Latest Updates
-
5 லட்சம் ஆண்டுகளுக்கு ஆதி மனிதர்கள் இந்தியாவில் வாழ்ந்த 5 இடங்கள் - தமிழ்நாட்டின் ஒரு இடமும் இதில் இருக்காம் -
கோடை வெப்பத்தை சமாளிக்க இந்த வாஸ்து ரகசியங்கள் தெரியுமா? வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுங்கள்! -
நார்த் இந்தியன் ஸ்டைல் தக்காளி சிக்கன் கிரேவி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, வேற லெவலில் இருக்கும் -
வார ராசிபலன் (26 April 2026 - 02 May 2026) - இந்த வாரம் இந்த 4 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த வாரமாக இருக்கும் -
இன்றைய ராசிபலன் 26 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஜாலியான நாளாக இருக்குமாம் -
மே மாதத்தில் நடக்கும் கிரக பெயர்ச்சிகளால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வெயில் கொடுமை! திருமணத்தை மாற்ற முடியாமல் தவிக்கிறீர்களா? இந்த 5 டிப்ஸ் உங்கள் விழாவை காப்பாற்றும்! -
1/4 கப் தனியா இருந்தா இந்த வித்தியாசமான சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமாக இருக்கும் -
வட இந்தியத் திருமணங்கள்: சுட்டெரிக்கும் வெயிலில் சிக்கித் தவிக்கும் கொண்டாட்டங்கள் - இதோ சில அதிரடி மாற்றங்கள்! -
இந்த 5 உணவுகள் உங்கள் உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்தி சங்கடமாக உணர வைக்குமாம் - பார்த்து சாப்பிடுங்க
நாள்பட்ட ஒற்றை தலைவலியா? இந்த யோகாவை பண்ணுங்க -தினம் ஒரு யோகா
சேது பந்த சர்வாங்காசனா :
"சேது" என்றால் பாலம், "பந்த" என்றால் இணைப்பு, "சர்வம்" என்றால் அனைத்து "அங்க" என்றால் உறுப்பு. இந்த யோகாவில் அனைத்து உறுப்புகளும் பயன் பெறுகிறது. இந்த யோகா பாலம் போன்ற நிலையில் செய்யப்படுவதால், சேது பந்த சர்வாங்காசனா என்று கூறப்படுகிறது.
நீங்கள் அடிக்கடி தலைவலியால் அவதிப்படுகிறீரென்றால், அல்லது ஒற்றை தலைவலி உங்களுக்கு இருக்கிறதென்றால் இந்த யோகாவை செய்து பாருங்கள். குணம் கிடைக்கும்.

யோகா எல்லா வித நோய்களையும் குணப்படுத்தும். வியாதி வர விடாமலும் தடுக்கிறது. ஆகவே யோகாவை கற்றுக் கொண்டால் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியத்துடன் வாழலாம். இன்று இந்த யோகாவை கற்றுக் கொள்ளுங்கள்.
செய்முறை :
முதலில் தரையில் கால் நீட்டிப் படுங்கள். பின்னர் கால்களை மடித்து பாதங்களை தரையில் ஊன்றிய நிலையில் வைக்க வேண்டும்.
உள்ளங்கைகளை தரையோடு சேர்த்து வையுங்கள். கைகளை வளைக்காமல் நேராக வைக்க வேண்டும்.
இப்போது இடுப்பை மேலே உயர்த்துங்கள். மெல்ல முதுகையும் உயர்த்துங்கள்.
இடுப்பினை கைகளால் தாங்கும்படி பிடித்துக் கொள்ளுங்கள்.இப்போது தலை, கழுத்து, தோள் பட்டை வரைக்குமே தரையில் இருக்க வேண்டும். ஆழ்ந்து மூச்சை இழுத்து விடுங்கள். மூச்சை விடும்போது மீண்டும் தரையில் உடலை கிடத்துங்கள்.
இப்போது ரிலாக்ஸ் ஆகுங்கள். இது போல் ஐந்து முறை செய்யலாம்.
குறிப்பு : இதனை கர்ப்பிணிகள், முதுகுவலி, கழுத்து வலி உள்ளவரகள் செய்யக் கூடாது
பலன்கள் :
இந்த யோகாவை செய்யும்போது மனமும் உடலும் ஒரே நிலையில் இருக்கும். முதுகிற்கும், இடுப்பிற்கும் வலிமையை தரும். இரத்த ஓட்டம் தலைக்கும் அதைகமாக பாயும். இதனால் மூளை சுறுசுறுப்பாக இருக்கும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications

