Just In
- 59 min ago சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் மே 19 வரை இந்த ராசிக்காரர்களுக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- 1 hr ago இந்த 4 ராசிக்காரங்களோட முதல் எதிரியே அவங்க ஈகோதானாம்... ஈகோவாலேயே நிறைய விஷயங்களை இழந்துருவாங்களாம்!
- 2 hrs ago ஒருடைம் உருளைக்கிழங்கு குருமாவை இந்த ஸ்டைலில் செய்யுங்க.. அப்புறம் பாருங்க இப்படிதான் எப்பவும் செய்வீங்க..
- 6 hrs ago Today Rasi Palan 24 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பிறர் பிரச்சனைகளில் தலையிடாமல் இருந்தால் நல்லது...
Don't Miss
- News நாடு ஒற்றுமையாக இருக்க வேண்டுமென்றால் மோடி பேசவே கூடாது.. சென்னையில் மார்க்சிஸ்ட் கட்சி போராட்டம்!
- Automobiles வெள்ளை நிற ஹெட்லைட் போட்ட வண்டிகளுக்கு எல்லாம் அபராதம் போட போறாங்க! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!
- Sports "இந்தியாவின் ஒரே பாட்ஷா" சச்சினின் 51வது பிறந்தநாள்.. கொண்டாடும் தோனி, விராட் கோலி, ரோகித் சர்மா!
- Finance தங்கம் விலை இறங்கிய வேகத்தில் ஏறியது.. ஒவ்வொரு நிமிடமும் முக்கியம்.. சான்ஸ் மிஸ் பண்ணசடாதீங்க..!
- Technology இதுதாங்க பட்ஜெட்.. ரூ.9999 போதும்.. 12GB ரேம்.. 1TB மெமரி.. 5000mAh பேட்டரி.. 15W சார்ஜிங்.. எந்த மாடல்?
- Movies இப்படி செய்வீங்கணு நினைக்கல..கல்யாணமே பண்ணியிருக்க மாட்டேனே..மேடையில் ஓபனா பேசிய ரெடின் கிங்ஸ்லி!
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
குளிர்காலத்தில் ஏன் நோய்கள் தாக்குகின்றன?
உடலின் செயல் கடிகாரம் என்பது உடலின் செல்களில் தொடங்கி, பாகங்கள் வரை ஒரு சுழற்சியில் காலம் தவறாமல் செயல்பட்டுக் கொண்டிருக்கும். நமது சுவற்றில் தொங்கவிட்டிருக்கும் கடிகாரம் போலவே. எப்போது கிருமிகள் நமது செல்களை தாக்குகின்றதோ, அப்போது இந்த சுழற்சியில் பாதிப்பு ஏற்படும். விளைவு உடல் நலம் சரியில்லாமல் போகும்.
கிருமிகள் எந்த சமயத்தில் மிக அதிகமாக பெருகும் என கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தின் அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் ஒரு ஆய்வை நடத்தினர். இதில் ஒரு நாளின் இறுதியை விட , காலையில்தான் கிருமிகள் பல மடங்கு வேகமாக பெருகும் என ஆய்வின் இறுதியில் தெரிய வந்துள்ளது.
இந்த ஆய்விற்காக சோதனை எலிகளிடம் பரிசோதனை செய்தார்கள். எலிகளுக்கு ஹெர்ப்ஸ் வைரஸ் மற்றும் இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் கிருமிகளை உடலுக்குள் செலுத்தினர்.
பின்னர் அவைகளை கண்காணித்த போது. காலையில் இந்த வைரஸ் கிருமிகள் அதிக அளவில் பெருகியிருப்பது தெரியவந்துள்ளது. மாலை மற்றும் இரவுகளில் அவை பெருகவில்லை.ஆனால் நோயின் தீவிரத்தை பரவும் active phase நிலையில் இருந்திருக்கின்றன். மறு நாள் காலையில் இன்னும் பல மடங்கு அதிகம் பெருகுகின்றன.
இரவுகளில் நைட் ஷிஃப்ட் வேலைக்கு செல்பவர்களுக்கு நம் உடலில் செயல் கடிகாரம் பாதிக்கப்படுகின்றன. இது கிருமிகள் பெருக்கத்தை இன்னும் அதிகம் உண்டு பண்ணுகின்றன. இதனால் நைட் ஷிஃப்ட் செல்பரகளுக்கு அடிக்கடி உடல் நலம் சரியில்லாமல் போவதற்கு காரணம்.
மற்றும் Bmal1 என்ற ஜீன் தான் செயல் கடிகாரத்தை ஒழுங்கு படுத்தும் ஜீனாகும். இது கிருமிகளால் ஏற்படும் செல் சிதைவை தடுக்கும். இந்த ஜீன் குளிர்காலத்தில் வேலை செய்யாமல் இருக்கிறது. வெயில் காலங்களில் தூண்டப்பட்டு வேகமாக செயல்புரிகிறது.
இதனால்தான் குளிர்காலத்தில் கிருமிகளின் ஆதிக்கம் அதிகமாக இருக்கின்றன். எளிதில் நோய்களும் தாக்குகின்றன என ஆராய்ச்சியாளர் ரச்சேல் கூறுகிறார்.
இந்த ஆய்வைப் பற்றிய தகவல்கள் நேஷனல் அகாடமி ஆஃப் சயின்ஸ் என்ற இதழில் வெளிவந்துள்ளது.