Latest Updates
-
2 ஸ்பூன் ஓட்ஸ், 3 முட்டை இருந்தா.. காலையில் இந்த டிபனை செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் -
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
உங்க அக்குள் கருப்பா இருக்கா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணிப் பாருங்க... -
இந்த 3 ராசிக்காரங்க கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட அதிர்ஷ்ட ஆன்மாக்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ந்த பட்டாணி இருந்தா.. இந்த பக்குவத்துல குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது..
நீரில் கை நனைத்தால் உங்களுக்கு இது போன்று சுருக்கங்கள் ஏற்படுகிறதா?
நல்ல வெதுவெதுப்பான நீரில் நீண்ட நேரம் நாம் நன்கு குளித்து முடித்து வந்த பிறகு ரிலாக்ஸாக உணர்வோம். காரணம் சுத்தமாக இருப்போம், சருமம் ஸ்மூத்தாக இருக்கும். ஆனால், அந்த சமயம் உங்கள் கைகள் மற்றும் கால் பாதங்களை பார்த்தல் தோல் சற்றே சுருக்கங்களுடன் தோன்றும். உலர்ந்த திராட்சையை போல.
இது போன்று உங்களுக்கு நேர்ந்ததுண்டா? நீண்ட நேரம் தண்ணீரில் ஊறி எழுந்து வந்தால், மழையில் நனைந்து வந்தால் கைகளில் தோல் சுருக்கங்களுடன் தோன்றும். உடலின் வேறு எந்த பகுதியிலும் இன்றி, பாதம் மற்றும் விரல் நுனியில் சுருக்கங்கள் ஏற்படுவது ஏன்?

கேள்விகள்:
1. என்றாவது ஏன் நீரில் கையை நனைதவுடன் தோல் சுருங்குகிறது என எண்ணியதுண்டா?
2. உடலில் எங்கும் இல்லாமல், கைகளில் மட்டும் ஏன் தோல் சுருங்குகிறது?
3. குளிக்கும் போது உடலில் ஏன் இவ்வாறு ஏற்படுவதில்லை?

ஏன் இவ்வாறு ஆகிறது?
அனைவருடைய சருமத்திலும் எண்ணெய் பசை இருக்கும். நீங்கள் நீண்ட நேரம் நீரில் குளிக்கும் போது, மழையில் நீண்ட நேரம் நனைந்து வரும் போது அல்லது நீண்ட நேரம் சோப்பு போட்டு கைகழுவும் போது, நீரினால் சருமத்தில் இருக்கும் அந்த எண்ணெய் பசை நீக்கப்படுகிறது.

தற்காலிகமானது
இது தற்காலிகமான செயல் தான். மீண்டும் சருமத்தில் எண்ணெய் பசை உருவாகிவிடும். ஆனால், நீரினால் எண்ணெய் பசை தற்காலிகமாக நீக்கப்படும் போது நமது தோல் வெளிப்புற சருமத்தை உள் இழுக்க செய்கிறது.

பாதம், விரல் நுனி
நீங்கள் நன்கு கூர்ந்து கவனித்து பார்த்தல். நமது உடலின் ஒவ்வொரு பகுதியின் தோலும் வெவ்வேறு மாதிரி தன்மை கொண்டிருக்கும். பாதம், மற்றும் விரல் நுனி தோல்கள் மட்டும் தான் மிகவேகமாக சுருங்கும் தன்மை கொண்டிருக்கின்றன.

தோள்கள், வயிறு, தொடை
தோள்கள், வயிறு, தொடை பகுதிகளில் நீங்கள் இது போன்று சுருங்குவதை ஒருநாளும் உணர்ந்திருக்க முடியாது. ஏனெனில், பாதம் மற்றும் விரல் நுனியில் இருக்கும் தோலை மேல் தோல் என அழைக்கின்றனர். இது ஏனைய உடல் பாக தோலுடன் ஒப்பிடுகையில் வித்தியாசமானது ஆகும்.

இறந்த செல்கள்
மற்ற உடல் பாக தோலுடன் ஒப்பிடுகையில் பாதம் மற்றும் உள்ளங்கையில் இருக்கும் தோலில் நிறைய இறந்த செல்கள் இருக்கும். எனவே, இது நீரில் முழுமையாக நனைந்து விடுகிறது. இதனால் மேல் தோல் உள் இழுக்கபடுவதாலும், தற்காலிகமாக எண்ணெய் பசை நீக்கப்படுவதாலும் தான் சுருக்கங்கள் ஏற்படுகின்றன.

சுவாரஸ்யம்!
மற்றுமொரு சுவாரஸ்யம் என்னவெனில், நீரின் நனைந்து சுருக்கமடைந்து காணப்படும் போது அந்த பாகத்தில் உங்களுக்கு தற்காலிகமாக வலி உணர்வு தெரியாது.



Click it and Unblock the Notifications