Latest Updates
-
ஆட்டு ஈரலை இப்படி வறுவல் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட போட்டி போட்டு காலி பண்ணுவாங்க... -
பெண்களே! தொப்பை குறையணுமா? அப்ப இந்த ஃபிட்னஸ் கோச் சொல்ற 5 உடற்பயிற்சியை வீட்லயே செய்யுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் இந்த 5 ராசிக்கு சுக்கிர திசை ஆரம்பிக்குது.. இனி கையில் பணம் குவியப்போகுது.. -
சிக்கன வாங்குனா இந்த 4 பொருட்களை சேர்த்து கேரளா ஸ்டைல் சிக்கன் 65 செய்யுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
இந்த வாரம் மட்டன் வாங்குனா.. இந்த சுக்கா கிரேவி செய்யுங்க.. எல்லாத்துக்குமே செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 08 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் சில அற்புதங்கள் நடக்குமாம்...! -
வார ராசிபலன் (01 March 2026-07 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த வாரமாக இருக்கும்! -
மட்டன் வாங்குனா இந்த மாதிரி நெல்லூர் ஸ்டைலில் குழம்பு வைச்சு பாருங்க... தோசை, சாதத்துக்கு சூப்பரா இருக்கும்... -
திரிகிரக யோகம் கும்ப ராசியில் உருவாவதால் இந்த 3 ராசிக்காரர்களை தோல்வியும், துரதிர்ஷ்டமும் துரத்தப்போகுதாம்...! -
1 கப் கோதுமை ரவா இருந்தா இந்த மாதிரி அடை செஞ்சு பாருங்க... சூப்பரான காலை உணவா இருக்கும்... ட்ரை பண்ணுங்க...!
பழுத்த மிளகாயை கொண்டு காய்ச்சலை விரட்டும் பழங்காலத்து அகோர முறைகள்...!
மழை காலம் வர தொடங்கியுள்ளது. இந்த நேரத்தில் நாம் அனைவரும் அதிக கவனத்துடன் நிச்சயம் இருக்க வேண்டும். சளி, இரும்பல், காய்ச்சல் ஆகியவை வந்தால் நம்மால் ஒரு வேலையையும் செய்ய இயலாது. காய்ச்சல் வந்தால் மருந்து மாத்திரைகள் என வரிசையாய் நாம் போட்டு கொள்வோம்.

இப்போதுதான், இது போன்ற நிலைமை. ஆனால், அந்த காலத்தில் இதற்கு மாற்றாக பல வகையான கை வைத்தியத்தை வைத்திருந்தனர். அவை என்னென்ன என்பதை இனி தெரிந்து கொள்வோம்.

கொடுமையான காலம்..!
ஒருவருக்கு காய்ச்சல் வந்தால் அவ்வளவு தான். நமது முழு பலமும் குறைந்து விடும். உடலில் எதிர்ப்பு சக்தி குறையும் நேரத்தில் இந்த காய்ச்சல் எளிதில் நமக்கு வர கூடும். மேலும், இது வந்தால் நம்மால் எந்த வேளையிலும் கவனம் செலுத்த இயலாது. நம்மால் எழுந்து கூட உட்கார முடியாத அளவிற்கு காய்ச்சல் வர கூடும்.

ரத்த சரித்திரம்..!
சுமார் இரண்டாயிர வருடத்திற்கு முன்னர் ஒரு மோசமான முறையை அமெரிக்கர்கள் கடைபிடித்து வந்தனர். காய்ச்சல் வந்தவர்களின் ரத்தத்தை வெளியேற்றினால் காய்ச்சல் போய் விடும் என நம்பினர். இது முற்றிலும் முட்டாள் தன்மான ஒரு முறையாகும். இது பலரின் உயிரை காவு வாங்கியதே தவிர, காய்ச்சலை சரி செய்யவில்லை.

வெங்காய மந்திரம்..!
பல வீடுகளில் பழங்காலத்தில் காய்ச்சல் வர கூடாது என்பதற்காக வெங்காயத்தை அரிந்து வீடுகளில் பல இடங்களில் வைத்து கொள்வார்கள். இது காய்ச்சலை உருவாக்கும் கிருமிகளை தடுக்கும் என்ற மூட நம்பிக்கை மக்களிடம் அப்போது இருந்தது. ஆனால், இது உண்மையில் வேலை செய்யாது.

