Just In
- 30 min ago கேரளாவின் அடையாளங்களில் ஒன்றான இந்த குட்டி மாட்டின் பால்தான் உலகிலேயே சத்தான பாலாம் தெரியுமா?
- 1 hr ago கத்திரிக்காயை இந்த மாதிரி ஒருமுறை பொரியல் செய்யுங்க.. பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க...
- 1 hr ago ஹிட்லரின் நாஜி முகாமில் நடத்தப்பட்ட திகிலூட்டும் சோதனைகள் என்னென்ன தெரியுமா? முக்கியமா இரட்டை குழந்தைகள் மீது!
- 3 hrs ago Constipation: மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து உடனே விடுபடணுமா? இந்த பானங்களை தினமும் குடிங்க..
Don't Miss
- Movies நைசா முத்தம் கொடுக்கும் தீபா.. அட செம ரொமான்ஸ் தான்போல.. கார்த்திக் தீபம் இன்றைய எபிசோடு!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
- News மாயாவதியின் மாயவலை.. பாஜகவுக்கு 24 தொகுதிகளில் ஜாக்பாட்! பயந்து நடுங்கும் அண்ணன் மகன்!
- Finance ரூ.12,500 முதலீடு செஞ்சா ரூ. 1 கோடி கிடைக்குமா.. செம சான்ஸ்..! சூப்பர் திட்டம்.. மிஸ் பண்ணிடாதீங்க!
- Automobiles இப்பவே 13,000த்த தொட்ருச்சா! இந்தியால இருந்து கொண்டு வந்த காருக்கு பேராதரவு வழங்கும் ஜப்பானியர்கள்!
- Technology அள்ளி தரும் BSNL.. வெறும் ரூ.299 போதும்.. தினமும் 3GB டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. எத்தனை நாள் வேலிடிட்டி?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
சாப்பிடும் போது இந்த திசையில் உட்கார்ந்து சாப்பிடவே கூடாது! மீறினால்..?!
யாருக்கு தான் நோய்கள் இல்லை. நம்மை சுற்றி இருக்கும் ஒவ்வொரு இடத்திலும் நோய்களின் பாதிப்புகள் இருந்து கொண்டே தான் இருக்கிறது. இதை சாப்பிட்டால் நோய்கள் உண்டாகும், அதை சாப்பிட்டால் நோய்கள் ஏற்படும் என பல வகையான பேச்சுக்களை நாம் கேட்டிருப்போம். இவை அனைத்துமே ஏதோ ஒரு வகையில் உண்மையோடு தொடர்பு கொண்டுள்ளது.
உணவு உண்ணும் பழக்கத்தை பொருத்தும், எவ்வளவு உண்கிறோம் என்பதை பொருத்தே நம் ஆயுள் நீடிக்குமா? இல்லையா என கூற இயலும். இது ஒவ்வொருவரின் உடல் அமைப்பிற்கும் ஏற்ப மாறுபடும். இந்த வகையில் எப்படிப்பட்ட முறையில் சாப்பிட்டால் நமக்கு நோய்கள் வராது என்பதையும், எவ்வாறு நோய்களில் இருந்து காத்து கொண்டு ஆரோக்கியமாக வாழ முடியும் என்பதையும் இந்த பதிவில் நாம் அறிந்து கொள்வோம்.
நலம் தானா?
சில நாட்களுக்கு முன்னர் பார்த்த ஒருவரை மீண்டும் பார்த்தாலே எப்படி இருக்கீங்க? நலம் தானா? என்று அவரை பற்றி குசலம் விசாரிப்போம். இது மனித இயல்பு.
அப்படி ஒருவர் நம்மை விசாரிக்கும் போது ஆரோக்கியத்துடன் நாம் இருந்தால் அது சிறந்த மனப்பான்மையை நமக்கே நமக்குள் உண்டாக்கும். இதுவே நோய்களுடன் இருந்தால் துன்பம் தான் வாழ்க்கையாக இருக்கும்.
