மலத்தை வெளியேற்றுவதில் சிக்கல் இருக்கா? இரத்தம் வருதா? அப்ப நீங்க பெரிய ஆபத்தில் இருக்கீங்களாம்!

தற்போதைய காலகட்டத்தில், மக்கள் குப்பை அல்லது ஆரோக்கியமற்ற உணவுகளை நிறைய சாப்பிடுகிறார்கள். ஆரோக்கியமற்ற பர்கர், பீட்சா போன்றவற்றை உண்பதால், குடல் பிரச்சனைகள் ஏற்படுகிறது.

குடல் புற்றுநோய் என்பது பெருங்குடல் மற்றும் மலக்குடலில் தொடங்கும் புற்றுநோயாகும். இது எங்கு தொடங்குகிறது என்பதைப் பொறுத்து, அந்த புற்றுநோய்கான பெயர் குறிப்பிடப்படும். சில நேரங்களில் இது பெருங்குடல் அல்லது மலக்குடல் புற்றுநோய் என்றும் அழைக்கப்படுகிறது. இது உலகம் முழுவதும் ஏற்படும் பொதுவான புற்றுநோய் வகையாகும். இந்தியாவில், இந்த புற்றுநோயால் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் அதிகமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.

bowel-cancer-symptoms-how-your-poop-and-its-frequency-tells-whether-you-should-be-tested-in-tamil

50 வயதுக்கு மேற்பட்ட பெரியவர்களுக்கு பெருங்குடல் புற்றுநோய் ஏற்படுவது மிகவும் பொதுவானது மற்றும் அனைத்து புற்றுநோய்களிலும் 2 சதவிகிதம் உள்ளது. குடல் புற்றுநோய்க்கான அறிகுறிகள் மற்றும் நீங்கள் வெளியேற்றும் மலத்தின் மூலம் தெரிந்துகொள்ளும் அறிகுறிகளை பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
குடல் புற்றுநோயின் அறிகுறிகள்

குடல் புற்றுநோயின் அறிகுறிகள்

பெரும்பாலும் குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முழுமையான மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, மலத்தில் இரத்தம் வெளியேறுவது மற்றும் சில சமயங்களில் அடிவயிற்றில் வலி ஆகியவை ஏற்படக்கூடும். இவை குடல் புற்றுநோயின் சில பொதுவான அறிகுறிகளாகும். ஒரு நாளைக்கு 3-4 முறை மலம் கழிக்க செல்வது மற்றும் மாற்று வயிற்றுப்போக்கு போன்ற குடல் பழக்கவழக்கங்கள் கவனிக்கப்பட வேண்டிய அறிகுறிகளாகும்.

எப்போது பரிசோதனை செய்ய வேண்டும்?

எப்போது பரிசோதனை செய்ய வேண்டும்?

மலத்தில் இரத்தப்போக்கு, சமீபத்தில் மலச்சிக்கல், முழுமையடையாத குடல் வெளியேற்றம் மற்றும் குடல் இயக்கத்தின் தேவையை மாற்றியமைத்தல், மாற்றப்பட்ட குடல் பழக்கம், பசியின்மை குறைதல், மலம் சுருங்குதல் போன்றவற்றை நீங்கள் கவனித்தால், உடனே மருத்துவரிடம் பரிசோதனை செய்வது நல்லது. மேலும், அடிவயிற்றில் தொடர்ந்து வலி இருந்தாலும், மருத்துவரை அணுக வேண்டும். ஒரு நபர் நீண்ட காலமாக மலச்சிக்கலால் அவதிப்பட்டால், மலம் மற்றும் இரத்த பரிசோதனை செய்வது அவசியம்.

அதிகப்படியான வாயு அபாயகரமானதா?

அதிகப்படியான வாயு அபாயகரமானதா?

பருப்பு மற்றும் பீன்ஸ், முட்டைக்கோஸ், ப்ரோக்கோலி, காலிஃபிளவர் போன்ற காய்கறிகள் அல்லது கார்பனேற்றப்பட்ட பானங்கள் குடிப்பது, லாக்டோஸ் சகிப்புத்தன்மை, உணவு சகிப்புத்தன்மை மற்றும் செலியாக் நோய் பசையம் உணர்திறன் போன்ற காரணிகளால் அதிகப்படியான வாயு ஏற்படலாம். இது டிஸ்ஸ்பெசியா போன்ற தீங்கற்ற நோய்களின் அறிகுறியாக இருக்கலாம். மேலும், இது குரோன்ஸ் மற்றும் அல்சரேட்டிவ் பெருங்குடல் அழற்சி போன்ற அழற்சி குடல் நோய் அல்லது எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறி காரணமாக இருக்கலாம். இது பெருங்குடல் புற்றுநோய்க்கான அறிகுறியாகவும் இருக்கலாம் என்கிறார்கள் நிபுணர்கள்.

ஆரோக்கியமான நடைமுறைகள்

ஆரோக்கியமான நடைமுறைகள்

  • நொறுக்குத் தீனி சாப்பிடுவதைத் தவிர்த்தல்
  • சரியான நேரத்தில் சரியான உணவை உண்ணுதல்
  • நார்ச்சத்து நிறைந்த உணவை உண்ண வேண்டும்
  • பழங்கள் மற்றும் காய்கறிகளின் உட்கொள்ளலை அதிகரிக்கவும்
  • தொடர்ந்து உடற்பயிற்சி செய்தல்
  • எடையை கட்டுக்குள் வைத்திருத்தல்
  • சிவப்பு இறைச்சி மற்றும் பதப்படுத்தப்பட்ட இறைச்சி நுகர்வை குறைத்தல்
  • புகைபிடித்தல் மற்றும் மது அருந்துவதை தவிர்க்கவும்
  • ஆரோக்கியமான உணவுகள்

    ஆரோக்கியமான உணவுகள்

    தற்போதைய காலகட்டத்தில், மக்கள் குப்பை அல்லது ஆரோக்கியமற்ற உணவுகளை நிறைய சாப்பிடுகிறார்கள். ஆரோக்கியமற்ற பர்கர், பீட்சா போன்றவற்றை உண்பதால், குடல் பிரச்சனைகள் ஏற்படுகிறது. மேலும் மோசமான சந்தர்ப்பங்களில், இது குடல் புற்றுநோய்க்கு வழிவகுக்கிறது. ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் வீட்டில் சரியாக சமைத்த உணவை சாப்பிடுவது உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது. புகைபிடித்தல் மற்றும் மது அருந்துவதை தவிர்க்க வேண்டும். குடல் புற்றுநோயைத் தவிர்ப்பதற்கு ஒரு நபர் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுவது அவசியம்.

    சரியான நேரத்தில் கண்டறிதல்

    சரியான நேரத்தில் கண்டறிதல்

    பெருங்குடல் புற்றுநோய், அல்சரேட்டிவ் பெருங்குடல் அழற்சி, கிரோன்கள் போன்ற குடும்ப வரலாற்றைக் கொண்ட நபர்களுக்கு 45 வயதிற்குப் பிறகு, மலத்தில் இரத்தம் வெளியேறுமாம். ஆதலால், மலத்தில் இரத்தம் வெளியேறினால், மருத்துவரிடம் பரிசோதனை செய்து கொள்ளுங்கள். சரியான நேரத்தில் புற்றுநோய் கண்டறியப்பட்டால், அதற்கான சிகிச்சையை மேற்கொண்டு நீண்ட காலம் வாழலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Thursday, September 8, 2022, 18:41 [IST]
Desktop Bottom Promotion