For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

புள்ளி ராஜாக்கு எய்ட்ஸ் வருமா..? எய்ட்ஸ் வருவதற்கு முன்பும் ,வந்த பிறகும்...

எய்ட்ஸ்...எச்.ஐ.வி..! இந்த பேர கேட்டாலே நமக்குள் ஒருவித நடுக்கத்தை ஏற்படுத்துவது இயல்புதான். இதுவரை குணப்படுத்த முடியாத நோய்களில் ஒன்று இந்த எய்ட்ஸ். இதுலையே தெரிஞ்சிருக்கும் இந்த எய்ட்ஸ் எவ்வளவு கொடூ

|

எய்ட்ஸ்...எச்.ஐ.வி..! இந்த பேர கேட்டாலே நமக்குள் ஒருவித நடுக்கத்தை ஏற்படுத்துவது இயல்புதான். இதுவரை குணப்படுத்த முடியாத நோய்களில் ஒன்று இந்த எய்ட்ஸ். இதுலையே தெரிஞ்சிருக்கும் இந்த எய்ட்ஸ் எவ்வளவு கொடூறமானதுனு..! 19-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உலகையே உலுக்கி போட்ட மாபெரும் நோய் எய்ட்ஸ் தான். சிம்பான்ஸீ வகை குரங்கிடம் இருந்தே இந்த எய்ட்ஸ் முதன்முதலில் பரவ தொடங்கியது.

health

அதன்பிறகு இது மனிதர்களிடமும் பரவி மிக பெரிய பாதிப்பை ஏற்படுத்த ஆரம்பித்தது. எய்ட்ஸ், உடலுறவு சார்ந்த நோயாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்த நோயால் பாதிக்கபட்டவர்கள் நீண்ட நாட்களுக்கு உயிர் வாழ முடியாது. ஏன்,எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள், எய்ட்ஸால் பாதிக்கப்பட்டால் நிச்சயம் சீக்கிரமே இறந்துவிடுவார்கள். இவ்வளவு கொடிய நோயான இந்த எய்ட்ஸை வருமுன் காப்பதே புத்திசாலித்தனமான செயலாகும். எய்ட்ஸ் வருவதற்கு முன் எப்படியெல்லாம் தடுக்க வேண்டும் என்பதையும், வந்த பின்பு என்ன செய்ய வேண்டும் என்பதையும் வீட்டு வைத்தியத்தில் இனி தெரிந்து கொள்வோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#பரவும் முறை

#பரவும் முறை

பொதுவாக இந்த எய்ட்ஸானது மற்றவரை தொடுவதாலையோ, மற்றவரிடம் பேசுவதாலையோ ,பிறரிடம் பழகுவதாலையோ பரவ கூடிய நோய் கிடையாது. இது பால்வினை சம்மந்தமான நோய். ஒருவர் பலருடன் உடலுறவு கொண்டால் எய்ட்ஸ் வரக்கூடும். அதே போன்று எய்ட்ஸ் உள்ள ஒருவர் எய்ட்ஸ் இல்லாத ஒருவரோடு உடலுறவு கொண்டாலும் இந்த எய்ட்ஸ் நோய் கட்டாயம் அவரிடமும் பரவும்.

#முன்னெச்சரிக்கை

#முன்னெச்சரிக்கை

எய்ட்ஸ் பரவ முக்கிய காரணம் தவறான பாலுறவு வைத்து கொள்வது என்பது நமக்கு தெரிந்த ஒன்றே. இதனை சரி செய்ய சில முன்னெச்சரிக்கை வழிகள் இருக்கிறது. இந்த வழிமுறைகளை பின்பற்றினாலே போதும் நம்மால் எய்ட்ஸில் இருந்து தப்பிக்க முடியும். முதலில் நமக்கு எய்ட்ஸ் உள்ளதா..? என்பதை மருத்துவ பரிசோதனை மூலம் டெஸ்ட் செய்து கொள்ள வேண்டும். இதுதான் எய்ட்ஸை நம்மிடம் இருந்து பிறருக்கு பரவ விடாமல் தடுக்க கூடிய ஒரே வழி.

#உடலுறவு

#உடலுறவு

அடுத்து நாம் உடலுறவு வைத்து கொள்பவரை ஹச்.ஐ.வி டெஸ்ட் எடுத்து, எய்ட்ஸ் இருக்கா../ இல்லையா..? என்பதை உறுதி செய்ய வேண்டும். ஏனென்றால், உங்களுக்கு எய்ட்ஸ் இல்லாமல் உங்களுடன் உடலுறவு வைத்து கொள்பவருக்கு எய்ட்ஸ் இருந்தால் அந்த ஹச்.ஐ.வி வைரஸ் உங்களுக்கும் தொற்றி கொண்டு நீங்களும் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்படுவீர்கள். எனவே இருவரும் ஹச்.ஐ.வி டெஸ்ட் எடுத்து கொண்ட பிறகு உடலுறவு கொள்ளுதல் நல்லது.

