Latest Updates
-
3/4 கப் வேர்க்கடலையும், 3 தக்காளியும் இருந்தா.. இந்த சட்னியை செய்யுங்க.. 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 29 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு சிக்கல்கள் நிறைந்த நாளாக இருக்குமாம் -
சூரியன் சுக்கிரனின் நட்சத்திரத்திற்கு செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
உடுப்பி தேங்காய் கொத்தமல்லி சட்னி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, வேற லெவலில் இருக்கும் -
லிவ்-இன் உறவு முறிவு குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு இளைஞர்களுக்கு நிம்மதி! -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்..! -
Mothers day 2026: உலக அன்னையர் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது? அதற்குப்பின்னால் உள்ள வரலாறு என்ன தெரியுமா? -
லிவ்-இன் உறவில் பிரிவது குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு ஜோடிகளுக்கு நிம்மதி! -
வெறும் 4 பொருளை வெச்சு ஈஸியா மாம்பழ புட்டிங் செய்யலாம் தெரியுமா? எப்படி-ன்னு பாருங்க.. -
தங்கம் போல ஜொலிக்குற சருமம் வேண்டுமா? அப்ப மாம்பழத்தை வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க..
உயிக்கொல்லி நோயான ப்ளட் பாய்சனிங் பற்றி தெரியுமா?
இரத்தத்தில் பாக்டீரியாக்களின் அளவு அதிகரிப்பதே ப்ளட் பாய்சனிங் என்றழைக்கப்படுகிறது. இது மிகவும் ஆபத்தானதாகும். ப்ளட் பாய்சனிங் பற்றி இங்கே விரிவாக பார்க்கலாம்.
உணவு விஷமாவதை பற்றி நாம் கேள்விப்பட்டிருப்போம் ஆனால் இரத்தம் விஷமாவதை பற்றி கேள்விப்பட்டிருக்க வாய்ப்பிலை . ஆனால் நமது இரத்தம் விஷமாகவும் வாய்ப்புள்ளது. இதனை ப்ளட் பாய்சனிங் என்று மருத்துவர்கள் கூறுகிறீர்கள். இரத்தத்தில் பாக்டீரியாக்களின் அளவு அதிகரிப்பதே ப்ளட் பாய்சனிங் என்றழைக்கப்படுகிறது. இது மிகவும் ஆபத்தானதாகும்.

இதன் பெயரில் உள்ளது போல இதற்கும் விஷத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆனால் இதனால் ஏற்படும் விளைவுகள் அந்த அளவிற்கு ஆபத்தாய் இருப்பதால் மருத்துவர்கள் இந்த சொல்லை பயன்படுத்துகிறார்கள். இதனை ஆரம்பத்திலியே கண்டறிந்து குணப்படுத்த வேண்டியது அவசியம். இது உங்கள் உடலில் செப்ஸியை அதிகரித்துக்கொண்டே செல்லும். ப்ளட் பாய்சனிங் பற்றி இங்கே விரிவாக பார்க்கலாம்.

காரணங்கள்
உடலின் ஏதாவதொரு பாகத்தில் பாக்டீரியா தொற்று ஏற்பட்டால் பாக்டீரியாக்கள் இரத்தத்தில் கலந்துவிடும். இரத்தத்தில் பாக்டீரியாக்கள் கலந்திருப்பது பாக்டீர்மியா அல்லது செப்டிகெமியா என்று அழைக்கப்படுகிறது. இது செப்ஸிஸ் தாக்கும் வாய்ப்புகளை அதிகரிக்கிறது. செப்சிஸ் என்பது குணப்படுத்த இயலாத உயிரை பறிக்ககூடிய நோயாகும். பாக்டீரியா, வைரஸ் மற்றும் பூஞ்சை எந்த தொற்றாய் இருந்தாலும் அது செப்ஸிசை ஏற்படுத்தும்.

பாதிக்கும் இடம்
இந்த வகை தொற்று நுரையீரல், அடிவயிறு மற்றும் சிறுநீர் பாதைகளில் பாதிப்பை ஏற்படுத்தும். செப்ஸிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. ஏனெனில் ப்ளட் பாய்சனிங் என்பது உங்கள் இரத்தத்தில் பாக்டீரியா மற்றொரு தொற்றுநோயுடன் சேர்ந்து உங்கள் உடலுக்குள் வரும்போது ஏற்படுவது. தொற்றுநோய் இல்லாமல் உங்கள் உடலில் செப்ஸிஸ் ஏற்பட வாய்ப்பில்லை.

