Latest Updates
-
இன்றைய ராசிபலன் 28 மார்ச் 2026: இன்று இந்த 5 ராசிக்காரங்களுக்கு ஆபத்துகள் நிறைந்த நாளாக இருக்குமாம்...! -
சனி-செவ்வாயின் மோசமான சேர்க்கை: ஏப்ரல் 02 முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. -
30 ஆண்டுக்கு பின் ஒன்றிணையும் சனிபகவான்-செவ்வாய் இந்த 3 ராசிக்காரர்களை கோடீஸ்வரராக்க போகுதாம்...! -
1/2 கப் வேர்க்கடலையும், 1 கப் தயிரும் இருந்தா டக்குனு இந்த சட்னியை அரைங்க...இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும்! -
IPL 2026: தமிழ் ரசிகர்களின் மனதைக் கவர்ந்த டாப் சிஎஸ்கே வீரர்கள்! இதுல உங்களுக்கு பிடிச்சவங்க யாரு? -
கோடிகளில் சம்பாதிக்கும் அதிர்ஷ்டம் மற்றும் திறமையுடன் பிறந்த 4 ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
ஈவ்னிங் டைம்-ல காபி, டீ-க்கு பதிலா தினமும் இத 1 டம்ளர் குடிங்க.. ருசியானதும்.. கண் பார்வையும் மேம்படும்.. -
சொந்த நட்சத்திரம் செல்லும் கேது: மார்ச் 29 முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ் அனைத்தும் கிடைக்கப்போகுது.. -
IPL 2026: தோனி ஏன் 'தல' அழைக்கப்படுகிறார்? எப்போதிருந்து தோனிக்கு இந்த பெயர் வந்தது தெரியுமா? -
கொத்தவரங்காய் கெட்டி குழம்பு ரெசிபி...இந்த மாதிரி செஞ்சு பாருங்க...சாதத்தோட சாப்பிட அட்டகாசமாக இருக்கும்...!
நிணநீர் மண்டலம் எவ்வளவு முக்கியமானது? அதை சுத்தமாக வைத்துக் கொள்வது எப்படி?
இங்கு நிணநீர் மண்டலத்தை சுத்தமாக வைத்துக் கொள்வதற்கான வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.
நிணநீர் மண்டலமானது நிணநீர் கணுக்கள், மண்ணீரல், அடிநாச் சதைகள், எலும்பு மஜ்ஜை மற்றும் தைமஸ் சுரப்பியைக் கொண்டுள்ளது. இதன் பணி என்ன? இது உடலில் உள்ள செல்களை சுத்தமாக வைத்துக் கொள்ளும்.

இந்த மண்டலம் இரத்த செல்களில் உள்ள டாக்ஸின்கள் மற்றும் கழிவுகளை வெளியேற்றினால் தான், கல்லீரல் அல்லது சிறுநீரகம் டாக்ஸின்களை வெளியேற்றும் பணியை மேற்கொள்ளும். இவ்வளவு முக்கிய பணியை செய்யும் நிணநீர் மண்டலத்தில் டாக்ஸின்களால் அடைப்புக்கள் ஏற்படும் வாய்ப்புக்கள் அதிகம் உள்ளது.
எனவே அவ்வப்போது நிணநீர் மண்டலத்தை நல்ல வடிவில் வைத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும். நிணநீர் மண்டலம் சுத்தமாக இருக்க வேண்டுமானால், அதற்கு குறிப்பிட்ட சில செயல்களை நாம் மேற்கொள்ள வேண்டும். இங்கு நிணநீர் மண்டலத்தை சுத்தமாக வைத்துக் கொள்வதற்கான வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

சுவாசித்தல்
நன்கு ஆழமாக சுவாசிப்பதன் மூலம், உடலில் ஆக்ஸிஜனின் அளவு அதிகரிக்கும். இச்செயல் நிணநீர் மண்டலத்திற்கு உதவியாக இருக்கும். எப்போது நிணநீர் திரவங்கள் உடலினுள் நன்கு ஓடுகிறதோடு, அப்போது உடலில் இருந்து டாக்ஸின்கள் வெளியேறிவிடும்.

தண்ணீர்
தினமும் போதுமான அளவு நீரைப் பருகுவதோடு, எலுமிச்சை ஜூஸை ஒரு டம்ளர் குடித்தால், நிணநீர் மண்டலத்தில் உள்ள டாக்ஸின்கள் வெளியேற்றப்படும்.
அதிலும் காலையில் எழுந்ததும் வெதுவெதுப்பான நீரைப் பருகுவதன் மூலும், உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையடைவதோடு, நிணநீர் மண்டலமும் வலிமையடையும்.

உடற்பயிற்சி
நிணநீர் மண்டலத்தின் சீரான செயல்பாட்டிற்கு உடற்பயிற்சி மிகவும் அவசியமானது. ஒருவர் தினமும் சிறிது நேரமாவது உடற்பயிற்சியில் ஈடுபடாமல் இருந்தால், திசுக்களில் டாக்ஸின்களின் தேக்கம் அதிகரிக்கும்.
ஆனால் உடற்பயிற்சியில் ஈடுபடும் போது, செல்களில் ஆக்ஸிஜன் அளவு அதிகரிக்கும். குறிப்பாக குதிக்கும் படியான உடற்பயிற்சியை செய்து வந்தால், நிணநீர் மண்டலத்தின் ஆரோக்கியம் தூண்டப்படும்.

பச்சை காய்கறிகள்
பச்சை காய்கறிகளில் குளோரோஃபில் உள்ளது. இது நிணநீர் மண்டலத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும். ஆகவே இந்த காய்கறிகளை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

பழங்கள்
பழங்கள் உடலுக்கு வழங்கும் குறிப்பிட்ட நொதிகள், நிணநீர் மண்டலத்தை சுத்தப்படுத்தும். ஆகவே காலையில் பழங்களை சாப்பிட்டு, அன்றைய தினத்தை ஆரம்பியுங்கள்.

பிரஷ்
காலையில் குளிக்கும் முன், பாடி பிரஷ் கொண்டு சருமத்தை தேய்த்து விடுங்கள். இது சருமத்தில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றும். மேலும் இச்செயல் உடலில் நிணநீர் திரவ ஓட்டத்தைத் தூண்டும்.

நட்ஸ் மற்றும் விதைகள்
நட்ஸ் மற்றும் விதைகளில் ஃபேட்டி அமிலங்கள் உள்ளது. இந்த அமிலங்கள் நிணநீர் கணுக்களுக்கு மிகவும் நல்லது.

மசாஜ்
வாரம் ஒருமுறை பாடி மசாஜ் செய்வதன் மூலம், நிணநீர் திரவங்களின் ஓட்டம் உடல் முழுவதும் தூண்டப்படும்.



Click it and Unblock the Notifications