#காண்டம்ஸ்

#காண்டம்ஸ்

நீங்கள் உங்கள் இணையோடு உடலுறவு வைத்துகொள்ள போகிறீர்கள்... என்றால் முதலில் முன்னெச்சரிக்கையாக காண்டம்களை பயன்படுத்துதல் சிறந்த வழி. காண்டம்களை வாங்கும்போது அதன் எக்ஸ்பீரி டேட் பார்த்து வாங்க வேண்டும். மேலும் ஒரு முறை பயன்படுத்திய காண்டம்களை மறுமுறையும் பயன்படுத்த கூடாது. உடலுறவு வைத்து கொள்ள போகும் இருவரும் காண்டம்களை பயன்படுத்துவது எய்ட்ஸில் இருந்து தப்பிக்க மிக சிறந்த தீர்வு.

#ஊசி,ரேசர்ஸ்

#ஊசி,ரேசர்ஸ்

பொதுவாகவே காய்ச்சல்,இருமல் வந்தால் மருத்துவமனைக்கு செல்வது வழக்கமே.ஆனால், நமக்கு போடும் அதே ஊசியை ஏற்கனவே இன்னொருத்தருக்கு போட்டதா..? என்பதை உறுதி செய்து கொண்டு ஊசியை போட்டுக்கொள்ளுங்கள். சிறந்த வழி என்னவென்றால், மருத்துவமனைக்கு போகும்போது நீங்களே ஒரு ஊசியை வாங்கி கொண்டு போவது பாதுகாப்பான ஒன்று. மேலும் ஷேவிங் செய்யும் போது ஒருவர் பயன்படுத்திய அதே ரேஸர்களை நீங்களும் பயன்படுத்தாதீர்கள்.

எய்ட்ஸால் பாதிக்கபட்டவரா..?

எய்ட்ஸால் பாதிக்கபட்டவரா..?

நீங்கள் எய்ட்ஸால் பாதிக்கபட்டுள்ளீர்கள் என்றால், உங்களது வாழ்நாட்கள் மிக குறைந்தவையே...! உங்கள் வாழ்நாட்களை அதிகரிக்க சில வீட்டு வைத்தியங்கள் இருக்கிறது. எய்ட்ஸ் நோய் சீக்கிரமே உங்கள் வாழ்நாட்களை குறைக்கிறது என்றால் அதற்கு முக்கிய காரணம் வெள்ளை ரத்த அணுக்கள் உங்கள் உடலில் குறைய தொடங்குவதே. எதிர்ப்பு சக்தியை உடலுக்கு தருவதே இந்த வெள்ளை ரத்த அணுக்கள்தான். இவற்றின் அளவு குறைய குறைய உங்கள் வாழ்நாட்களும் குறைகிறது என்றே அர்த்தம்.

#க்ரீன் டீ

#க்ரீன் டீ

எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் க்ரீன் டீயை குடிப்பது உடலின் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். மேலும் இதிலுள்ள ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் பாதிக்கப்பட்ட உங்கள் உடல் ஆரோக்கியத்தை திரும்ப பெற உதவி செய்கிறது. இதனால் நீங்கள் இன்னும் சிறிது காலத்திற்கு உயிர் வாழ முடியும்.

#அஸ்வகந்தா

#அஸ்வகந்தா

மூலிகைகளிலே அதிக சக்தி கொண்ட மூலிகை இந்த அஸ்வகந்தா. நீங்கள் சாப்பிடும் உணவில் சிறிதளவு இந்த அஸ்வகந்தாவை சேர்த்து கொள்ளுங்கள். இந்த அஸ்வகந்தா ஆன்டி-வைரல் தன்மை கொண்டது. எனவே இது உடலில் அதிக நோய் எதிர்ப்பு சக்தியை தந்து கிருமிகளை நீக்க வழி செய்கிறது. அத்துடன் எய்ட்ஸை அதிகரிக்க செய்யும் T-செல்களை குறைக்கவும் இது உதவுகிறது.

#வேப்பிலை

#வேப்பிலை

அதிக மருத்துவ குணமுடைய இந்த வேப்பிலை எய்ட்ஸ் நோயின் வீரியத்தை சிறிது கட்டுப்படுத்த வல்லது. மேலும் ஆரம்ப கட்டத்திலே எய்ட்ஸ் உள்ளதை கண்டறிந்தால் வேப்பிலையை கொண்டு சரி செய்ய முடியும் என்று சில ஆராய்ச்சிகள் கூறுகிறது. ஏனெனில், வேப்பிலையில் உள்ள அதிக மருத்துவ குணங்கள், இந்த நோயால் பாதிக்கப்பட்டரின் உடலில் உள்ள கிருமிகளை கொள்ளும் ஆற்றல் வாய்ந்தது. எனவே தினமும் வேப்பிலை கொழுந்துகளை சாப்பிட்டு வந்தால் இன்னும் சிறிது நாட்களுக்கு உயிர் வாழலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

preventive measures & after home remedies for AIDS

AIDS..HIV...! Preventive methods and after home remedies
Desktop Bottom Promotion