Latest Updates
-
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்...
நாள்பட்ட ஒற்றை தலைவலியா? இந்த யோகாவை பண்ணுங்க -தினம் ஒரு யோகா
சேது பந்த சர்வாங்காசனா :
"சேது" என்றால் பாலம், "பந்த" என்றால் இணைப்பு, "சர்வம்" என்றால் அனைத்து "அங்க" என்றால் உறுப்பு. இந்த யோகாவில் அனைத்து உறுப்புகளும் பயன் பெறுகிறது. இந்த யோகா பாலம் போன்ற நிலையில் செய்யப்படுவதால், சேது பந்த சர்வாங்காசனா என்று கூறப்படுகிறது.
நீங்கள் அடிக்கடி தலைவலியால் அவதிப்படுகிறீரென்றால், அல்லது ஒற்றை தலைவலி உங்களுக்கு இருக்கிறதென்றால் இந்த யோகாவை செய்து பாருங்கள். குணம் கிடைக்கும்.

யோகா எல்லா வித நோய்களையும் குணப்படுத்தும். வியாதி வர விடாமலும் தடுக்கிறது. ஆகவே யோகாவை கற்றுக் கொண்டால் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியத்துடன் வாழலாம். இன்று இந்த யோகாவை கற்றுக் கொள்ளுங்கள்.
செய்முறை :
முதலில் தரையில் கால் நீட்டிப் படுங்கள். பின்னர் கால்களை மடித்து பாதங்களை தரையில் ஊன்றிய நிலையில் வைக்க வேண்டும்.
உள்ளங்கைகளை தரையோடு சேர்த்து வையுங்கள். கைகளை வளைக்காமல் நேராக வைக்க வேண்டும்.
இப்போது இடுப்பை மேலே உயர்த்துங்கள். மெல்ல முதுகையும் உயர்த்துங்கள்.
இடுப்பினை கைகளால் தாங்கும்படி பிடித்துக் கொள்ளுங்கள்.இப்போது தலை, கழுத்து, தோள் பட்டை வரைக்குமே தரையில் இருக்க வேண்டும். ஆழ்ந்து மூச்சை இழுத்து விடுங்கள். மூச்சை விடும்போது மீண்டும் தரையில் உடலை கிடத்துங்கள்.
இப்போது ரிலாக்ஸ் ஆகுங்கள். இது போல் ஐந்து முறை செய்யலாம்.
குறிப்பு : இதனை கர்ப்பிணிகள், முதுகுவலி, கழுத்து வலி உள்ளவரகள் செய்யக் கூடாது
பலன்கள் :
இந்த யோகாவை செய்யும்போது மனமும் உடலும் ஒரே நிலையில் இருக்கும். முதுகிற்கும், இடுப்பிற்கும் வலிமையை தரும். இரத்த ஓட்டம் தலைக்கும் அதைகமாக பாயும். இதனால் மூளை சுறுசுறுப்பாக இருக்கும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications













