Latest Updates
-
கொளுத்தும் வெயிலுக்கு இப்படி தக்காளி ரசம் வெச்சு சாப்பிடுங்க.. ருசியாவும், இதமாவும் இருக்கும்... -
April Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஏப்ரல் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
World Tuberculosis Day 2026: உங்ககிட்ட இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப காசநோய் இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
சந்திர-சுக்கிர சேர்க்கையால் உருவாகும் வைபவ லட்சுமி ராஜயோகம்: ஏப்ரலில் இந்த 3 ராசிக்கு பணம் குவியும்..! -
நெல்லூர் வெங்காய கார சட்னி - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. 1 வாரமானாலும் கெட்டுப்போகாது.. -
இன்றைய ராசிபலன் 24 மார்ச் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு 4 ராசிகளுக்கு துரதிர்ஷ்டம் கதவை தட்டுமாம்...! -
தேர்தல் பிரச்சாரத்திற்கு முன்பு பல தலைவர்கள் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு செல்வது ஏன்? -
18 ஆண்டுக்கு பின் மகம் நட்சத்திரம் செல்லும் கேதுபகவான்: இந்த 3 ராசிக்காரங்க பணத்தை மூட்டைக்கட்ட போறாங்களாம்... -
பெங்காலி தக்காளி சட்னி ரெசிபி... ஒரு தடவை அரைச்சு பாருங்க... இனிப்பா, காரமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் மீல் மேக்கர் இருந்தா.. இந்த பக்குவத்துல கிரேவி செய்யுங்க.. 2 சப்பாத்தி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க...
மூன்று மாதத்தில் உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையடையச் செய்யும் அற்புத ஜூஸ்!
இங்கு மூன்று மாதத்தில் உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையடையச் செய்யும் அற்புத ஜூஸ் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.
நீங்கள் அடிக்கடி சளி, காய்ச்சல், இருமலால் அவஸ்தைப்படுபவர்களா? அப்படியெனில் உங்கள் உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் மிகவும் பலவீனமாக உள்ளது என்று அர்த்தம். ஆனால் இயற்கை நமக்கு நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தும் ஒருசில சக்தி வாய்ந்த உணவுப் பொருட்களை வழங்கியுள்ளது.

அந்த உணவுப் பொருட்களை ஒருவர் தனது அன்றாட உணவில் சேர்த்து வந்தால், நிச்சயம் எந்த நோயும் உடலைத் தாக்காமல் பார்த்துக் கொள்ள முடியும். தற்போது பெருகி வரும் நோய்களின் எண்ணிக்கையால், எப்போது ஒருவரை நோய்கள் தாக்கும் என்று சொல்ல முடியாது.
எனவே 'வருமுன் காப்பதே மேல்' என்னும் பழமொழிக்கேற்ப ஒவ்வொருவரும் நடந்து கொண்டால், நோய்களின் தாக்கத்தில் இருந்து விலகி, வாழ்நாளின் அளவை நீட்டித்துக் கொள்ள முடியும். இங்கு உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை மிகவும் வலிமையாக்கும் ஓர் அற்புத ஜூஸ் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்:
கரும்புச்சாறு - 1 டம்ளர்
இஞ்சி ஜூஸ் 2 டேபிள் ஸ்பூன்

கரும்பு
கரும்புகளில் நொதித்த சர்க்கரை மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளது. இது உடலினுள் உள்ள செல்களுக்கு ஊட்டமளிப்பதோடு, பாதுகாப்பையும் வழங்கி, நோய்களை எதிர்த்துப் போராடும் அளவில் வலிமைப்படுத்தவும் செய்யும்.

இஞ்சி
இஞ்சியில் உள்ள பீட்டா கரோட்டீன்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்கி, நோய்கள் அண்டாமல், உடலைச் சுற்றி ஒரு பாதுகாப்பு கவசத்தை உருவாக்கும்.

தயாரிக்கும் முறை:
இதன் செய்முறை மிகவும் எளிது. கரும்பு சாற்றுடன் இஞ்சி சாற்றினை சேர்த்து நன்கு கலந்தால் ஜூஸ் தயார்.

பருகும் முறை:
இந்த ஜூஸை காலையில் உணவு உட்கொண்ட பின் பருக வேண்டும். அதுவும் ஒரு நாள் விட்டு ஒரு நாள் என 3 மாதங்கள் இந்த ஜூஸை குடித்து வந்தால், எந்த நோயும் உடலைத் தாக்காதவாறு உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையடையும்.



Click it and Unblock the Notifications











