Latest Updates
-
இந்த ஒரு மூலிகை டீயை தொடர்ந்து 14 நாட்கள் குடித்தால் சிறுநீரக கல் கரையுமாம் - கூறும் ஆயுர்வேத டாக்டர்! -
பாபா வாங்கா-நோஸ்ட்ரடாமஸ் கணிப்பு படி மூன்றாம் உலகப்போருக்கு பின் எந்த நாடு சக்திவாய்ந்ததாக இருக்கும் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடைந்த குரு பகவான்: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாரெல்லாம் கவனமா இருக்கணும் தெரியுமா? -
வெயில் காலத்தில் இந்த கஞ்சியை அடிக்கடி செஞ்சு குடிங்க.. கொழுப்பும் குறையும், உடலும் குளிர்ச்சியா இருக்கும்... -
இன்றைய ராசிபலன் 12 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நினைத்தது நடக்கும் நாளாக இருக்குமாம்...! -
30 ஆண்டுக்கு பின் சனியும்-செவ்வாயும் மீனத்தில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
No Oil Noi Boil Recipe: அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...! -
1 வருடத்துக்கு பின் மேஷம் செல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்...
காலையில் பற்களைத் துலக்காமல் வெறும் வயிற்றில் டீ குடிப்பதால் சந்திக்கும் பிரச்சனைகள் பற்றி தெரியுமா?
நீங்கள் காலையில் எழுந்ததும் டீ குடிப்பவரானால், அது எம்மாதிரியான தீங்கை விளைவிக்கும் என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
காலையில் எழுந்ததும் ஒரு கப் சூடான டீ குடித்தால் தான் பலருக்கு அன்றைய தினத்தை சிறப்பாக ஆரம்பித்த ஒரு சந்தோஷம் இருக்கும். ஒருவேளை டீ குடிக்காமல் இருந்தால் மனநிலை பாழாகிவிடும். அந்த அளவில் டீ பலரை அதன் சுவையால் அடிமையாக்கியுள்ளது. எப்படி காபி பிரியர்கள் இவ்வுலகில் அதிகம் உள்ளனரோ, அதேப் போல் டீ பிரியர்களும் ஏராளமாக உள்ளனர். அந்த டீ பிரியர்களுக்கு ஏற்ப பல வகையான டீக்களும் உள்ளன.

பெரும்பாலான மக்கள் பெட் டீ குடிக்க விரும்புவார்கள். ஆனால் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் டீ குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு எவ்வளவு தீங்கு விளைவிக்கும் என்று தெரியுமா? அதுவும் டீயை ஸ்ட்ராங்காக குடித்தால், அதனால் அதிக சேதம் ஏற்படும். டீயில் காப்ஃபைன் அதிகம் உள்ளது. இதை வெறும் வயிற்றில் குடிக்கும் போது அது தீங்கு விளைவிக்கும். நீங்கள் காலையில் எழுந்ததும் டீ குடிப்பவரானால், அது எம்மாதிரியான தீங்கை விளைவிக்கும் என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

அசிடிட்டி
ஒருவர் காலையில் எழுந்தவுடனேயே வெறும் வயிற்றில் டீயை குடித்தால் சந்திக்கும் ஓர் பிரச்சனை தான் அசிடிட்டி. ஆம், வெறும் வயிற்றில் டீ குடிக்கும் போது, இரைப்பையில் அமிலம் அதிகம் சுரக்கப்பட்டு அசிடிட்டி பிரச்சனையை உண்டாக்கும் மற்றும் இது உடலில் செரிமான அமிலத்தையும் பாதிக்கும்.

பலவீனமான செரிமான மண்டலம்
தினமும் வெறும் வயிற்றில் டீ குடித்து வந்தால், செரிமான மண்டலம் படிப்படியாக பலவீனமாகும் சில சமயங்களில் இது பெரிய பாதிப்பை ஏற்படுத்தாவிட்டாலும், நீண்ட காலமாக வெறும் வயிற்றில் டீ குடித்து வந்தால், அது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும்.

பசியின்மை
வெறும் வயிற்றில் டீ குடித்து வந்தால், அது பசியுணர்வை பாதிக்கும். மேலும் அளவுக்கு அதிகமாக டீ குடித்தால் பசியுணர்வு முற்றிலும் அழிக்கப்பட்டுவிடும். சிலர் ஒரு நாளில் பல முறை டீ குடிப்பார்கள். அத்தகையவர்களின் உண்ணும் உணவின் அளவைப் பார்த்தால் மிகக்குறைவாகவே இருக்கும். உண்ணும் உணவின் அளவு குறையும் போது உடலில் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட தொடங்கும்.

வயிற்று எரிச்சல் மற்றும் வாந்தி
கோடைக்காலத்தில் பலரும் வயிற்று எரிச்சல் அல்லது வாந்தி போன்ற பிரச்சனைகளை சந்திப்பதுண்டு. இதற்கு ஓர் காரணம் வெறும் வயிற்றில் டீ குடிப்பது தான். டீயை வெறும் வயிற்றில் குடிப்பது வயிற்று எரிச்சல், வாந்தி மற்றும் குமட்டல் போன்றவற்றை உண்டாக்கும். ஆகவே கோடையில் குடிக்கும் டீயின் அளவைக் குறைத்துக் கொள்வது நல்லது.

தூக்கமின்மை மற்றும் மன அழுத்தம்
வெறும் வயிற்றில் டீ குடிப்பது தூக்கத்தை இழக்க வழிவகுக்கும். இப்படியே ஒருவர் நீண்ட காலமாக தூங்கும் நேரத்தில் டீ குடித்து வந்தால், பின் அது சரியான தூக்கம் கிடைக்காமல் மன அழுத்தத்தை அதிகரிக்கும்.

இரத்த சர்க்கரை அதிகரிக்கும்
முக்கியமாக வெறும் வயிற்றில் டீ குடித்தால், அது இரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரித்து, சர்க்கரை நோயை வரவழைத்துவிடும். ஆகவே எப்போதும் வெறும் வயிற்றில் டீ குடிக்காதீர்கள். இல்லாவிட்டால் வாழ்நாள் முழுவதும் சர்க்கரை நோயால் அவதிப்பட வேண்டியிருக்கும்.



Click it and Unblock the Notifications











