Latest Updates
-
கோதுமை ரவா பணியாரமும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க... -
இன்றைய ராசிபலன் 29 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு ரொம்ப பதட்டமான நாளாக இருக்குமாம் -
ஜூன் 30-ல் நிகழும் நட்சத்திர பெயர்ச்சியால் ஆபத்துகளையும், அவமானங்களையும் சந்திக்கப்போகும் 3 ராசிகள் -
10 பாதமும், 1 குடைமிளகாயும் இருந்தா இந்த ஆந்திரா சட்னியை அரைங்க - டேஸ்ட் அட்டகாசமாக இருக்கும் -
ஜூன் 29 ஸ்ட்ராபெர்ரி நிலவு அன்று நிகழும் புதன் வக்ர பெயர்ச்சி இந்த 4 ராசிகளின் அதிர்ஷ்டக்கதவை திறக்கப்போகுதாம் -
Strawberry Moon 2026: ஸ்ட்ராபெரி நிலவு எப்போது வருகிறது? இந்தியாவில் எந்த நேரத்தில் இது பிரகாசமாக தெரியும்? -
கொங்கு ஸ்பெஷல் முட்டை சிந்தாமணி ரெசிபி - 4 முட்டை இருந்தா இத செஞ்சு பாருங்க - டக்கரா இருக்கும் -
39 மனைவிகள், 94 குழந்தைகள் என ஆலமரமாய் வாழ்ந்த இந்தியர் யார் தெரியுமா? உலகிலேயே பெரிய குடும்பம் இவரோடதுதான் -
பெங்காலி ஸ்டைல் பெப்பர் சிக்கன் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுருக்குனு வேற லெவலில் இருக்கும் -
சுக்கிரன்-சூரியனின் ராசி மாற்றத்தால் ஜூலை மாதத்தில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா
மூன்று மாதத்தில் உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையடையச் செய்யும் அற்புத ஜூஸ்!
இங்கு மூன்று மாதத்தில் உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையடையச் செய்யும் அற்புத ஜூஸ் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.
நீங்கள் அடிக்கடி சளி, காய்ச்சல், இருமலால் அவஸ்தைப்படுபவர்களா? அப்படியெனில் உங்கள் உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் மிகவும் பலவீனமாக உள்ளது என்று அர்த்தம். ஆனால் இயற்கை நமக்கு நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தும் ஒருசில சக்தி வாய்ந்த உணவுப் பொருட்களை வழங்கியுள்ளது.

அந்த உணவுப் பொருட்களை ஒருவர் தனது அன்றாட உணவில் சேர்த்து வந்தால், நிச்சயம் எந்த நோயும் உடலைத் தாக்காமல் பார்த்துக் கொள்ள முடியும். தற்போது பெருகி வரும் நோய்களின் எண்ணிக்கையால், எப்போது ஒருவரை நோய்கள் தாக்கும் என்று சொல்ல முடியாது.
எனவே 'வருமுன் காப்பதே மேல்' என்னும் பழமொழிக்கேற்ப ஒவ்வொருவரும் நடந்து கொண்டால், நோய்களின் தாக்கத்தில் இருந்து விலகி, வாழ்நாளின் அளவை நீட்டித்துக் கொள்ள முடியும். இங்கு உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை மிகவும் வலிமையாக்கும் ஓர் அற்புத ஜூஸ் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்:
கரும்புச்சாறு - 1 டம்ளர்
இஞ்சி ஜூஸ் 2 டேபிள் ஸ்பூன்

கரும்பு
கரும்புகளில் நொதித்த சர்க்கரை மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளது. இது உடலினுள் உள்ள செல்களுக்கு ஊட்டமளிப்பதோடு, பாதுகாப்பையும் வழங்கி, நோய்களை எதிர்த்துப் போராடும் அளவில் வலிமைப்படுத்தவும் செய்யும்.

இஞ்சி
இஞ்சியில் உள்ள பீட்டா கரோட்டீன்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்கி, நோய்கள் அண்டாமல், உடலைச் சுற்றி ஒரு பாதுகாப்பு கவசத்தை உருவாக்கும்.

தயாரிக்கும் முறை:
இதன் செய்முறை மிகவும் எளிது. கரும்பு சாற்றுடன் இஞ்சி சாற்றினை சேர்த்து நன்கு கலந்தால் ஜூஸ் தயார்.

பருகும் முறை:
இந்த ஜூஸை காலையில் உணவு உட்கொண்ட பின் பருக வேண்டும். அதுவும் ஒரு நாள் விட்டு ஒரு நாள் என 3 மாதங்கள் இந்த ஜூஸை குடித்து வந்தால், எந்த நோயும் உடலைத் தாக்காதவாறு உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையடையும்.



Click it and Unblock the Notifications