Latest Updates
-
வெறும் 3 பொருள் இருந்தா போதும்.. குளுகுளு-ன்னு சூப்பரான குச்சி ஐஸ் செய்யலாம்.. எப்படி-ன்னு பாருங்க.. -
பங்குனி மாத ராசி பலன் 2026: இந்த 5 ராசிக்காரர்களுக்கு விபரீத ராஜயோகம் தேடி வரும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
அடுப்பில்லாம செய்யக்கூடிய அவல் பாயாசம் - செஃப் தீனா ஸ்டைலில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சனிக்கிழமையில் பிறந்தவர்களின் குணமும், எதிர்காலமும் எப்படி இருக்கும் தெரியுமா? -
100 ஆண்டுகள் கழித்து மீன ராசியில் உருவாகும் சதுர்கிரக யோகம்: கோடீஸ்வர யோகம் பெறும் 3 ராசிகள்! -
செட்டிநாடு கார அடை-தேங்காய் இஞ்சி சட்னி ரெசிபி காம்போ... இதை செஞ்சு கொடுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
தக்காளி சட்னியை ஒருடைம் இந்த பக்குவத்துல செய்யுங்க.. வீட்டுல 10 இட்லி கூட சாப்பிடுவாங்க... -
இன்றைய ராசிபலன் 14 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுமாம்...! -
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: மார்ச் 26 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
குருபகவானின் ராசிக்கு சூரியன் செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க பணத்தை மூட்டைக்கட்ட போறாங்களாம்..உங்க ராசி என்ன?
உங்களுக்கு சோடா குடிப்பதில் விருப்பமா? இந்த நோய்க்கெல்லாம் காரணம் அதுதான்.!!
சோடாவை தினமும் 1 அல்லது 2 த்டவைக்கு மேல் குடிப்பதால் உண்டாகும் தீமைகளை இங்கே தரப்பட்டுள்ளது.
சோடா.. மதுவில் கலப்பதற்காகட்டும்,. தாகத்திற்காகட்டும். சோடாவை குடிப்பதில் இன்னமும் எல்லாருக்கும் தனி விருப்பமாக இருக்கிறது.
ஆனால் சோடாவில் இருக்கும் காரணிகள் பலவித ஆபத்தான நோய்களுக்கு காரணமாக இருக்கிறது .

ஒரு நாளைக்கு 2 சோடவை குடிக்கும் பழக்கம் இந்த கால இளைஞர்கள் ஒரு கலாச்சாரமாகவே பின்பற்றி வருகிறார்கள்.
இப்படி குடிப்பதானால் உண்டாகும் தீமைகளை அமெரிக்காவிலுள்ள ஆராய்ச்சியளர்கள் நிருபித்துள்ளனர். அவற்றைப் பற்றி இங்கு காண்போம்.

இதய நோய்கள் :
சோடாவை தினமும் குடிப்பதால் 50% இதய நோய்கள் உருவாகும் வாய்ப்புகள் அதிகம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உடல் பருமன் :
தொடர்ந்து ஒருவருடம் சோடாவை குடித்தால் உடல் பருமன் இரட்டிப்பாகும் என ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது.

நரம்புத் தளர்ச்சி :
நரம்புகள் சோடாவிலுள்ள மூலப்பஒருட்களால் நரம்பு மண்டலம் விரைவில் பலமிழந்து போய்விடும். இதனால் நரம்புத் தளர்ச்சி உருவாகும் வாய்ப்புகள் அதிகம்.

தலை வலி :
அடிக்கடி ரத்த் அழுத்தத்தில் மாறுபாட்டை சோடா உருவாக்குவதால் அதிக காற்றாழுத்தத்தையும் உடலில் உருவாக்கும். இது தலைவலியை உண்டாக்கும். மைக்ரேன் உருவாகவும் சோடா காரணமாகும்.

அல்சீமர் நோய் :
சோடாவை தினமும் குடித்தால் முதுமையில் அல்சீமர் நோய்க்கு தள்ளப்படுவீர்கள் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கிறார்கள். இதனால் ஞாபக மறதி, மந்தத் தன்மை, வாய் குழறுதல் போன்ரவை உண்டாகும் வாய்ப்புகள் உண்டு.

அதீத செயல்பாடுகள் :
அதிகப்படியாக செரடோனின் சுரப்பை தூண்டச் செய்வதால் ஒரு வித ஹைபர் நிலை உண்டாகும். நிம்மதியற்ற ஏதாவது செய்து கொண்டே இருக்கும்படியான ம நிலை உருவாகும்.

சர்க்கரை வியாதி :
சோடாவை மதுவுடன் கலந்து குடிப்பவர்களுக்கு விரைவில் சர்க்கரை வியாதி உருவாகும். அதுமட்டுமில்லாமல் ஏற்கன்வே சர்க்கரை வியாதி இருப்பவர்கள் சொடாவை தனியாக குடிக்கும்போது சர்க்கரையின் அளவு அதிகரித்து உடல் பாதிப்பு மோசமாகும்.

தலைசுற்றல் :
ஒரு நாளைக்கு இரு தடவை அல்லது அதற்கு மேல் சோடாவை குடித்தால் அடிக்கடி தலைசுற்றல், வாந்தி மயக்கம் ஆகியவை உண்டாகும். அது தவிர்த்து, குண நலன்களில் மாறுபாடு, ரத்த அழுத்த நோய்கள், வயிற்று வலி. உடல் வலி என பலவித பாதிப்புகளை உண்டாக்கும்.



Click it and Unblock the Notifications











