Latest Updates
-
லான்ச்பாக்ஸிற்கு ஒருடைம் இந்த பீட்ருட் தேங்காய் சாதம் செய்யுங்க - குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
இந்த 4 அன்பான ராசிக்காரங்க எப்போதும் மற்றவர்களால் தவறாக புரிந்து கொள்ளப்படுபவர்களாம் - உங்க ராசி என்ன? -
இன்னிக்கே உங்க பர்ஸில் ஒரு துண்டு சிவப்பு பேப்பரை வையுங்க.. அப்புறம் நடக்குற அதிசயத்தை பாருங்க.. -
நார்த் இந்தியன் ஸ்வீட் கார்ன் மசாலா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு பட்டாசா இருக்கும் -
திரிகோண வீட்டில் நிகழும் சூரிய கிரகணம்: இந்த 3 ராசிக்கு பணப்பிரச்சனை அதிகரிக்கப்போகுது! உஷார்.. -
இந்த நாடுகளில் எவ்வளவு பெரிய பணக்காரராக இருந்தாலும் தங்க நகை அணிய மாட்டார்களாம் - ஏன் தெரியுமா? -
ஆகஸ்ட் 12-ல் நிகழும் சூரிய கிரகணத்திற்குப் பிறகு ராஜயோகத்தை பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
Aadi Amavasai 2026: ஆடி அமாவாசை ஸ்பெஷல் தலவாழை படையல் மெனு - என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அரைச்சுவிட்ட பூசணிக்காய் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - அட்டகாசமா இருக்கும் -
சொரியாசிஸ் பற்றி ஒவ்வொருவரும் கட்டாயம் தெரிஞ்சுக்க வேண்டிய விஷயங்களை பகிர்ந்து கொண்ட டாக்டர்!
மூன்று மாதத்தில் உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையடையச் செய்யும் அற்புத ஜூஸ்!
இங்கு மூன்று மாதத்தில் உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையடையச் செய்யும் அற்புத ஜூஸ் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.
நீங்கள் அடிக்கடி சளி, காய்ச்சல், இருமலால் அவஸ்தைப்படுபவர்களா? அப்படியெனில் உங்கள் உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் மிகவும் பலவீனமாக உள்ளது என்று அர்த்தம். ஆனால் இயற்கை நமக்கு நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தும் ஒருசில சக்தி வாய்ந்த உணவுப் பொருட்களை வழங்கியுள்ளது.

அந்த உணவுப் பொருட்களை ஒருவர் தனது அன்றாட உணவில் சேர்த்து வந்தால், நிச்சயம் எந்த நோயும் உடலைத் தாக்காமல் பார்த்துக் கொள்ள முடியும். தற்போது பெருகி வரும் நோய்களின் எண்ணிக்கையால், எப்போது ஒருவரை நோய்கள் தாக்கும் என்று சொல்ல முடியாது.
எனவே 'வருமுன் காப்பதே மேல்' என்னும் பழமொழிக்கேற்ப ஒவ்வொருவரும் நடந்து கொண்டால், நோய்களின் தாக்கத்தில் இருந்து விலகி, வாழ்நாளின் அளவை நீட்டித்துக் கொள்ள முடியும். இங்கு உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை மிகவும் வலிமையாக்கும் ஓர் அற்புத ஜூஸ் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்:
கரும்புச்சாறு - 1 டம்ளர்
இஞ்சி ஜூஸ் 2 டேபிள் ஸ்பூன்

கரும்பு
கரும்புகளில் நொதித்த சர்க்கரை மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளது. இது உடலினுள் உள்ள செல்களுக்கு ஊட்டமளிப்பதோடு, பாதுகாப்பையும் வழங்கி, நோய்களை எதிர்த்துப் போராடும் அளவில் வலிமைப்படுத்தவும் செய்யும்.

இஞ்சி
இஞ்சியில் உள்ள பீட்டா கரோட்டீன்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்கி, நோய்கள் அண்டாமல், உடலைச் சுற்றி ஒரு பாதுகாப்பு கவசத்தை உருவாக்கும்.

தயாரிக்கும் முறை:
இதன் செய்முறை மிகவும் எளிது. கரும்பு சாற்றுடன் இஞ்சி சாற்றினை சேர்த்து நன்கு கலந்தால் ஜூஸ் தயார்.

பருகும் முறை:
இந்த ஜூஸை காலையில் உணவு உட்கொண்ட பின் பருக வேண்டும். அதுவும் ஒரு நாள் விட்டு ஒரு நாள் என 3 மாதங்கள் இந்த ஜூஸை குடித்து வந்தால், எந்த நோயும் உடலைத் தாக்காதவாறு உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையடையும்.



Click it and Unblock the Notifications