Latest Updates
-
செவ்வாய் பெயர்ச்சியால் ஜூன் 21 முதல் இந்த 5 ராசிக்கு பேங்க் பேலன்ஸ் உயரப்போகுது.. -
ஜூன் 22-ல் சூரியன் ராகுவின் நட்சத்திரம் செல்வதால் ஜெயிக்கிற குதிரையாக போகும் 3 ராசிகள் இவங்கதான் -
இதுல ஒரு புறாவை தேர்ந்தெடுங்க.. அடுத்த 3 நாட்களில் உங்களுக்கு என்ன நடக்கும்-ன்னு சொல்றோம்.. -
மாங்காயுடன் வேர்க்கடலை சேர்த்து இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் சட்னி அரைச்சு பாருங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
வெள்ளையான சருமம் வேண்டுமா? அப்ப இந்த 5 ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
உலகின் டாப் 10 பணக்கார குட்டி நாடுகள் என்னென்ன தெரியுமா? இந்த நாடுகளில் சில ஆயிரம் பேரே வாழ்கிறார்களாம் -
இந்த 4 ராசிக்காரங்க எல்லோருக்கும் பிரச்சினைகளை கொடுப்பதற்காகவே பிறந்த ஆபத்தான ஆன்மாக்களாம் -
2 மாம்பழமும் 6 பிரட்டும் இருந்தா.. ஸ்கூல் விட்டு வர பிள்ளைகளுக்கு 10 நிமிஷத்துல இந்த ஸ்வீட் செஞ்சு குடுங்க... -
International Yoga Day 2026: சர்வதேச யோகா தினத்தின் வரலாறு என்ன தெரியுமா? இந்த வருட யோகா தினத்தின் சிறப்பு என் -
சனி பகவான் நிலையால் இனி 2027 வரை இந்த 3 ராசிக்காரங்க நல்ல வளர்ச்சியை காண்பார்களாம்!
இஞ்சி டீ குடித்த 5 மணிநேரத்தில் உடலினுள் ஏற்படும் அதிசயங்கள்!
இங்கு மசாலா இஞ்சி டீ குடித்த 5 மணிநேரத்தில் உடலினுள் ஏற்பட்ட அதிசய மாற்றங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.
இஞ்சி உணவின் மணத்தை அதிகரிப்பதோடு, உடல்நலத்திற்கும் மிகவும் நல்லது. அன்றாட உணவில் இஞ்சியை சேர்த்து வந்தால், உடலில் பிரச்சனைகள் வருவதைத் தடுக்கலாம் என்று பலர் சொல்வதைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். இஞ்சியை பலவாறு நாம் உட்கொள்ள முடியும்.
அதில் இஞ்சி ஜூஸ், இஞ்சி டீ போன்றவை குறிப்பிடத்தக்கவை. இக்கட்டுரையில் ஓர் அற்புதமான மசாலா இஞ்சி டீ குறித்தும், அதைக் குடித்த 5 மணிநேரத்தில் உடலினுள் ஏற்படும் மாற்றங்கள் பற்றியும் கொடுக்கப்பட்டுள்ளது.

உட்கொண்ட 3 மணிநேரத்தில்...
3 கிராம் இஞ்சியை உட்கொண்டால், உடலினுள் பல அற்புதங்கள் ஏற்படும். குறிப்பாக இஞ்சியை உட்கொண்ட 3 மணிநேரத்திலேயே, இஞ்சி உடலினுள் அதன் வேலையைக் காட்டிக் கொண்டிருப்பதை உணரக்கூடும்.

எரிச்சலுணர்வு
இஞ்சியை உட்கொண்ட பின், வயிற்றில் ஒருவித எரிச்சலுணர்வை சந்திக்கக்கூடும். ஏனெனில் இஞ்சி வயிற்றில் உள்ள பாக்டீரியாக்கள் மற்றும் டாக்ஸின்களை வெளியேற்றி சுத்தம் செய்து கொண்டிருப்பதால் தான்.

அடுத்த 2 மணிநேரத்தில்...
அடுத்த 2 மணிநேரத்தில், இதுவரை உடலில் இருந்த ஒருவித அழுத்தம் வெளியேற்றப்பட்டு, உடல் லேசானது போன்ற உணர்வைப் பெறக்கூடும்.

இதர நன்மைகள்...
இஞ்சியை அடிக்கடி டீ அல்லது ஜூஸ் வடிவில் எடுத்து வந்தால், அனைத்து வகையான புற்றுநோய்களின் தாக்கம் தடுக்கப்படும். மேலும் இது உடலின் வெப்பநிலையை அதிகரிப்பதால், கொழுப்புக்கள் கரைக்கப்பட்டு, உடல் எடை குறைய ஆரம்பிக்கும். முக்கியமாக பெண்கள் மாதவிடாய் காலத்தில் சந்திக்கும் தசைப்பிடிப்பு பிரச்சனைகள் அகலும். அதோடு, குமட்டல், தலைச்சுற்றல் பிரச்சனைகளும் நீங்கும்.
இப்போது மசாலா இஞ்சி டீயை எப்படி தயாரிப்பது என்று காண்போம்.

தேவையான பொருட்கள்:
இஞ்சி - 1 சிறிய துண்டு
எலுமிச்சை - 1
பட்டை - 2 துண்டுகள்
புதினா இலைகள் - சிறிது
தண்ணீர் - தேவையான அளவு

தயாரிக்கும் முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி, நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், அதில் இஞ்சி, பட்டை, புதினா போன்றவற்றை போட்டு நன்கு கொதிக்க வைத்து இறக்கி, பின் வடிகட்டி அதில் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து குடிக்க வேண்டும்.



Click it and Unblock the Notifications