Latest Updates
-
ஆந்திரா முட்டை புலுசு ரெசிபி... இதை ஒருதடவை செஞ்சு பாருங்க... சப்பாத்தி, சாதத்துக்கு அட்டகாசமா இருக்கும்...! -
புதன் நேரடி இயக்கத்தை தொடங்குவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம்...! -
காரசாரமான கேரளா ஸ்டைல் ஈஸி பெப்பர் சிக்கன் ரெசிபி... இப்படி செஞ்சு பாருங்க... வேற லெவல் சைடிஷா இருக்கும்...! -
கள்ளக்காதலில் ஈடுபட அதிக வாய்ப்புள்ள 4 ராசிகள் இவங்கதான்... இவங்ககிட்ட ரொம்ப ஜாக்கிரதையா இருங்க...! -
காரசாரமான.. ஹைதராபாதி சிக்கன் கிரேவி - சிம்பிளா எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நல்ல நேரம் தேடிவருமாம்...! -
வார ராசிபலன் (22 March 2026-28 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு சிரமங்கள் அதிகரிக்கும்.. -
Tamil Nadu Election 2026: பாரம்பரிய தமிழ் உணவுகளை உட்கொள்ளும் தமிழகத் தலைவர்கள்! -
முட்டையும், பிரட்டும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
கோடையில் எப்பவும் பளிச்சுன்னு பிரகாசமா தெரியணுமா? அப்ப பப்பாளியை வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க..
நீரில் கை நனைத்தால் உங்களுக்கு இது போன்று சுருக்கங்கள் ஏற்படுகிறதா?
நல்ல வெதுவெதுப்பான நீரில் நீண்ட நேரம் நாம் நன்கு குளித்து முடித்து வந்த பிறகு ரிலாக்ஸாக உணர்வோம். காரணம் சுத்தமாக இருப்போம், சருமம் ஸ்மூத்தாக இருக்கும். ஆனால், அந்த சமயம் உங்கள் கைகள் மற்றும் கால் பாதங்களை பார்த்தல் தோல் சற்றே சுருக்கங்களுடன் தோன்றும். உலர்ந்த திராட்சையை போல.
இது போன்று உங்களுக்கு நேர்ந்ததுண்டா? நீண்ட நேரம் தண்ணீரில் ஊறி எழுந்து வந்தால், மழையில் நனைந்து வந்தால் கைகளில் தோல் சுருக்கங்களுடன் தோன்றும். உடலின் வேறு எந்த பகுதியிலும் இன்றி, பாதம் மற்றும் விரல் நுனியில் சுருக்கங்கள் ஏற்படுவது ஏன்?

கேள்விகள்:
1. என்றாவது ஏன் நீரில் கையை நனைதவுடன் தோல் சுருங்குகிறது என எண்ணியதுண்டா?
2. உடலில் எங்கும் இல்லாமல், கைகளில் மட்டும் ஏன் தோல் சுருங்குகிறது?
3. குளிக்கும் போது உடலில் ஏன் இவ்வாறு ஏற்படுவதில்லை?

ஏன் இவ்வாறு ஆகிறது?
அனைவருடைய சருமத்திலும் எண்ணெய் பசை இருக்கும். நீங்கள் நீண்ட நேரம் நீரில் குளிக்கும் போது, மழையில் நீண்ட நேரம் நனைந்து வரும் போது அல்லது நீண்ட நேரம் சோப்பு போட்டு கைகழுவும் போது, நீரினால் சருமத்தில் இருக்கும் அந்த எண்ணெய் பசை நீக்கப்படுகிறது.

தற்காலிகமானது
இது தற்காலிகமான செயல் தான். மீண்டும் சருமத்தில் எண்ணெய் பசை உருவாகிவிடும். ஆனால், நீரினால் எண்ணெய் பசை தற்காலிகமாக நீக்கப்படும் போது நமது தோல் வெளிப்புற சருமத்தை உள் இழுக்க செய்கிறது.

பாதம், விரல் நுனி
நீங்கள் நன்கு கூர்ந்து கவனித்து பார்த்தல். நமது உடலின் ஒவ்வொரு பகுதியின் தோலும் வெவ்வேறு மாதிரி தன்மை கொண்டிருக்கும். பாதம், மற்றும் விரல் நுனி தோல்கள் மட்டும் தான் மிகவேகமாக சுருங்கும் தன்மை கொண்டிருக்கின்றன.

தோள்கள், வயிறு, தொடை
தோள்கள், வயிறு, தொடை பகுதிகளில் நீங்கள் இது போன்று சுருங்குவதை ஒருநாளும் உணர்ந்திருக்க முடியாது. ஏனெனில், பாதம் மற்றும் விரல் நுனியில் இருக்கும் தோலை மேல் தோல் என அழைக்கின்றனர். இது ஏனைய உடல் பாக தோலுடன் ஒப்பிடுகையில் வித்தியாசமானது ஆகும்.

இறந்த செல்கள்
மற்ற உடல் பாக தோலுடன் ஒப்பிடுகையில் பாதம் மற்றும் உள்ளங்கையில் இருக்கும் தோலில் நிறைய இறந்த செல்கள் இருக்கும். எனவே, இது நீரில் முழுமையாக நனைந்து விடுகிறது. இதனால் மேல் தோல் உள் இழுக்கபடுவதாலும், தற்காலிகமாக எண்ணெய் பசை நீக்கப்படுவதாலும் தான் சுருக்கங்கள் ஏற்படுகின்றன.

சுவாரஸ்யம்!
மற்றுமொரு சுவாரஸ்யம் என்னவெனில், நீரின் நனைந்து சுருக்கமடைந்து காணப்படும் போது அந்த பாகத்தில் உங்களுக்கு தற்காலிகமாக வலி உணர்வு தெரியாது.



Click it and Unblock the Notifications











