Latest Updates
-
மே மாதத்தில் நடக்கும் கிரக பெயர்ச்சிகளால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வெயில் கொடுமை! திருமணத்தை மாற்ற முடியாமல் தவிக்கிறீர்களா? இந்த 5 டிப்ஸ் உங்கள் விழாவை காப்பாற்றும்! -
1/4 கப் தனியா இருந்தா இந்த வித்தியாசமான சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமாக இருக்கும் -
வட இந்தியத் திருமணங்கள்: சுட்டெரிக்கும் வெயிலில் சிக்கித் தவிக்கும் கொண்டாட்டங்கள் - இதோ சில அதிரடி மாற்றங்கள்! -
இந்த 5 உணவுகள் உங்கள் உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்தி சங்கடமாக உணர வைக்குமாம் - பார்த்து சாப்பிடுங்க -
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி? -
சிக்கன் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்..
பழுத்த மிளகாயை கொண்டு காய்ச்சலை விரட்டும் பழங்காலத்து அகோர முறைகள்...!
மழை காலம் வர தொடங்கியுள்ளது. இந்த நேரத்தில் நாம் அனைவரும் அதிக கவனத்துடன் நிச்சயம் இருக்க வேண்டும். சளி, இரும்பல், காய்ச்சல் ஆகியவை வந்தால் நம்மால் ஒரு வேலையையும் செய்ய இயலாது. காய்ச்சல் வந்தால் மருந்து மாத்திரைகள் என வரிசையாய் நாம் போட்டு கொள்வோம்.

இப்போதுதான், இது போன்ற நிலைமை. ஆனால், அந்த காலத்தில் இதற்கு மாற்றாக பல வகையான கை வைத்தியத்தை வைத்திருந்தனர். அவை என்னென்ன என்பதை இனி தெரிந்து கொள்வோம்.

கொடுமையான காலம்..!
ஒருவருக்கு காய்ச்சல் வந்தால் அவ்வளவு தான். நமது முழு பலமும் குறைந்து விடும். உடலில் எதிர்ப்பு சக்தி குறையும் நேரத்தில் இந்த காய்ச்சல் எளிதில் நமக்கு வர கூடும். மேலும், இது வந்தால் நம்மால் எந்த வேளையிலும் கவனம் செலுத்த இயலாது. நம்மால் எழுந்து கூட உட்கார முடியாத அளவிற்கு காய்ச்சல் வர கூடும்.

ரத்த சரித்திரம்..!
சுமார் இரண்டாயிர வருடத்திற்கு முன்னர் ஒரு மோசமான முறையை அமெரிக்கர்கள் கடைபிடித்து வந்தனர். காய்ச்சல் வந்தவர்களின் ரத்தத்தை வெளியேற்றினால் காய்ச்சல் போய் விடும் என நம்பினர். இது முற்றிலும் முட்டாள் தன்மான ஒரு முறையாகும். இது பலரின் உயிரை காவு வாங்கியதே தவிர, காய்ச்சலை சரி செய்யவில்லை.

வெங்காய மந்திரம்..!
பல வீடுகளில் பழங்காலத்தில் காய்ச்சல் வர கூடாது என்பதற்காக வெங்காயத்தை அரிந்து வீடுகளில் பல இடங்களில் வைத்து கொள்வார்கள். இது காய்ச்சலை உருவாக்கும் கிருமிகளை தடுக்கும் என்ற மூட நம்பிக்கை மக்களிடம் அப்போது இருந்தது. ஆனால், இது உண்மையில் வேலை செய்யாது.

நச்சு புகை வைத்தியம்..!
1918-களில் காய்ச்சல் கொண்ட ஆங்கில நாட்டு மக்கள் அருகில் இருந்த தொழிற்சாலையில் வெளிவந்த புகையை சுவாசித்தல் காய்ச்சல் குணமாகும் என பெரிய மூட நம்பிக்கை கொண்டனர். ஆனால், பிறகு தான் அது கொடிய நச்சு புகை என்றும், இதனால் வேறு சில நோய்கள் வர கூடும் என ஆய்வுகள் சொல்லியது.

விஸ்கி
காய்ச்சல் வந்தால் அந்த காலத்தில் விஸ்கியை கூட வைத்தியத்திற்காக பயன்படுத்தினார்களாம். விஸ்கியில் இஞ்சியை கலந்து குடித்தால் காய்ச்சல் குணமாகி விடும் என மக்கள் நம்பினர். ஆனால், இது தூக்கத்தை கெடுத்து காய்ச்சலை குறைக்காது என பின் நாளில் விஞ்ஞானிகள் கண்டறிந்தனர்.

பழுத்த சிவப்பு மிளகாய்...
ஸ்பெயின் நட்டு மக்கள் ஒரு காரசாரமான முறையை கடைபிடித்தனர். அது என்னவென்றால், பழத்தை சிவப்பு மிளகாயை வேக வைத்து சாப்பிடும், வீடுகளில் ஒரு சில இடங்களில் போட்டு வைத்தால் காய்ச்சல் பறந்து விடும் என நம்பினார்கள். ஆனால், இது முற்றிலும் தவறான கருத்து.

ஆரஞ்ச் தோலும், விஷ வாயுவும்..!
19களில் ஒரு பயங்கர முறையை மக்கள் கடைபிடித்து வந்தனர். ஆரஞ்ச் தோளில் சல்பர் என்கிற வாயுவை சேர்த்து முகர்ந்தால் காய்ச்சல், சளி குணமாகி விடும் என்றனர். ஆனால், இந்த சல்பர் ஒரு வகையான நச்சு தன்மை கொண்ட புகையாகும். இது உடலுக்கு பக்க விளைவை மட்டும் தான் தரும்.

ஷின்ஸோனா மரம்
ஐரோப்பியர்கள் ஷின்ஜோனா மரத்தை காய்ச்சலுக்காக பயன்படுத்தினர். உண்மையில் இந்த மரம் மலேரியாவை குறைக்கும் ஆற்றல் கொண்டது என விஞ்ஞானிகள் பின்னாளில் கண்டறிந்தனர். மேலும், இந்த மூலிகை மரம் ஒட்டுண்ணிகளையும் அழிக்க கூடியதாம்.

பெருங்காய வைத்தியம்
பெருங்காயத்தை முகர்ந்து பார்த்து கொண்டிருந்தாலே காய்ச்சல் குணமாகி விடும் என ஒரு சில மக்கள் எண்ணம் கொண்டனர். மேலும், இதை கழுத்து கீழும் இவர்கள் கட்டி கொள்வார்களாம். ஆனால், இது சளியை வேண்டுமானால் சிறிது சரி செய்யலாம், மற்றபடி காய்ச்சல் சரியாகாது.

சிக்கன் சூப்
ஒரு சில நாட்டு மக்கள் சூடாக எதையாவது சாப்பிட்டால் அது காய்ச்சலை போக்கி விடும் என நம்பினர். இது ஒரு வகையில் உண்மையும் கூட. சிக்கன் சூப்பை பழங்காலத்து மக்கள் காய்ச்சலை போக்குவதற்காக பயன்படுத்தி வந்தனர்.

மூட நம்பிக்கைகள்..!
இப்படிப்பட்ட பல வகையான வினோத மூட நம்பிக்கைகள் உலகம் முழுவதும் பரவி கிடந்ததாம். இது பலரின் உயிரையும் காவு வாங்கி உள்ளது. இது போன்ற மூட நம்பிக்கைகளை இனி நாம் நம்பாமல் இருப்பதே சிறந்தது.
இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள்.



Click it and Unblock the Notifications