுத்து வடிகட்டி குடிக்கவும். நீங்கள் விரும்பினால், அதில் சிறிது தேன் சேர்த்தும் அருந்தலாம்.
காலெண்டுலா(சாமந்தி)
சாமந்தி என்றும் அழைக்கப்படும் காலெண்டுலா பூக்கள், அதன் தோற்றத்திற்காக அறியப்படுகிறது. இது வைரஸ் தடுப்பு பண்புகளைக் கொண்டுள்ளது மற்றும் நோய்த்தொற்றுகளை அழிக்க உதவுகிறது, மேலும் செரிமான அமைப்பு, கல்லீரல் மற்றும் பித்தப்பையை நச்சு நீக்கி சமநிலைப்படுத்துகிறது. நீங்கள் செய்ய வேண்டியது 2 டீஸ்பூன் சாமந்தி பூ இதழ்களை 750 மில்லி வேகவைத்த தண்ணீரில் 10 நிமிடங்கள் ஊற்ற வைக்கவும். பின்னர் வடிகட்டி, ஒரு நாளைக்கு ஐந்து கப் வரை குடிக்கலாம்.
வோக்கோசு
வோக்கோசு, பெரும்பாலும் உணவை அழகுபடுத்தப் பயன்படுத்தப்படுகிறது. வோக்கோசின் புதிய இலைகளில் வைட்டமின்கள் A & E மற்றும் இரும்புச்சத்துடன் நல்ல அளவு வைட்டமின் சி உள்ளது. வோக்கோசு ஒரு நச்சு மூலிகையாகக் கருதப்படுகிறது மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இது நச்சுகளை அகற்ற உதவுகிறது மற்றும் சோர்வை நீக்க உதவுகிறது. குளிர்காலத்தில் இந்த மூலிகையைப் பயன்படுத்த, இந்த மூலிகையை சாலட் அல்லது நீங்கள் உட்கொள்ளும் எந்த உணவிலும் சேர்க்கலாம். இது பருவகால சளி மற்றும் காய்ச்சலில் இருந்து நிவாரணம் பெற உதவும். உடனடி நிவாரணம் பெற, ஒரு கோப்பையில் 1-2 டீஸ்பூன் புதிய வோக்கோசு இலைகளை சேர்த்து, அதில் சூடான நீரை சேர்க்கவும். 5-7 நிமிடங்கள் ஊறவைத்து, ஒரு நாளைக்கு 2-3 முறை குடிக்கவும். பலன்களை நீங்களே காணலாம்.
துளசி
புனித துளசி என்றும் அழைக்கப்படுகிறது. இது இந்தியாவின் முக்கியமான மூலிகைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இது உள்ளார்ந்த குணப்படுத்தும் மற்றும் அறிவொளி தரும் குணங்களைக் கொண்டுள்ளது, இது சாதாரண உடல் வெப்பநிலையை பராமரிக்கவும், நல்ல சுவாசத்தை ஊக்குவிக்கவும், செரிமானத்தை விரைவுபடுத்தவும், மனதையும் உடலையும் அமைதிப்படுத்தவும் உதவும். துளசி செடியின் இலைகளில் ஆவியாகும் எண்ணெய்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன. அவை வைரஸ்கள், தொற்றுகள் மற்றும் ஒவ்வாமைகளை எதிர்த்துப் போராடும். இதை உங்கள் வழக்கமான தேநீரில் சேர்க்கவும் அல்லது உலர்த்தி, இருமல் மற்றும் சளியிலிருந்து நிவாரணம் பெற உங்கள் அன்றாட உணவுகளில் மசாலாப் பொருளாகப் பயன்படுத்தவும்.
அதிமதுரம் (முலேத்தி)
பல நூற்றாண்டுகளாக, தொண்டை வலியிலிருந்து நிவாரணம் பெற அதிமதுரம் அல்லது முலேத்தி ஒரு மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. இது ஒரு அற்புதமான மூலிகையாகும். இது ஆஸ்துமா மற்றும் சுவாசக்குழாய் நோய்களுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது. செரிமானத்தை மேம்படுத்துகிறது மற்றும் குளிர்கால நோய்களுக்கு எதிராக உடலைப் போராடுவதற்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இந்த மூலிகை அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது மற்றும் தோல் பிரச்சனைகளை குணப்படுத்துகிறது. இந்த செடியின் வேர் தூள் வடிவில் கிடைக்கிறது, இதை தேன் மற்றும் நெய்யுடன் சேர்த்து சாப்பிடலாம், இது குளிர்காலத்தில் சிறந்த ஆரோக்கியத்தை உங்களுக்கு வழங்குவது உறுதி.
புதினா இலைகள்
புதினா பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட ஒரு அற்புதமான மூலிகையாகும். இது சுவையான சட்னி, காய்கறி, பிரியாணி மற்றும் பல உணவுகளில் பயன்படுத்த்த்ப்படுகிறது. அதுமட்டுமின்றி, புதினா இலைகள் டீ தயாரிக்கவும் பயன்படுகிறது, இது அஜீரணத்தில் இருந்து உங்களுக்கு நிவாரணம் அளிக்கும். புதினா ஒரு குளிர்ச்சியான மூலிகை என்பதால், குளிர்காலத்தில் அதை பயன்படுத்தக்கூடாது என்று நம்பப்படுகிறது. மாறாக, இதில் வைட்டமின் ஏ மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன, இது சளி காரணமாக ஏற்படும் தலைவலிக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது மற்றும் ஆஸ்துமாவை குணப்படுத்துகிறது.