நச்சு புகை வைத்தியம்..!
1918-களில் காய்ச்சல் கொண்ட ஆங்கில நாட்டு மக்கள் அருகில் இருந்த தொழிற்சாலையில் வெளிவந்த புகையை சுவாசித்தல் காய்ச்சல் குணமாகும் என பெரிய மூட நம்பிக்கை கொண்டனர். ஆனால், பிறகு தான் அது கொடிய நச்சு புகை என்றும், இதனால் வேறு சில நோய்கள் வர கூடும் என ஆய்வுகள் சொல்லியது.

விஸ்கி
காய்ச்சல் வந்தால் அந்த காலத்தில் விஸ்கியை கூட வைத்தியத்திற்காக பயன்படுத்தினார்களாம். விஸ்கியில் இஞ்சியை கலந்து குடித்தால் காய்ச்சல் குணமாகி விடும் என மக்கள் நம்பினர். ஆனால், இது தூக்கத்தை கெடுத்து காய்ச்சலை குறைக்காது என பின் நாளில் விஞ்ஞானிகள் கண்டறிந்தனர்.

பழுத்த சிவப்பு மிளகாய்...
ஸ்பெயின் நட்டு மக்கள் ஒரு காரசாரமான முறையை கடைபிடித்தனர். அது என்னவென்றால், பழத்தை சிவப்பு மிளகாயை வேக வைத்து சாப்பிடும், வீடுகளில் ஒரு சில இடங்களில் போட்டு வைத்தால் காய்ச்சல் பறந்து விடும் என நம்பினார்கள். ஆனால், இது முற்றிலும் தவறான கருத்து.

ஆரஞ்ச் தோலும், விஷ வாயுவும்..!
19களில் ஒரு பயங்கர முறையை மக்கள் கடைபிடித்து வந்தனர். ஆரஞ்ச் தோளில் சல்பர் என்கிற வாயுவை சேர்த்து முகர்ந்தால் காய்ச்சல், சளி குணமாகி விடும் என்றனர். ஆனால், இந்த சல்பர் ஒரு வகையான நச்சு தன்மை கொண்ட புகையாகும். இது உடலுக்கு பக்க விளைவை மட்டும் தான் தரும்.

ஷின்ஸோனா மரம்
ஐரோப்பியர்கள் ஷின்ஜோனா மரத்தை காய்ச்சலுக்காக பயன்படுத்தினர். உண்மையில் இந்த மரம் மலேரியாவை குறைக்கும் ஆற்றல் கொண்டது என விஞ்ஞானிகள் பின்னாளில் கண்டறிந்தனர். மேலும், இந்த மூலிகை மரம் ஒட்டுண்ணிகளையும் அழிக்க கூடியதாம்.

பெருங்காய வைத்தியம்
பெருங்காயத்தை முகர்ந்து பார்த்து கொண்டிருந்தாலே காய்ச்சல் குணமாகி விடும் என ஒரு சில மக்கள் எண்ணம் கொண்டனர். மேலும், இதை கழுத்து கீழும் இவர்கள் கட்டி கொள்வார்களாம். ஆனால், இது சளியை வேண்டுமானால் சிறிது சரி செய்யலாம், மற்றபடி காய்ச்சல் சரியாகாது.

சிக்கன் சூப்
ஒரு சில நாட்டு மக்கள் சூடாக எதையாவது சாப்பிட்டால் அது காய்ச்சலை போக்கி விடும் என நம்பினர். இது ஒரு வகையில் உண்மையும் கூட. சிக்கன் சூப்பை பழங்காலத்து மக்கள் காய்ச்சலை போக்குவதற்காக பயன்படுத்தி வந்தனர்.

மூட நம்பிக்கைகள்..!
இப்படிப்பட்ட பல வகையான வினோத மூட நம்பிக்கைகள் உலகம் முழுவதும் பரவி கிடந்ததாம். இது பலரின் உயிரையும் காவு வாங்கி உள்ளது. இது போன்ற மூட நம்பிக்கைகளை இனி நாம் நம்பாமல் இருப்பதே சிறந்தது.
இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள்.



Click it and Unblock the Notifications