செப்ஸிஸ் ஏற்பட காரணங்கள்
உங்கள் உடலுக்குள் செப்ஸிஸ் ஏற்பட பாக்டீரியாக்கள் உங்கள் உடலுக்குள் செல்லவேண்டும். அவை வேறுசில தொற்று மூலமும் உள்ளே நுழையலாம். அவை முறையே அடிவயிறு தொற்றுநோய், பூச்சிக்கடிகள், கீமோதெரபியின்போது, சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சையின் போது, நிமோனியா, சரும தொற்றுகள் என செப்ஸிஸ் ஏற்பட பல வழிகள் உள்ளது.

யாருக்கெல்லாம் ஏற்படும்
நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனமாய் உள்ளவர்களுக்கு ப்ளட் பாய்சனிங் ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது. லுக்கோமியா உள்ளவர்கள், குழந்தைகள், வயதானவர்கள், போதை பழக்கம் உள்ளவர்கள், பல் ஆரோக்கியம் இல்லாதவர்கள், சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள், பாக்டீரியா மற்றும் மற்றும் வைரஸ் அதிகம் உள்ள இடங்களில் பணிபுரிபவர்கள் போன்றோருக்கு இது ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

அறிகுறிகள்
சில அறிகுறிகளை வைத்து உங்களுக்கு ப்ளட் பாய்சனிங் உள்ளதா என்பதை கண்டறியலாம். உடல் குளிர்ச்சியாகவே இருத்தல், அதிக காய்ச்சல், சோர்வு, வேகமாக மூச்சு விடுதல், இதய துடிப்பில் மாற்றம், சரும அழற்சி குறிப்பாக முகத்தில். இவற்றில் ஏதேனும் ஒன்று இருந்தாலும் உடனடியாக மருத்துவரை அணுங்கவும். நோய் முதிர்ச்சியடைந்து விட்டால் குழப்பம், சருமத்தில் பெரிய சிவப்பு புள்ளி, உடலுறுப்புகள் செயலிழப்பு போன்ற அறிகுறிகள் ஏற்படும்.

சிகிச்சை முறைகள்
ப்ளட் பாய்சனிங்கிற்கு சரியாக சிகிச்சை அளிக்க வேண்டியது அவசியமாகும். இல்லையெனில் அது வேகமாக உடலில் பரவக்கூடியது இதனால் இதய அடைப்பு ஏற்படலாம். உங்களுக்கு ப்ளட் பாய்சனிங் உள்ளது உறுதி செய்யப்பட்டு விட்டால் உடனடியாக சிகிச்சை தொடங்கப்படும். குறைந்த இரத்த அழுத்தம், மயக்கம், குறைந்த இதய துடிப்பு போன்றவை இருந்தால் நீங்கள் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இரத்த அழுத்தத்தை சீராக்க ஆக்சிஜன் வழங்கப்படும். செப்ஸிஸ்க்கு நீரேற்றம் வழியாக சிகிச்சை அளிக்கப்படுகிறது, அல்லது நரம்பு வழியாக சிகிச்சை அளிக்கப்படுகிறது. சில சமயம் இரத்த அழுத்தத்தை குறைத்தும் சிகிச்சை அளிக்கப்படும். இவை வேஸோப்ரெஸ்ஸர்ஸ் என்று அழைக்கப்படும். இது ஏற்பட்டால் பிழைக்க 50 சதவீதம் மட்டுமே வாய்ப்புள்ளது.

தடுக்கும் முறை
ப்ளட் பாய்சனிங் ஏற்படாமல் தடுக்க ஒரேவழி தொற்றுநோய்களுக்கு உடனடியாக சிகிச்சை எடுப்பதுதான். அதேபோல காயம் ஏற்பட்டால் உடனடியாக அதனை சரிசெய்வதுடன் அதை சுத்தமாக பராமரிக்கவும் வேண்டும். ஒரேவேளை நீங்கள் அறுவைசிகிச்சை செய்துகொண்டால் மருத்துவர் முதலில் பரிந்துரைப்பது ஆன்டிபாக்டீரிய மருந்தைதான். பாக்டீரியா, வைரஸ் உள்ள இடங்களை பெரும்பாலும் தவிர்ப்பது நல்லது.



Click it and Unblock the Notifications