வாஸ்து!
வாஸ்து பார்த்து வீட்டை கட்ட வேண்டும் என்பார்கள். இது ஆன்மீகத்தின் படி பலரால் நம்பவும் செய்கிறது. இதே போன்று வாஸ்து படி நாம் சாப்பிட வேண்டும் என பண்டைய வாஸ்து முறைகள் சொல்கின்றன. இதன் படி செய்து வந்தால் நோய்கள் இல்லாமல் நீண்ட ஆயுளுடன் வாழலாம்.
பாரம்பரிய முறை
நம் முன்னோர்கள் வாஸ்துப்படி தான் பல விஷயங்களை செய்து வந்தனர். தூங்கும் போதும், சாப்பிடும் போதும், செய்கின்ற தொழிலையும் இவர்கள் வாஸ்து பார்த்து தான் செய்து வந்தனர். இவர்கள் தந்த குறிப்புகள் தான் இவர்களை நீண்ட நாட்கள் நோய்கள் இல்லாமல் வாழ வைத்தது. வாஸ்துவிற்கு என்று சிலபல வரையறைகள் எப்போதுமே உண்டு.
சமையல் அறை
வாஸ்துப்படி சாப்பிடுவதற்கு முன்னர், அதன் படி நாம் சமையல் அறை மற்றும் சாப்பிடும் இடத்தை அமைத்திருக்க வேண்டும். வீட்டை ஏதோ ஒரு கோணத்தில் கட்டிவிட்டு அதன்பின் நிம்மதியில்லை என கூறுவது எவ்வளவு அபத்தமானது என்பதை நீங்களே எண்ணி கொள்ளுங்கள்.
MOST READ: ஆண்கள் உடலுறவிற்கு முன் இதை கட்டாயம் செய்திருக்க வேண்டும்..! இல்லையேல் மரணம் நிச்சயம்!
வாஸ்து முறை
சாப்பிடும் போது உட்கார்ந்து சாப்பிட கூடிய திசை மிக முக்கியமானது. கிழக்கு அல்லது வடக்கு திசையை நோக்கிய படி சாப்பிடுவது முழு ஆற்றலையும் உடலுக்கு பெற்று தரும். மேலும், இதனால் எந்தவித உடல்நல கோளாறுகளும் உங்களுக்கு ஏற்படாது.
திசை!
எப்போதுமே தெற்கு திசையை நோக்கிய படி உட்கார்ந்து சாப்பிட கூடாது. இந்த திசையில் அமர்ந்து சாப்பிடுவதால் செரிமான கோளாறுகள், வயிற்று உபாதைகள் முதலிய பிரச்சினைகள் உண்டாகும். அத்துடன் இது நல்ல ஆற்றலை உடலுக்கு ஏற்படுத்தாது.
சுத்தம்
எப்போதுமே கைகால்களை சுத்தமாக கழுவி விட்டுத்தான் சாப்பிட வேண்டும். அதுவும் பாதங்களை கட்டாயம் கழுவி இருக்க வேண்டும். இது உடலின் தட்பவெப்பத்தை சமமாக வைக்க உதவும். அதோடு செரிமான கோளாறுகளையும் தடுக்கும்.
ஒன்றாக...
குடும்பத்தில் உள்ள எல்லோரும் முடிந்தளவுக்கு ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட்டால் பலவித பயன்கள் ஏற்படும். இதனால் ஒவ்வொருவருக்குள்ளும் ஒருவித ஆத்ம திருப்பி ஏற்படும். இது வீட்டிலும் நல்ல சக்தியை கொண்டு வரும். இதனால் நீங்கள் அதிக காலம் நோயில்லாமல் இருக்கலாம்.
MOST READ: ஆயுளை அதிகரிக்க ஓலைச்சுவடியில் சித்தர்கள் கூறியள்ள குறிப்புகள் என்ன தெரியுமா?