Latest Updates
-
மேஷ ராசியில் உருவாகும் மங்களாதித்ய ராஜயோகம் 2026: மே 11 முதல் இந்த 3 ராசிக்கு கையில் பணம் குவியப் போகுது.. -
சப்பாத்திக்கு ஒருடைம் முட்டைக்கோஸ் பச்சை குருமா செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
இன்ஸ்டாகிராம் பயனர்களே உஷார்! உங்கள் தனிப்பட்ட சாட்கள் இனி பாதுகாப்பில்லை? இந்த மாற்றத்தை உடனே கவனிங்க! -
கோடை வெயிலால் உங்க முகம் டல்லடிக்குதா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க.. -
வெளிநாட்டில் விவாகரத்தா? குழந்தைகளை பார்க்க முடியாமல் தவிக்கும் தாய்மார்கள் - செலினா ஜெயிட்லியின் உருக்கமான பதிவு! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 3 ராசிக்காரங்க உஷாரா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
வீட்டில் பணவரவு அதிகரிக்கணுமா? அமேசான் சேலில் இந்த வாஸ்து பொருட்களை மிஸ் பண்ணாதீங்க! -
செஃப் வாணி அவர்களின் முருங்கைக்காய் பொரியல் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... செமயா இருக்கும்.. -
Hanta Virus: கோவிட்-19 விட அதிக உயிரிழப்பை ஏற்படுத்தும் ஹன்டா வைரஸ் - இதன் அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? -
இன்றைய அபிஜித் முகூர்த்தத்தில் இந்த வாஸ்து மாற்றங்களைச் செய்யுங்க… பணவரவு தானாக அதிகரிக்கும்!
ஸ்மார்ட் போனை ஏன் பிரா மற்றும் பாக்கெட்டில் வைக்கக்கூடாது என தெரியுமா?
ஸ்மார்ட் போன் இல்லாத ஓர் நாளை நம்மால் நினைத்துப் பார்க்க முடியுமா என்றால் நிச்சயமாக முடியாது. உணர்வு ரீதியாகவும், வேலை ரீதியாகவும் நம்முடன் மிகவும் ஒன்றிப்போய் இருக்கிறது ஸ்மார்ட் போன்.
ஸ்மார்ட் போன் இல்லாத ஓர் நாளை நம்மால் நினைத்துப் பார்க்க முடியுமா என்றால் நிச்சயமாக முடியாது. உணர்வு ரீதியாகவும், வேலை ரீதியாகவும் நம்முடன் மிகவும் ஒன்றிப்போய் இருக்கிறது ஸ்மார்ட் போன். இன்னும் அதீத தொழில்நுட்ப கூறுகளுடன் ஸ்மார்ட் போன் விஸ்வரூபம் எடுக்கத்தான் போகிறது.
ஆனால், இதனால் நமது ஆரோக்யத்தில், உறவில், அன்றாட வேலைபாடுகளில் என பலவற்றில் தீயத் தாக்கங்கள் உண்டாகின்றன. முக்கியமாக ஸ்மார்ட் போனை பெண்கள் பிராக்களிலும், ஆண்கள் பேன்ட் பாக்கெட்டுகளிலும் வைக்க வேண்டாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஸ்மார்ட் போனும் புற்றுநோயும்!
ஸ்மார்ட் போன்களை பிராக்களில் வைத்து பயன்படுத்தும் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் உண்டாகிறது என ஆராய்ச்சி முடிவுகளில் தெரியவந்துள்ளது.

விந்தணு குறைபாடு!
ஆண்கள் பாக்கெட்டில் மொபைல் போன்கள் அதிகம் வைப்பதால் அதிலிருந்து வெளியாகும் கதிர்வீச்சு காரணமாக விந்தணு உற்பத்தியை பாதிக்கிறது. இதனால், நாள்பட ஆண்மை குறைபாடு உண்டாக வாய்ப்புகள் இருக்கின்றன.

ஃபேஸ்மேக்கர்
இதய பாதிப்பு உண்டாகி ஃபேஸ்மேக்கர் வைத்திருக்கும் பெண்கள் தவறுதலாக கூட ஸ்மார்ட் போனை பிராவில் வைக்கக் கூடாது. சிக்னல் தாக்கத்தால் ஃபேஸ்மேக்கர் செயல் தடைப்பட்டு போய்விடும்.

நரம்பியல் நிபுணர் கருத்து!
கால்கள், புட்டம், முதுகு வலி போன்றவை உண்டாகவும் இது ஓர் காரணமாக இருக்கிறது. ஆம், மொபைலை பேன்டின் முன் பாக்கெட் அல்லது பின் பாக்கெட்டில் அதிகம் வைப்பதால் தசை நார்களில் அழுத்தம் ஏற்பட்டு வலி உண்டாகிறது.

கதிர்வீச்சு மூளையை பாதிக்கும்!
ஸ்மார்ட் போன்களில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சு மூளையின் வளர்சிதை மாற்றத்தை சீர்குலைக்கும். இதனால், மனநிலை மாற்றங்கள் உண்டாகலாம்.

மன அழுத்தம்!
ஓர் ஆய்வில், ஸ்மார்ட் போன்களை அருகேயே வைத்து வேலை, உறங்கும் நபர்களுக்கு மன அழுத்தம் அதிகமாக உண்டாகிறது என தகவல் வெளியாகியுள்ளது.
உண்மையில், வேலையில் கவனத்தை செலுத்தவிடாமல் அடிக்கடி மொபைலை எடுத்துப் பார்க்க செய்யும் செய்கையால் தான் மன அழுத்தம் அதிகரிக்கிறது.

தூக்கமின்மை!
அடிக்கடி அதிகமாக ஸ்மார்ட் போன்களை பயன்படுத்துவதால், உறக்கநிலையில் சீர்கேடு உண்டாகிறது. இதனால், இரவு நேரத்திலாவது ஸ்மார்ட் போன்களை அதிகம் பயன்படுத்துவதை தவிர்த்துவிடுங்கள்.

வெடிக்கும் அபாயம்!
இது மிக அரிதாக நிகழும் விஷயம் எனிலும், நடக்க வாய்ப்பிருக்கிறது. ஆம், தொடர்ந்து சிக்னல் மற்றும் டேட்டாக்களை ரிசீவ் செய்துக் கொண்டே இருப்பதால், வெடிக்கும் அபாயம் இருக்கிறது.
அதே போல இதனால் மொபைல் அதிக சூடாகும். இது உடலுக்கு நல்லதல்ல.



Click it and Unblock the Notifications