Latest Updates
-
Independence Day 2026: இந்த ஆண்டு இந்தியா கொண்டாடுவது 79-வது சுதந்திர தினமா? 80-வது சுதந்திர தினமா? -
பீர் பாட்டில் ஏன் எப்போதும் பச்சை அல்லது ப்ரவுன் நிறத்தில் மட்டுமே உள்ளது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
Avani 2026 Rasipalan: ஆவணி மாதம் இந்த 4 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
1/4 கப் கம்பு இருந்தா, காலையில் இப்படி ஒருடைம் செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 14 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நரகத்தின் கதவு திறக்கப்போகுதாம் -
ஆகஸ்ட் 20-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களின் கஷ்டங்கள் முடிவுக்கு வரப்போகுது! -
புதன்-சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண யோகம்: இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
10 நிமிசத்தில் செய்யும் லெமன் அவல் உப்புமா ரெசிபி - செஞ்சு பாருங்க - சூப்பரா, ஆரோக்கியமா இருக்கும் -
லன்ச்பாக்ஸ்-க்கு இப்படி கேரட் ரைஸ் செஞ்சு குடுங்க - பிள்ளைங்க மிச்சம் வெக்காம சாப்பிடுவாங்க.. -
இந்த 2 ராசிக்காரர்களுக்கு துளியும் நன்றியுணர்வு இருக்காதாம் - இவங்களுக்கு ஹெல்ப் பண்றதே வேஸ்ட்
நாம தினமும் இத குடிக்கிறதால தான் புற்றுநோய் வருதுன்னு தெரியுமா?
சமீபத்திய ஆய்வு ஒன்றில் நாம் தினமும் குடிக்கும் பால் மார்பக புற்றுநோயின் அபாயத்தை அதிகரிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
தற்போது புற்றுநோய் பலரை உயிரை காவு வாங்கிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக மார்பக புற்றுநோய் பல பெண்களையும் அமைதியாக தாக்கி அவஸ்தைப்படச் செய்கிறது. இப்படி மார்பக புற்றுநோய் பலரையும் தாக்குவதற்கு முக்கிய காரணம் நாம் உண்ணும் உணவுப் பொருட்கள் தான்.

Pic Courtesy: natureandhealthyadvice
சமீபத்திய ஆய்வு ஒன்றில் நாம் தினமும் குடிக்கும் பால் மார்பக புற்றுநோயின் அபாயத்தை அதிகரிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. சரி, இப்போது அதுக் குறித்து விரிவாக காண்போம். தொடர்ந்து படியுங்கள்.

புற்றுநோய்
கடந்த சில ஆண்களாக புற்றுநோய்களில் அமைதியாகத் தாக்கிக் கொண்டிருக்கும் ஒரு வகை தான் மார்பக புற்றுநோய். இப்படி மார்பக புற்றுநோயின் தாக்கம் அதிகரிப்பதற்கு காரணமாக மருத்துவ நிபுணர்கள், நாம் தினமும் குடித்துக் கொண்டிருக்கும் பால் தான் என நம்புகின்றனர்.

நார்வே ஆய்வாளர்கள்
சமீபத்தில் நார்வே ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில், தினமும் 1 அல்லது 1/2 கப் பாலைக் குடிப்பவர்களை விட, 3 கப் பாலைக் குடிப்பவர்களுக்கு, 3 மடங்கு அதிகமாக மார்பக புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புக்கள் உள்ளது தெரிய வந்துள்ளது.

புள்ளிவிவரம்
சமீபத்திய புள்ளி விவரத்தின் படி, உலகில் மார்பக புற்றுநோயால் பின்லாந்து, ஸ்வீடன், பிரிட்டன், கனடா மற்றும் அமெரிக்கா போன்ற பகுதிகளில் வாழ்பவர்கள் தான் அதிகமாக பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.

காரணம்
உலகிலேயே இந்த நாடுகளில் மார்பக புற்றுநோய் அதிகம் வருவதற்கு காரணம், அங்கு பால் உற்பத்தியும், அதைப் பருகுவோரின் எண்ணிக்கையும் அதிகம் இருப்பது தான் காரணம்.

பால் எப்படி புற்றுநோயை உண்டாக்கும்?
பாலில் உள்ள ஹார்மோன்களும், குறிப்பிட்ட உட்பொருட்களும் புற்றுநோயை உண்டாக்கக்கூடியவை. மேலும் இத்தகைய பாலில் சுத்திகரிக்கப்பட்ட வைட்டமின் டி சத்துக்கள் சேர்க்கப்படுகிறது. மருத்துவ நிபுணர்களும், மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களது உடலை சோதித்ததில், சிந்தடிக் வைட்டமின் டி இருமடங்கு அதிகம் இருப்பதைக் கண்டறிந்துள்ளனர்.

மார்பக புற்றுநோய்க்கான இதர காரணிகள்
ஒருவருக்கு மார்பக புற்றுநோய் வருவதற்கு மோசமான டயட், காய்கறிகள், மீன் போன்றவற்றை குறைவாக சாப்பிடுவது, சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையை அதிகம் சாப்பிடுவது போன்றவையும் காரணங்களாகும்.

பிரா
பெண்கள் அணியும் பிராவும் மார்பக புற்றுநோய் வருவதற்கான அபாயத்தை அதிகரிக்கிறது. குறிப்பாக மிகவும் இறுக்கமாக பிரா அணிந்தால், மார்பக புற்றுநோய் மிகவும் வேகமாக தாக்கும். அதுவும் தொடர்ந்து 12 மணிநேரம் இறுக்கமான பிரா அணிந்தால், மார்பக புற்றுநோய் தாக்கும் அபாயம் அதிகரிக்கும்.
எனவே பெண்களே! கவனமாக இருங்கள்.



Click it and Unblock the Notifications