Just In
- 39 min ago Kulfi: 4 பிரட்டும், 1 பால் பாக்கெட்டும் வெச்சு ஈஸியா குல்பி செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாருங்க...
- 1 hr ago சர்க்கரை நோயாளிகள் சிக்கன் சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டா என்ன நடக்கும் தெரியுமா? எப்படி சாப்பிடணும் தெரியுமா?
- 1 hr ago புடவை கட்டினால் புற்றுநோய் வருகிறதாம்.. ஆய்வுகள் கூறும் அதிர்ச்சி தகவல்..!
- 3 hrs ago வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
Don't Miss
- Technology பொளக்குது விற்பனை.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 108MP கேமரா.. 100W சார்ஜிங்.. 4500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- News அண்ணாமலையின் பாட்டி.. முளைத்த விவாதம்.. இதைவிடுங்க, பிரியங்கா, ராகுல் காந்தியை மீண்டும் சீண்டிய பாஜக
- Finance உங்ககிட்ட கிழிஞ்ச ரூபாய் நோட்டு இருக்கா.. அப்போ கண்டிப்பா இந்த பதிவு உங்களுக்குத்தான்!
- Automobiles இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- Movies தங்கலான் திரைப்பட இசை..ஜிவி பிரகாஷ் என்ன சொல்றாரு பாருங்க.. சம்பவம் இருக்காம்
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
நீரில் கை நனைத்தால் உங்களுக்கு இது போன்று சுருக்கங்கள் ஏற்படுகிறதா?
நல்ல வெதுவெதுப்பான நீரில் நீண்ட நேரம் நாம் நன்கு குளித்து முடித்து வந்த பிறகு ரிலாக்ஸாக உணர்வோம். காரணம் சுத்தமாக இருப்போம், சருமம் ஸ்மூத்தாக இருக்கும். ஆனால், அந்த சமயம் உங்கள் கைகள் மற்றும் கால் பாதங்களை பார்த்தல் தோல் சற்றே சுருக்கங்களுடன் தோன்றும். உலர்ந்த திராட்சையை போல.
இது போன்று உங்களுக்கு நேர்ந்ததுண்டா? நீண்ட நேரம் தண்ணீரில் ஊறி எழுந்து வந்தால், மழையில் நனைந்து வந்தால் கைகளில் தோல் சுருக்கங்களுடன் தோன்றும். உடலின் வேறு எந்த பகுதியிலும் இன்றி, பாதம் மற்றும் விரல் நுனியில் சுருக்கங்கள் ஏற்படுவது ஏன்?
கேள்விகள்:
1. என்றாவது ஏன் நீரில் கையை நனைதவுடன் தோல் சுருங்குகிறது என எண்ணியதுண்டா?
2. உடலில் எங்கும் இல்லாமல், கைகளில் மட்டும் ஏன் தோல் சுருங்குகிறது?
3. குளிக்கும் போது உடலில் ஏன் இவ்வாறு ஏற்படுவதில்லை?
ஏன் இவ்வாறு ஆகிறது?
அனைவருடைய சருமத்திலும் எண்ணெய் பசை இருக்கும். நீங்கள் நீண்ட நேரம் நீரில் குளிக்கும் போது, மழையில் நீண்ட நேரம் நனைந்து வரும் போது அல்லது நீண்ட நேரம் சோப்பு போட்டு கைகழுவும் போது, நீரினால் சருமத்தில் இருக்கும் அந்த எண்ணெய் பசை நீக்கப்படுகிறது.
தற்காலிகமானது
இது தற்காலிகமான செயல் தான். மீண்டும் சருமத்தில் எண்ணெய் பசை உருவாகிவிடும். ஆனால், நீரினால் எண்ணெய் பசை தற்காலிகமாக நீக்கப்படும் போது நமது தோல் வெளிப்புற சருமத்தை உள் இழுக்க செய்கிறது.
பாதம், விரல் நுனி
நீங்கள் நன்கு கூர்ந்து கவனித்து பார்த்தல். நமது உடலின் ஒவ்வொரு பகுதியின் தோலும் வெவ்வேறு மாதிரி தன்மை கொண்டிருக்கும். பாதம், மற்றும் விரல் நுனி தோல்கள் மட்டும் தான் மிகவேகமாக சுருங்கும் தன்மை கொண்டிருக்கின்றன.
தோள்கள், வயிறு, தொடை
தோள்கள், வயிறு, தொடை பகுதிகளில் நீங்கள் இது போன்று சுருங்குவதை ஒருநாளும் உணர்ந்திருக்க முடியாது. ஏனெனில், பாதம் மற்றும் விரல் நுனியில் இருக்கும் தோலை மேல் தோல் என அழைக்கின்றனர். இது ஏனைய உடல் பாக தோலுடன் ஒப்பிடுகையில் வித்தியாசமானது ஆகும்.
இறந்த செல்கள்
மற்ற உடல் பாக தோலுடன் ஒப்பிடுகையில் பாதம் மற்றும் உள்ளங்கையில் இருக்கும் தோலில் நிறைய இறந்த செல்கள் இருக்கும். எனவே, இது நீரில் முழுமையாக நனைந்து விடுகிறது. இதனால் மேல் தோல் உள் இழுக்கபடுவதாலும், தற்காலிகமாக எண்ணெய் பசை நீக்கப்படுவதாலும் தான் சுருக்கங்கள் ஏற்படுகின்றன.
சுவாரஸ்யம்!
மற்றுமொரு சுவாரஸ்யம் என்னவெனில், நீரின் நனைந்து சுருக்கமடைந்து காணப்படும் போது அந்த பாகத்தில் உங்களுக்கு தற்காலிகமாக வலி உணர்வு தெரியாது.